Jump to content

அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்


Recommended Posts

(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது.

இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும்.

எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டை பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெளிவுபடுத்துகையில்,

' கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய இலங்கை தற்போது 3A கட்டத்தில் காணப்படுகிறது.

3A கட்டம் எனப்படுவது வீடுகளினுள் கூட்டுத் தொற்று நிலையாகும். இவ்வாறு இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கை இதிலிருந்து அடுத்த கட்டமான 3B கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு தற்போதுள்ளதைவிடவும் கடுமையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 3B எனும் கட்டம் கிராமம் அல்லது நகரத்தினுள் குழுக்களாக தொற்று நிலை இனங்காணுதலாகும்.

எனவே தற்போது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியேற்படும். மாறாக முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இதற்கு முதல் கட்டத்திற்குச் சென்று அதன் பின்னர் நோயாளர்கள் அற்ற கட்டத்திற்கும் செல்ல முடியும். இதில் 4 ஆவது கட்டம் மிகப் பாரதூரமானதாகும். சமூகத்திளுள் பரவும் நிலையே 4 ஆவது கட்டமாகும்.

80 வீதத்துக்கும் அதிகமாக சமூக இடைவெளியைப் பேணும் நாடுகளே வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவதில் முழுமையான பயனை அடைகின்றன. சமூக இடைவெளி என்பது பாதுகாப்பிற்கான பிரதான வழிமுறையாகும்.' என்று குறிப்பிட்டார்.

இதே வேளை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயங்கள் தொடர்பில் மேலும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தற்போது செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கத்தக்க அனைத்து தீவிர நடவடிக்கைகள் மற்றும் உக்கிரமான தீர்வுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கத்துவ நாடுகள் அனைத்திற்கும் தீவிரமாக எச்சரித்துள்ளது. இலங்கையிலும் அவ்வாறு முன்னெடுக்க வேண்டிய படிமுறைகள் பல உள்ளன.

கொரோனா வைரஸானது மிக வேகமாகப் பரவும் அதே வேளை திட்டவட்டமான எதிர் நவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து ஒரு நபரிடமிருந்து ஒரு மாத்திற்குள் இன்னும் 406 பேருக்கு பரவக் கூடிய அபாயமுள்ளதாகும்.

நோயாளர்களில் 20 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்படமாட்டா. இன்னும் 60 வீதமனோருக்கு மிகவும் எளிய நோய் அறிகுறிகளே வெளிப்படும். அதனால் உண்மையாகவே கொரோனா தொற்றுக்கு இலக்காகி நோயை வேறு நபர்களுக்கு பரப்பும் நோயாளர்களில் 80 வீதமானோர் மேலோட்டமான பார்வைக்கு நோயாளர்களாக இனங்காண முடியாத வகையைச் சேர்ந்தவர்களாவர். அதனை மறைந்திருந்து நோயைப் பரப்பும் வகையாக அடையாளப்படுத்தலாம்.

கொரோனாவை இனங்காணக்கூடிய PCR பரிசோதனையின் உணர் திறன் 70 வீதமாகும். அதாவது இப் பரிசோதனைக்கு உட்படுவோரில் 30 வீதமானோர் உண்மையாக நோயைக் கொண்டிருந்த போதும் நோயாளர்களாக இனங்காணப்படமாட்டார்கள். அவர்களால் ஏனையோருக்கு கொரோனா வைரஸ் பரவக் கூடியதால் இந்நிலை அபாயகரமானதாகும்.

மேலும் கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - ; 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டை பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது.

அதே போல் சிறு எண்ணிக்கையான மக்கள் பொறுப்பின்றிய விதத்தில் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அம் மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பினும் அவர்களால் விளையக் கூடிய பாதகம் மிகப் பெரியதாகும்.

இவ்வாறான காரணிகளை வைத்து இலங்கையினுள் கொரோனா வைரஸிற்கு முகங்கொடுக்கும் வழிமுறையானது கீழ் குறிப்பிடப்படும் வகையில் அமைய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 3 பிரதான காரணிகள் முன்மொழியப்படுகின்றன :

தனிநபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் (ஆகக் குறைந்தது 80 வீதமான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் ) , தீவிரமான விதத்தில் நோயாளர்களை இனங்காணுதல் ( பரிசோதனை வசதிகளை மேம்படுத்தல் ) மற்றும் நோய் சிகிச்சைக்கௌ பிரத்தியேகமாக மருத்துவமனைகளை ஏற்பாடு செய்தல் என்பனவே எமது முன்மொழிவுகளாகும்.

https://www.virakesari.lk/article/79132

Link to comment
Share on other sites

பெரும்பாலான நாடுகளில் ஆட்சியாளர்கள் தமது பொருளாதார நலனை முன்னிலைப் படுத்தியே கொரோனா வைரசைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகளே சீனாவில் வைரஸ் தோன்றியவுடனேயே சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். வைத்திய விஞ்ஞான நிபுணர்கள் ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கை விடுத்தபோதிலும் அசட்டையாக இருந்துள்ளன. நிலமை கையை மீறிச் செல்லும்போதுதான் காட்டமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் இதற்கான காரணங்களாக உள்ளன. இந்த நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் தாமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்துடன் ஏற்படப் போகும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தம்மை எப்படிப் பாதுகாப்பது என்று நீண்டகால நோக்கில் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2020 at 11:40 AM, இணையவன் said:

பெரும்பாலான நாடுகளில் ஆட்சியாளர்கள் தமது பொருளாதார நலனை முன்னிலைப் படுத்தியே கொரோனா வைரசைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகளே சீனாவில் வைரஸ் தோன்றியவுடனேயே சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். வைத்திய விஞ்ஞான நிபுணர்கள் ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கை விடுத்தபோதிலும் அசட்டையாக இருந்துள்ளன. நிலமை கையை மீறிச் செல்லும்போதுதான் காட்டமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் இதற்கான காரணங்களாக உள்ளன. இந்த நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் தாமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்துடன் ஏற்படப் போகும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தம்மை எப்படிப் பாதுகாப்பது என்று நீண்டகால நோக்கில் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

மிகக் சரியான... கருத்து, இணையவன். 
எமக்கு முன், கண்ணுக்கு தெரியாத ஆபத்து ஒன்று,  வந்து கொண்டிருக்கின்றது.. 
என்பதை அறியாமல்... பலரும்,  தவறு செய்து விட்டார்கள். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

மிகக் சரியான... கருத்து, இணையவன். 
எமக்கு முன், கண்ணுக்கு தெரியாத ஆபத்து ஒன்று,  வந்து கொண்டிருக்கின்றது.. 
என்பதை அறியாமல்... பலரும்,  தவறு செய்து விட்டார்கள். 😢

முக்கியமாய் டொனால்ட் ரம்ப் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.