Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.15 இல் இருந்து 8 மணிவரை பொங்கும் பூம் புனல் நேரத்தில் நேயர் விருப்பம் எத்தனையும் முத்துக்கள்.தேநீர்கடைகளில் பெரிய சத்தத்துடன் போட்டிருப்பார்கள்.சில பாடல்கள் வரும் போது அந்த இடங்களில் மெதுவாக சைக்கிள் ஓட்டிய காலங்கள்.

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

பரிமளம் அண்ணிக்காக கேட்ட பாட்டுப் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mark.jpg

70 களில் கல்லூரியில் படிக்கும்பொழுது "ஸ்டெப் கட்" என தலை அலங்காரம் மிகப் பிரபலம்.. நானும் அப்பொழுது காதை பாதி மூடும்படி ஸ்டெப் கட் வைத்திருந்தேன். (இப்பொழுது பின்பக்கம் லேசா வழுக்கை விழுந்துவிட்டது என்பது எனக்கு கவலையான விசயம்..! vil-triste2.gif )

சலூனுக்கு சென்று இருக்கையில் உட்கார்ந்து முதன்முதலாக "ஸ்டெப் கட் வெட்டிவிடுங்கள்.." என சொல்லும்போது உள்ளே இந்தப்பாடல் மெல்லிதாக ஒலித்தது..!

அந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சிறு துளியாக இருக்கலாம், ஆனால் இன்னமும் மறக்க முடியாத வண்ண நினைவுகளில் ஒன்று.. vil-rainbow.gif

 

 

Link to comment
Share on other sites

 ஒவ்வொரு தடவையும் இந்த பாடலை கேட்கும் போது எனது அக்காவும் அத்தானும் என்னை முதன் முதலாக யாழில் இருக்கும் ஒரு திரையரங்குகிற்கு கூட்டிப்போன ஞாபகம் வரும். நாலோ ஐந்தோ வயதில் பார்த்திருந்தாலும் இன்னும் என் நினைவில் பசுமையாக நிறைந்திருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல் மிக அழகான வரிகள் கொண்ட அருமையான பாடல். ஆனால் நான் இதை ஒருநாளும் கேட்க விரும்புவதும் இல்லை.கேட்பதும் இல்லை...... 1960 ல் வந்த படம் புதியபாதை.ஜெமினி  சாவித்திரி நடித்தது.மிக மிக சோகமான படம்.பழைய வின்ட்சர் (பின்பு அது லிடோ)தியேட்டரில் வந்தது....!

எனது சின்னம்மாவுக்கு திருமணம் நடந்து முதன்முதலாக இந்தப் படத்துக்குத்தான் என்னையும் கூட்டிக்கொண்டு  போனார்கள்.சரியாக இந்தப்பாட்டும் படமும் போலவே அவருடைய வாழ்க்கை அழிந்து போய் விட்டது.அப்போது நான் சிறுவன் என்றாலும் என்னால் இந்தப் படத்தையும் பாட்டையும் மறக்கவே முடியவில்லை.நினைத்தாலே கண்கலங்கும்.பின் அவ திருமணமும் செய்யவில்லை.அம்மாம்மாவுடன் இருந்து என்னைத்தான் வளர்த்து வந்தா.சென்ற ஆண்டு சென்று பார்த்து விட்டு வந்தேன்......!

இந்தப் பக்கத்தைப் பார்த்ததும் ஏனோ உடனே இதுதான் நினைவுக்கு வந்தது.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

