Jump to content

உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!


Recommended Posts

உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!

 

 

     by : Litharsan

America.jpg

கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை மிகவும் இரகசியமானது என்பதால் முழு விவரங்கள் தெரியவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரச அதிகாரிகளே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

America-China.jpg

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வொஷிங்ரனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அது தவறான செய்தி என பதிலளித்த ட்ரம்ப், சீனா அளித்துள்ள தகவல்கள் உண்மை தானா என்பது யாருக்கு தெரியும் என்றார்.

மேலும் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடிமறைக்கவே முயன்றதாகவும், அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவுடன் நல்லுறவு நீடிக்கும் போதிலும், கொரோனா விடயத்தில் சீனா நம்பத்தகுந்த நாடு அல்ல எனவும் இழைத்துவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உலக-நாடுகளை-ஏமாற்றியுள்ள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது? டிரம்ப் கேள்வி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப் போர் வலுத்து வருகிறது. சீனா தரப்பில் சொல்லப்படும் மரண எண்ணிக்கையை நம்ப முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ், வூஹான் வைரஸ்' எனக் சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தினார். இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனா, 'அமெரிக்க ராணுவம் தான், கொரோனா வைரசை சீனாவில் பரப்பியது' எனக்கூறியது.
 


latest tamil news


 


'கொரோனா வைரசால், தங்கள் நாட்டில், 82,361 பேர் பாதிக்கப்பட்டனர். 3,316 பேர் உயிரிழந்தனர்' என, சீனா கூறியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை, 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

 

 

latest tamil news


 


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பென் சாசே, 'சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற தகவல் மிகத் தவறானது. சீனா கொரோனா உயிரிழப்பு குறித்து பொய் சொல்லியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை ஏற்கும் வகையில், அமெரிக்காவின் 'கொரோனா வைரஸ் டாஸ்க்' படையைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா பிர்க்ஸ், 'சீனா முக்கியமான தகவல்களையும் உண்மை நிலையையும் மறைத்ததால், சீனாவில் கொரோனா பரவியபோது, அதை ஒரு பிரச்னையாக மருத்துவ உலகம் பார்த்தது. ஆனால், இவ்வளவு பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை' என, சீனா மீது குற்றம் சுமத்தினார்.


 

latest tamil news


 

 

இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்து, அந்நாட்டு அரசு சொல்லும் எண்ணிக்கையை எப்படி நம்புவது. அவர்கள் சொல்லும் கணக்கு மிகவும் குறைவாக உள்ளது.
அமெரிக்கா சீனாவுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் நான் நெருக்கமாகவே உள்ளேன். அதற்காக, சீனாவின் பொய்களை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


 

'கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே, கொரோனா வைரசை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியும்' என, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க, மற்ற நாடுகளை குறை சொல்லுவதிலும், எச்சரிக்கை விடுப்பதிலும் கவனம் செலுத்துவது, அபத்தமாக உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2514002

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம் என்பது வெட்கங்கெட்ட குற்றச்சாட்டு: சீனா ஆவேசம்

கோப்புப் படம்.
 

கடந்த டிசம்பரில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வேகமாகப் பரவியுள்ளது, ஆனால் ஜனவரி 16ம் தேதி வரை பலிகள் எண்ணிக்கை இல்லை என்று கூறி வந்ததோடு மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் அபாயகரமான வைரஸ் என்ற உண்மையையும் மறைத்து உலக நாடுகளுக்கு சீனா பெரிய துரோகம் இழைத்து விட்டது என்று உளவுத்துறை தகவல்களை வைத்து அமெரிக்கா சீனாவைக் கடுமையாகச் சாடியது.

மேலும் சீனா கூறும் பலி எண்ணிக்கை பொய்யானது என்றும் அதற்கு மேல்தான் அங்கு பலிகள் இருக்கும் எனவும் ட்ரம்ப் முதற்கொண்டு அனைத்து அரசியல்வாதிகளும் கடுமையாகச் சாடினர்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன்யிங் ஹுவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “சீனா மிகவும் வெளிப்படையாக உரிய நேரத்தில் கரோனா தகவல்களை உலகுக்கு அளித்தது.

பன்னாட்டு பொதுச்சுகாதார பாதுகாப்பு குறித்து உலகச் சுகாதார அமைப்பும், கொள்ளை நோய், தொற்று நோய் நிபுணர்களும்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் அல்ல, ஏனெனில் இவர்கள் இயல்பாகவே பொய்யர்கள். பொய்கூறியே பழக்கப்பட்டவர்கள்.

உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவரே சீனா மீதான இத்தகையக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சீனா கரோனா மீது மக்கள் நலன்களுக்காக விரைவு கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக அளவில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தகவல்களை அவ்வப்போது அளித்துக் கொண்டுதான் இருந்தது.

அமெரிக்கா திண்டாடுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொள்கிறோம் அதன் சுகாதார அதிகாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்கிறோம், அமெரிக்க மக்களின் கடினமான நிலைக்காக உண்மையில் வருந்துகிறோம்.

இதனையடுத்து மனிதாபிமான உணர்வில் சீனா எங்களால் முடிந்த உதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கவே தயாராக உள்ளது.

எனவே கரோனாவுக்கு எதிரான போரில் பொறுப்பாகச் செயலாற்ற வேண்டிய நேரமே தவிர குற்றம்குறை காண்பதில் நேரத்தை அமெரிக்கா செலவிடுதல் கூடாது. அரசியலுக்கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் முக்கியம். பொதுமக்கள் சுகாதார விவகாரத்தை அறமற்ற முறையிலும் வெட்கங்கெட்ட முறையிலும் அரசியலாக்கக் கூடாது. இது அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் கண்டனங்களையும் ஈர்த்து விடும்” என்றார்.

https://www.hindutamil.in/news/world/547664-china-refutes-u-s-officials-accusations-of-concealing-extent-of-virus-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசொன்றை தான் அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக கடந்த ஆண்டு வடகொரிய தலைவர் சொல்லியிருந்தார் அதையும் இத்தருணத்தில் இங்கே நினைவுகூர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vanangaamudi said:

உலகம் மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசொன்றை தான் அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக கடந்த ஆண்டு வடகொரிய தலைவர் சொல்லியிருந்தார் அதையும் இத்தருணத்தில் இங்கே நினைவுகூர வேண்டும்.

அதுக்காக ப்ரைஸ்சாக  வைரஸ்சா .......!   🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ப்பை மூக்க‌ன் ப‌ச்சையாய் பொய் சொல்லுகிறான் /

உண‌வை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌ நாடு சீனா / போலி அரிசி போலி முட்டை போலி இழை குழை / 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.