Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ராஜவன்னியன்,

ரெக்கார்ட் டான்ஸ் என்றால் என்ன? நான் யூரிபில் பார்த்த்போது அணும் பொண்ணும் பாடலுக்கு ஆடுகின்றார்கள்
ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா?

நிச்சயம் உண்டு. கோவில் திருவிழாக்களில், பொருட்காட்சிகளில் என ரெக்கார்ட் டான்ஸ் சில இடங்களில் உண்டு.

மூடிய அறைக்குள் நடக்கும் பணக்கார காபெரேயும், திறந்த வெளியில் நடக்கும் ஏழைகளுக்கான ரெக்கார்ட் டான்ஸும் ஏறக்குறைய ஒன்றுதான்.

அரசினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல, ஆனால் ஊர் பெருசுகளாலும் விடலைகளாலும் ஏற்பாடு செய்யப்படுபவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இந்தத் திரியில் மட்டும் ஏதோ கோளாறு இருக்கு.நிர்வாத்தினர் பார்த்தால் சரி செய்து விடுவார்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

ஆம் நான் இணைத்து இந்த பாடல் இல்லை மாறி வருகிறது ... குறைந்த பட்ஷம் படம் என்றாலும் 
அதுவாக இருக்கிறது.

யூடுப் காரர்கள்தான் எதோ கோல்மால் செய்கிறார்களா?
உண்ணுமே புரியவில்லை ...

நீங்கள் இணைக்கும் சில பாடல்களும் இங்கு பார்க்க முடிவதில்லை 
இவங்கள் அமெரிக்க காரங்கள்தான் எதோ தில்லு முல்லு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

7 minutes ago, suvy said:

நான் நினைக்கிறன் இந்தத் திரியில் மட்டும் ஏதோ கோளாறு இருக்கு.நிர்வாத்தினர் பார்த்தால் சரி செய்து விடுவார்கள்.....!  

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

இது புதிதாக இருக்கிறது ......
இணைத்து வேலை செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை 
வேறு பாடல் வருவது என்பது விந்தையாக இருக்கிறது 

5 minutes ago, குமாரசாமி said:

ஒரு சோலியும் வேண்டாம் நான் நாளைக்கு வாறன். கடிவாங்கினது போதும்.

Vadivelu Funny Comedy Scene | Kovil | Tamil Film | Part 9 on Make ...

கொரோனா சோலிக்கை இவிங்க வேற...😂

கொரோனா கூட வந்து போராடி தோற்றால்தான் மரணம் 
இந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்ச்மாக கொல்கிறது ...
எப்படித்தான் உங்களுக்கு தூக்கம் வருமோ தெரியவில்லை 
சென்று முயற்சி செய்து பாருங்கள் முடியாவிட்டால் .. எழுந்து வாருங்கள் 
நாங்கள் இங்குதான் இருப்போம் 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா? 

தமிழ்நாட்டில் என்ன, இலங்கையிலும் நடக்கிறது. நீங்கள் சிறுவயதில் கோவிக்களில் சின்னமேளம் பார்த்திருந்தால், இந்தக் கேள்வி தோன்றியிருக்காது. சின்னமேளக்காரி உடுப்புமாத்திற அறை யன்னலில் நீக்கல் இருக்கா, ஓட்டை இருக்கா என்றுபார்க்கப்போய் ஐயர் துரத்த.... நாங்கள் கல்லு முள்ளுக் குத்துவதையும் பொருட்படுத்தாது விழுந்தடித்து ஓடியது ஒரு காலம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

 

மருதரின் இணைப்பில் இருந்த பாடல் பாடகர் முகேஷ் அவர்கள் ZEE டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற  'மரணத்தை எண்ணி கலங்கிடும்' என்றபாடலுடன் தொடங்கி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலுடன் முடிந்தது. அதற்குத்தான் எனது கருத்து??

இப்போதும் நான் இணைத்த கருத்தில் அதே பாடல்தான் இருக்கிறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

மருதரின் இணைப்பில் இருந்த பாடல் பாடகர் முகேஷ் அவர்கள் ZEE டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற  'மரணத்தை எண்ணி கலங்கிடும்' என்றபாடலுடன் தொடங்கி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலுடன் முடிந்தது. அதற்குத்தான் எனது கருத்து??