உண்மைதான் சிறித்தம்பி.நானும் களவாய் படம் பாத்து அடிவாங்கினது கொஞ்சம் இல்லை.
ஒருக்கால் மாமியார் வீடு படம் பார்க்க வின்சர் தியேட்டருக்கு போனனான். அப்ப ஊர் பொடியன் என்னை கண்டுட்டான்.அப்பவும் நான் அவனிட்டை கெஞ்சி மண்டாடி வீட்டை சொல்லிப்போடாதை எண்டு சொல்லி தேத்தண்ணியும் கடலை வடையும் வாங்கிக்குடுத்தனான்.
 அப்பிடியிருந்தும் அவன் முதல் வேலையாய் செய்த வேலை வீட்டை போய் அண்ணரிட்டை மாமியர்வீட்டுக்கு நான் போனதை சொன்னது தான்.அதுக்கு பிறகு பூவரசம் கேட்டியாலை விழுந்த பூசை இருக்கே எழுத வார்த்தைகள் இல்லை.நான் குளறினது அஞ்சாறு வீடு தள்ளி கேட்டிருக்கும். இந்தபாட்டு இல்லாட்டி மாமியார்வீடு  எண்ட சொல்லை கேட்டால் அந்த நன்றி கெட்ட நாயின்ரை ஞாபகம் தான் வரும்.தேத்தண்ணியும் வடையும் வாங்கிக்குடுத்தும் நன்றி விசுவாசம் இல்லாத பன்னாடைய நினைச்சால்...🤬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்வில் சீட்டு பிடிப்பவர்களையும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் பார்க்கும் போதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல், பணத்தோட்டம் படத்தில் வரும்,

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்

வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்

மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்

மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நவரத்திரி பூசைக்கு நாங்கள் சிறு வயதில் நாடகம் எழுதி நடிப்பது வழக்கம். ஏதிர்பார்த்தேன் இளங்கிளியை என்னும் பாடலுக்கு நானும் எனது நண்பனும் (பொண் வேடம்) ஆட வேண்டும்.  ஒரு கட்டத்தில் அவனை தூக்கி ஆட வேண்டும், அவனோ என்னைவிட பாரம் கூட, இந்த பாட்டை கேட்கும் பொழுது , ஊர் கூடி சந்தோஷமாக கொண்டாடிய தினங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


என்னதான் நடக்கும் நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே........


யாரை நம்பி நான் பிறேந்தேன் போங்கடா போங்க.....

இந்த இருபாடல்களை கேட்கும் பொழுது என் அப்பாவின் நினைவுகள் தான் வரும், நானும் இப்படால்களை அடிக்கடி வாயில் முணுமுணுப்பதுட்டு.

அப்பா தோட்ட வேலைகள் முடித்தபின் கள்ளடித்துவிட்டுதான் வருவார், அம்மா என்னைதான் அப்பாவுடன் வயல் கிணத்திற்கு அனுப்புவா குளிக்க, நான் கிணத்தில் அள்ளி கொடுக்க அப்பா வாங்கி குளிப்பார், அப்ப இந்த இருப்பாடல்களும் தான் அவர் அதிகம் பாடுவதுண்டு.. அப்பா இல்லாவிட்டலும் இப்பவும் அந்த நினைவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரிலையெல்லாம் மினி தியேட்டர் எண்டு இருந்தது எல்லாருக்கும் தெரியுமெண்டு நினைக்கிறன்.மட்டக்களப்பிலை கொஞ்சம் வடிவாய் கொட்டில் போட்டு உறுப்பாய் வைச்சிருந்தவையள். ஆனால் என்ரை ஊரிலை சூடடிக்கிற படங்கை  மறைப்பாய் கட்டிப்போட்டு சினிமா காட்சியள் களைகட்டும். அதிலை ஒரு  ஒரு கிளுகிளுப்பை சொல்லுறன்.
சிவந்தமண் படம் பாக்க போனனான்.காசு எவ்வளவெண்டு ஞாபகமில்லை.ஒரு புல்லு முள்ளு காணிக்கை படங்கை சுத்தி கட்டிப்போட்டு( வின்சர் தியேட்டராம்) வெறும் நிலைத்திலை எல்லாரையும் இருத்திப்போட்டு படம் காட்ட வெளிக்கிட்டினம்.சனம் கும்பல்லா கோவிந்தாவாய் கலந்து கட்டி இருந்ததாலை எனக்கு படம் பாக்கிறதிலை பெரிசாய் ஈடுபாடு வரேல்லை. ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️
 

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நினைவு மீட்டல் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஊரில் இருக்கும் போது சர்வசாரணமாகவே வாழ்ந்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மத வெறுப்புகள் ஏதுமின்றி அவரவர் மதம் சார்ந்து வாழ்ந்திருப்பார்கள். தமது மத பண்டிகைகளை வரவேற்று சந்தோசத்துடன் கொண்டாடியிருப்பார்கள். நான் ஊரில் இருந்த வரைக்கும் மத துவேசிகளை நான் காணவேயில்லை. 
அதே போல் இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 
இப்போதும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்கும் போது அந்த முஸ்லீம் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

....ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 6:11 AM, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

ஏங்க இந்த மாதிரி..? பெரியவர், விட்டுவிடலாம்.. sgentil.gif

திரியை கொழுத்திப்போட்டுவிட்டு ஆள் ஓய்வெடுக்கப் போய்விட்டார்..fati1.gif

உடல்நிலை சரியில்லையோ, என்னவோ..!  dubitatif.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தபொழுது, தமிழகத்தில் உணர்வுபூர்வமாக ஈழத் தமிழர்களின் வரலாற்றையும், அவர்களின் துயரத்தையும் அறியத் தூண்டி, அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல்.

விருப்பமான பாடல்களில், இதுவும் ஒன்று..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 11:05 PM, குமாரசாமி said:

இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 

இலங்கை  தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் காலையில் சமய நிகழ்சசியில் அடிக்கடி ஹனிபாவின் பாடலைக் கேட்கலாம். ‘ஈச்சை மரத்தின் இன்பச் சோலையிலே...’, ‘பாத்திமா வாழ்ந்த கதை உனக்குத் தெரியுமா’ என்ற பாடல்களும் அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்கள் 

அவரின் குரலில் எனக்கும் மயக்கம் உண்டு. ‘

Link to comment
Share on other sites

சிறு வயதில் என் குளப்படி ஊர்பிரசித்தம். அம்மாவிடம் வாங்கும் பூவரசம்தடியின் அடியிலிருந்து என்னைக் காப்பாற்றும் பெரியம்மாவின் மகள் தங்கமக்காவிடம் எனக்கு அத்தனை பாசம், அவருக்கும் எனமேல் கொள்ளை பிரியம். அன்று அவருக்குக் கல்யாணம், பொன்னுக்கிராம் பெட்டியில்தான் பாட்டு, என்னையும் பெட்டியில் தட்டுப்போடவிட்டதால் ஒரே கொண்டாட்டம், கொண்டாட்டத்திலும் ஒரு தட்டில் வந்தபாட்டு அந்த வயதிலும் என் மனதை உருக்கி உருகவைத்தது ஏன்னென்று தெரியவில்லை. அப்பாடலை இன்று நினைத்தாலும் பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தாத்தா /
ந‌ல்ல‌ திரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

இடையிடையே சோகம் கலந்து ஒலிக்கும் ஜிக்கியின் குரல். இப்படி ஒரு பாடல் இனி வர சந்தர்ப்பம் கிடையாது. ஜிக்கியம்மா உணர்ந்து உருகிப் பாடி இருப்பார். இந்தப் பாடல் எனது மூத்த சகோதரியின் காலத்தில் வந்தது. அவர் இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி Paanch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு காலத்திலை தென்னிந்திய திரைப்பட பாட்டுக்களும் கிந்தி பாடல்களும் இலங்கை வானொலியை அடிமையாக்கி வைத்திருந்த காலத்தில் பொப்பிசை பாடல்கள் எல்லோரையும் மிரள வைத்தது.
எல்லா தேனீர்க்கடைகளிலும் எல்லா கொண்டாட்டங்களிலும் பொப்பிசை பாடல்கள் அதிகாரம் பண்ணியது.துரையப்பா விளையாட்டரங்கில் பொப்பிசை நிகழ்ச்சி பிரமாண்டம்மாக நடந்தது. ஏ.ஈ மனோகரன்,அமுதன் அண்ணாமலை  உட்பட பல பிரபல்யங்கள் பங்குபற்றினர்.அதை இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி......

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 
இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

 

 

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை கேட்கும் போது ஊரில் சிறுவயதில் குடும்பத்துடன்,  ஊரார், நண்பர்களுடன் விதம் விதமாக சாப்பிட்ட நினைவுதான் வரும் .   இந்த பாட்டிற்கே இந்த படத்தை தமிழ் & மழையாளத்தில் பல தடவை பார்த்துவிட்டேன்

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.