இப்போதும் நான் இணைத்த கருத்தில் அதே பாடல்தான் இருக்கிறது??

உங்களில் பிழை இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பாடல்கள் மாறி மாறி காட்டுகின்றது என தெரிவித்திருக்கின்றார்கள்.
உங்கள் மனதை நோகடித்திருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடசாலைக்கு போகும் போது  ஒரு தேவாலயத்தை கடந்து தான் போக வேண்டும். 
(அட இவனும் பள்ளிக்கூடம் போனவனாம் எண்டு நக்கல் பார்வை பார்க்கிறவையள் மன்னிக்கணும்)
நான் வேறு மதத்தவனாய் இருந்தாலும் தேவாலயத்தை கடந்து செல்லும் போது வேண்டுதல் இருக்கோ இல்லையோ என்னையறியாமல் நெஞ்சில் கைவைத்து நடந்த படியே பிரார்த்திப்பது வழமை.தேவாலயத்தில் வருடாந்த பெருவிழா மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளில் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவார்கள். அதில் ஈஸ்டர் பண்டிகையும் களைகட்டும்.அந்த நேரத்தில் ஒலிபரப்பாகும் இந்தப்பாடல் என் மனதில் ஆழப்பதிந்த பாடல்.
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த தேவாலயம்,எனக்கு ரியூசன் தந்த ரீச்சர், எனது கிறிஸ்தவ நண்பர்கள்,எனது கொசப்பு கூட்டம் எல்லாம் நினைவலைகளாக வந்து போகும்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் ... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Picture1.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு.

எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும்.

பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!

 

ராஜவன்னியன் எனக்கு நெடுநாள் சந்தேகம் தமிழக உறவுகள்தான் இதை அதிகம் பாவிப்பார்கள் ஈழத்தில் இது இல்லை.

டூரிங் டாக்கீஸ் என்றால் என்ன? சினிமா தியேட்டருக்கும் டூரிங் டாக்கீசுக்கும் என்ன வித்தியாசம் உறவே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

 

 

4 hours ago, ராசவன்னியன் said:

மனைவி, துணைவி, இணைவி..கிழவி.. etc.

 

நாதமுனி மனசுல கருணாநிதி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நிச்சயம் உண்டு. கோவில் திருவிழாக்களில், பொருட்காட்சிகளில் என ரெக்கார்ட் டான்ஸ் சில இடங்களில் உண்டு.

மூடிய அறைக்குள் நடக்கும் பணக்கார காபெரேயும், திறந்த வெளியில் நடக்கும் ஏழைகளுக்கான ரெக்கார்ட் டான்ஸும் ஏறக்குறைய ஒன்றுதான்.

அரசினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல, ஆனால் ஊர் பெருசுகளாலும் விடலைகளாலும் ஏற்பாடு செய்யப்படுபவை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில வருவது போல...

3 minutes ago, குமாரசாமி said:

நாதமுனி மனசுல கருணாநிதி😂

தமிழ் நாட்டில இந்த தமிழ் அறிஞர்கள், வருமானம் இல்லாத நிலையில் ஒதுங்குவது அரசியல் மேடைகளில்.

துரதிஷடம் பிடித்த நிலை தான். பழைய காலத்தில் அரசர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இந்தக்காலத்தில் இப்படி தான்.

யாரோ ஒரு தமிழ் அறிஞர், எதிர்க்கட்சி  மேடையில். முழங்கியது.

அவரு கட்டிக்க வேட்டி இல்லாமல் ஒத்த வேட்டியோட வாழ்ந்தார். இவரு (கருணாநிதி) கழட்டிப் போட்ட வேட்டி எந்த வீட்டில என்று தெரியாமல் வாழ்ந்தார். 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               Picture1.jpg

'பையன் அரசாங்க வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான், நிலையான உத்தியோகம்..' இன்னபிற காரணங்களினால் வரன்கள் வர.., வீட்டில் பெற்றோரிடமிருந்து அழுத்தங்கள்..

"இல்லை ஐயா,  நான் பொறியியலில் மேற்படிப்பு படிக்கப் போகிறேன், திருமணம் இப்போது வேண்டாம்..!" என தள்ளிப்போட..

மறுபடியும்  "கல்யாணத்துக்கு அப்புறம் நீ மேற்கொண்டு படிச்சிக்கோ,எங்களுக்கு வயசாகிப் போச்சுப்பா.." பெற்றோரிடமிருந்து நச்சரிப்புகள்..!

(திருமணமான 10 வருடங்களுக்கு பின்னர்தான் பட்ட மேற்படிப்பை படித்து முடித்தேன்.)

ம்ம்.. திருமணம் நிச்சயமானது.. நிச்சய தாம்பூலத்திற்கும் திருமண நாளுக்கும் இடையே 3 மாதங்கள் இடைவெளி..

யப்பப்பா, என்ன இனிமையான காத்திருப்பு நாட்கள் அவை..? வார்த்தைகளில் வடிக்க இயலாது அந்த உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும்..! emotlove2.gif

அப்பொழுது இனம்புரியாத ஏக்கத்துடன் காத்திருக்கும்போது ஆறுதல் கொடுத்த சில பாடல்களில் இது முக்கியமானது..! 

கண்கள் செய்த பாவம் உன்னை

கண்டும் காணாதேங்குதே.. கண்டும் காணாதேங்குதே..

பாய் விரித்துக் கப்பல் செல்ல

பாவி நெஞ்சம் துடிக்குதே.. பாவி நெஞ்சம் துடிக்குதே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 16:28, குமாரசாமி said:

ஈழத்தமிழரின்  1977 க்கு பின்னரான அரசியல் வாழ்க்கையில் முக்கிய புள்ளிகளான இந்த மூவரை தவிர வேறு எவரும் இப்போது உயிரோடு இல்லை.77ம் ஆண்டு தேர்தல் காலங்களில் இவர்களது வீர வசனங்களும் பல திரைப்பட பாடல்களும் வெற்றிக்கனிக்கு முக்கிய இடம் வகித்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குறிப்பிட்ட சினிமா பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது.

1977 தேர்தல் தமிழீழ வாக்கெடுப்பாக நடக்க நானோ சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து அதற்கு எதிரான பிரச்சாரங்களையும் கருத்தரங்குகளையும்  வைக்க வாலாக பின்னால் அலைந்தேன்.அந்த நேரங்களிலேயே சிலசில இடங்களில் கூட்டம் வைப்பதற்கு மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும்.
அப்படியான இடங்களுக்கு ஒவ்வொரு இடங்களிலிருந்தும் சிறியசிறிய தற்காப்பு ஆயுதங்களுடன் போவோம்.
எல்லாம் ஒரு வயதுக் கோளாறு.

On 7/5/2020 at 22:44, ராசவன்னியன் said:

விடலை பருவத்தில், எனக்கு வயதில் மூத்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது வீதியிலும், பள்ளி மைதானத்திலும் சக மாணவிகளை சீண்டி வழிவதை பார்த்திருக்கிறேன்.  அரசல் புரசலாக புரிந்தாலும், 'ஏன் இப்படி..?' என மனதில் அப்பொழுது தெளிவிருக்காது.

ஏன் சார் மாணவிகள் மாணவர்களை சீண்டியதைக் காணவில்லையோ?

45 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம்.. திருமணம் நிச்சயமானது.. நிச்சய தாம்பூலத்திற்கும் திருமண நாளுக்கும் இடையே 3 மாதங்கள் இடைவெளி..

நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன்லை ஒரு காலத்திலை ருவிஸ்ட் சீசன் எண்டு அல்லோல கல்லோலப்பட்டது எல்லாருக்கும் ஞாபகத்திலை இருக்குமெண்டு நினைக்கிறன். இதை முதல் முதலாய் சிலோன்லை அறிமுகப்படுத்தினது ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள்தான். கொழும்பிலை 1978 எண்டு நினைக்கிறன். உலகசாதனைக்காக தொடர்ந்து ருவிஸ்ட் நடனமாடினவர்.ஆனால் அது உலக சாதனையாக பதியப்படேல்லை எண்டு நினைக்கிறன்.ஆனால் சிலோனிலை அது உலக சாதனைதான். :cool:
அதுக்குப்பிறகு எங்கடை யாழ்ப்பாண குஞ்சுகளும் தாங்களும் ருவிஸ்ட் நடனமாடி உலக சாதனை நிகழ்த்துவம் எண்டு ஊருக்கு ஒருத்தராய் வெளிக்கிட்டினம். கொடிகாமத்திலையும் ஒராள் ஆடி  சிலோன் சாதனை நிகழ்த்தினவர். அதுக்குப்பிறகு அவருக்கு பெரிய பாராட்டு விழாவெல்லாம் அமர்க்களமாய் நடந்தது. காசுமாலை சைக்கிள் அது இது எண்டு எக்கச்சக்கமான பரிசுப்பொருள் எல்லாம் கிடைச்சது, சாவகச்சேரி நீதவான் உட்பட பெரிய பெரிய ஜென்ரில்மேன்மார் எல்லாம் பாராட்டு விழாவுக்கு வந்து அமர்க்களப்படுத்தியிருந்தினம்.😁

இந்த பிரமாண்டத்தை பார்த்திட்டு சாவகச்சேரியிலையும் இரண்டுபேர் வைரவர் கோயிலுக்கு முன்னாலை பரீட்சார்த்த ருவிஸ்ட் டான்ஸ் ஆட வெளிக்கிட்டினம். இரண்டு நாளுக்கு மேலை ஒராளாலை ஏலாமல் போச்சுது.இதாலை இரண்டு பேருக்கும் கொழுவல் வந்துட்டுது.கடைசியிலை கைகலப்பிலை தொடங்கி காது கடிபட்டு மூக்கு கடிபட்டு விலக்கு பிடிச்சு பரீட்சார்த்த டான்ஸ் விடியப்பறம் 4மணிக்கு இனிதே நிறைவேறியதாம்.🤣

அந்த காலத்திலை ருவிஸ்ட் நடனம் எண்டால் இந்த பாட்டுத்தான்   தூள் கிளப்பும்.🕺🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 03:50, ராசவன்னியன் said:


டூரிங் டாக்கீஸின் (Touring Talkies)

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

 

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

மிகவும் தெளிவான விளத்தம். நேரமொதுக்கி இப்படித் தெளிவாக எழுதியமைக்கு நன்றி. எனக்கும் "டூரிங் டாக்கீஸ்" என்றால் என்ன என்ற வினா இருந்தது. வினாத் தொடுத்த பாலபத்திரருக்கும் நன்றி. மீண்டும் ராசவன்னியனாருக்கு நன்றி.

திரியை  தொடக்கி எரியவிட்டிருக்கும்  குமாரசாமி ஐயாவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

...ஆனால் அந்த திகதிக்கு அந்த கிளி வரவேயில்லை.குறிப்பிட்ட ஊருக்கு போய் பார்த்தேன்.வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.விசாரிக்க பயமாக இருந்தது. அப்படியே என்ரை நிலைமையும் தலைகிழாகிட்டுது.....கிளி எங்கிருந்தாலும் வாழ்க.

மனதுக்கு கவலையாக இருந்தாலும் வாழ்க்கை எனும் பாதையில் இதுவும் ஒரு சம்பவம் என கடந்து போகின்றேன்.அந்த படத்தில் எந்த பாடலைக்கேட்டாலும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த  உணர்சிகள் வரும்..

 

ann.jpg

 

சிங்கன் செம 'மைனர் குஞ்சா' இருந்திருப்பார் போலிருக்கே..! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழி க்க முடியாத இசையும் வானொலி யை

காதலித்த நாட்களும் மீண்டும் வருமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் காலங்களை மீட்டித்தருவதோடு பல்வேறு நினைவுகளையும் கொண்டுவருவது. இலங்கை வானொலியில் "பொங்கும் பூம்புனல்" காலை உற்சாகத்தைக் கரைபுரண்டோட வைப்பது. நிகழ்வுக்கான இசை. உரையாடும் உறசாகம் என்று ஒரு தனித்தவமாக இருக்கும். கள உறவுகள் பலரது அனுபவமாகவும் இருக்கும். எனக்கு இந்தப் பாடலை யூரூப்பில் கேட்கும்போது நினைவுக்குவருவது பொங்கும் பூம்புனல். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

...

அந்த காலத்திலை ருவிஸ்ட் நடனம் எண்டால் இந்த பாட்டுத்தான்   தூள் கிளப்பும்.🕺🏾

 

எனது கல்லூரி நாட்களில் போனியம்(BoneyM, அபா(AbbA), டினா சார்ல்ஸ்(Tina Charles), டோன்ன சம்மர்(Donna Summer) போன்ற பாடகர்களின் பாடல்கள் மிகப் பிரபலம். விடுதிகளில் மாலையில் இவர்களின் பாடல்கள் அடிக்கடி ஒலிப்பரப்பப்படும்.

கு.சா..,

பழைய கல்லூரி நினைவுகளை தூண்டிவிட்டீர்கள், இனி எனது கணணியில் நான் சேமித்து வைத்துள்ள அக்கால பாடல்களுடன் தான் இன்றைய இரவு தூக்கம்..! :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ராஜவன்னியன் எனக்கு நெடுநாள் சந்தேகம் தமிழக உறவுகள்தான் இதை அதிகம் பாவிப்பார்கள் ஈழத்தில் இது இல்லை.

டூரிங் டாக்கீஸ் என்றால் என்ன? சினிமா தியேட்டருக்கும் டூரிங் டாக்கீசுக்கும் என்ன வித்தியாசம் உறவே??

 

டூரிங் டாக்கீஸின் (Touring Talkies) அமைப்புகள்..

53433064.jpg  

m_id_381242_maharashtra_touring_talkies.jpg?w=660

53433066.jpg

GaneshThiraiArangam_650_new2.jpg

GaneshThiraiArangam_750Main.jpg?itok=YGEOOAcx

1_16a0822e7e2.1878989_3436951993_16a0822e7e2_medium.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, இப்படித்தான் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து ரசித்தேன்..!

அது ஒரு கனாக் காலம், இனி திரும்ப வராது..🙄

boy.jpg

 

டூரிங் டாக்கீஸ் (Touring Talkies) என்பது ஊருக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளுக்கு அப்பால், காலி நிலத்தில் மூங்கில் கம்புகளும், பனைமர தூண்களும், தென்னங் கீற்று கிடுகுகளின் அடுக்குகளால் வேயப்பட்டு உருவாக்கப்படும் கொட்டகையாகும். இக்கொட்டகையை சுற்றி தெப்பை தட்டிகளால் வேலி அமைத்திருப்பார்கள்.

உள்ளே உட்கார்ந்து படம் பார்க்க,

'தரை டிக்கட்' என்பது ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்தது 'பெஞ்ச் டிக்கட்' என்பது மரத்தால் ஆன நீளமான இருக்கைகள் உள்ள பகுதியாகும்.

அடுத்தது 'சேர் டிக்கட்' என்பது முதல் வகுப்பு மாதிரி, உயரமாக மேடை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

கொட்டகை அமைக்கப்பட்ட பின், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் வந்து சோதனை செய்துவிட்டு, இயங்க அனுமதி அளிப்பார்கள்

இதற்கு 'டூரிங் டாக்கீஸ்' என பெயர் வரக் காரணம், இந்த கொட்டகை அமைப்பிற்கு ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளிக்கும். அடுத்து இயங்க வேண்டுமெனில், கொட்டகையை முற்றிலும் பிரித்துவிட்டு புது மூங்கில், கிடுகுகளைக்கொண்டு வேய்ந்து அனுமதிக்கு மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும்.

மழையிலும், வெயிலிலும் தொடர்ந்து இயங்குவதால் இதன் ஆயுட்காலம் கம்மி. மேலும் எளிதில் தீ பிடித்து பலத்த உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. ஆகவே இவற்றை ஊருக்கு வெளியே தள்ளி திறந்த வெளியில் தான் அமைக்க அரசு அனுமதி அளிக்கும்.

பின்னர் காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சி பெற்று, மூங்கில், கிடுகளுக்கு பதில், நீளமான சவுக்கு கட்டைகள், மற்றும் மெல்லிய ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைக் கொண்டு 'டூரிங் டாக்கீஸ்'கள் அமைக்கப்பட்டன.

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

Omaha-Theater.jpg

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரிலையெல்லாம் மினி தியேட்டர் எண்டு இருந்தது எல்லாருக்கும் தெரியுமெண்டு நினைக்கிறன்.மட்டக்களப்பிலை கொஞ்சம் வடிவாய் கொட்டில் போட்டு உறுப்பாய் வைச்சிருந்தவையள். ஆனால் என்ரை ஊரிலை சூடடிக்கிற படங்கை  மறைப்பாய் கட்டிப்போட்டு சினிமா காட்சியள் களைகட்டும். அதிலை ஒரு  ஒரு கிளுகிளுப்பை சொல்லுறன்.
சிவந்தமண் படம் பாக்க போனனான்.காசு எவ்வளவெண்டு ஞாபகமில்லை.ஒரு புல்லு முள்ளு காணிக்கை படங்கை சுத்தி கட்டிப்போட்டு( வின்சர் தியேட்டராம்) வெறும் நிலைத்திலை எல்லாரையும் இருத்திப்போட்டு படம் காட்ட வெளிக்கிட்டினம்.சனம் கும்பல்லா கோவிந்தாவாய் கலந்து கட்டி இருந்ததாலை எனக்கு படம் பாக்கிறதிலை பெரிசாய் ஈடுபாடு வரேல்லை. ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️
 

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

 

Link to comment
Share on other sites

சிறு வயதில் என் குளப்படி ஊர்பிரசித்தம். அம்மாவிடம் வாங்கும் பூவரசம்தடியின் அடியிலிருந்து என்னைக் காப்பாற்றும் பெரியம்மாவின் மகள் தங்கமக்காவிடம் எனக்கு அத்தனை பாசம், அவருக்கும் எனமேல் கொள்ளை பிரியம். அன்று அவருக்குக் கல்யாணம், பொன்னுக்கிராம் பெட்டியில்தான் பாட்டு, என்னையும் பெட்டியில் தட்டுப்போடவிட்டதால் ஒரே கொண்டாட்டம், கொண்டாட்டத்திலும் ஒரு தட்டில் வந்தபாட்டு அந்த வயதிலும் என் மனதை உருக்கி உருகவைத்தது ஏன்னென்று தெரியவில்லை. அப்பாடலை இன்று நினைத்தாலும் பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

இடையிடையே சோகம் கலந்து ஒலிக்கும் ஜிக்கியின் குரல். இப்படி ஒரு பாடல் இனி வர சந்தர்ப்பம் கிடையாது. ஜிக்கியம்மா உணர்ந்து உருகிப் பாடி இருப்பார். இந்தப் பாடல் எனது மூத்த சகோதரியின் காலத்தில் வந்தது. அவர் இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி Paanch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார் மாணவிகள் மாணவர்களை சீண்டியதைக் காணவில்லையோ..?

இல்லை, அப்போதைய வயதில் நான் கண்டதில்லை, ஈழப்பிரியன்.

நகரங்களில் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் கிராமங்களில் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருந்த காலம் அது.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

..நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

ஏன் ஈழத்தில் எழுத்து எழுதுதல் முடிந்த மறுநாளே திருமணம் வைத்துவிடுவார்களா..? 😉

திருமணம் நிச்சயமாகி காத்திருந்த 3 மாதங்களில், நானும் ஆர்வ மிகுதியில், வருங்கால மனைவிக்கு போன் போட்டும், ரயிலேறி நேரில் சென்று பார்க்க முயற்சித்தும் ஒன்றும் கைகூடவில்லை. இன்றும் புன்முறுவலுடன் இரைமீட்கும் இனிமையான நினைவுகள் அவை..

நட்சத்திர பொருத்தங்களின்படி கிடைத்த முகூர்த்த நாளால் காத்திருப்பு மூன்று மாதங்களாயிற்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.