Jump to content

ஈரான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்- ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!


Recommended Posts

ஈரான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்- ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!

 

 

   by : Litharsan

Donald-Trump.jpg

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஒருவேளை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், ஈரான் அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கில் கடந்த மாதம் அமெரிக்க இராணுவமும், ஈரான் ஆதரவு தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். இம்மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு மறுநாள் ஹிஸ்புல்லா முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது அமெரிக்க இராணுவமும் தாக்குதல் நடத்தியிருந்தது.

இதேவேளை, கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலைமனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானால் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் இலக்குவைக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஈரான்-மிகப்பெரிய-விலையைக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை எதிர்க்காமல் ஈரானுக்கு எச்சரிக்கை: சர்ச்சைக்குள்ளான ட்ரம்ப்

வாஷிங்டன்: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் குறைந்தபாடில்லை.


 

latest tamil news


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2018ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்ததைக் கைவிட்டதுடன் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தார். தொடர்ந்து அமெரிக்கப் படைகளும் ஈராக்கில் குவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், பாக்தாத்தில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தி, ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொன்றது. இதனால் இரு நாடுகளிடையான மோதல் உச்சத்தை அடைந்தது.


latest tamil news


இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

Upon information and belief, Iran or its proxies are planning a sneak attack on U.S. troops and/or assets in Iraq. If this happens, Iran will pay a very heavy price, indeed!

 
 
 
டுவிட்டரில், 'ஈரானும், அவர்களுக்கு ஆதரவான படைகளும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் ஈராக்கின் சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி நடந்தால், ஈரான் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்' எனப் பதிவிட்டார்.

மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ''நாங்கள் ஈரானுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விரோதத்துடன் செயல்பட்டால், இதுவரை வருத்தபடாத அளவுக்கு அவர்கள் வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்' எனக் கடுமையாக எச்சரித்தார்.

latest tamil news


கொரோனா வைரஸ் தாக்குதலில் ஈரானும் தற்போது நிலைகுலைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமலும், பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாட்டாலும் பிற நாடுகளிடம் ஈரான் உதவி கோரி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஈரானை எச்சரித்துள்ளது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை அழித்தொழிக்க முடியும்' என்ற சூழலில், அமெரிக்காவின் விரோதப் போக்கு, கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் கோமாளியிலும் கோமாளி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

டிரம்ப் கோமாளியிலும் கோமாளி  

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் பேசுகிறார் 
அமெரிக்க மக்கள்தான் கோமாளிகளாக இருக்கிறார்கள் 
கோமாளிகளுக்கு  தேவையான ஊக்க மாத்திரைகளித்தான் 
அவர் தன பேச்சுக்கள் மூலம் நாளுக்கு நாள் கொடுக்கிறார்.

தாலிபானையே அடிக்க வழியில்லை 
பேச்சுவார்த்தை நடக்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் பேசுகிறார் 
அமெரிக்க மக்கள்தான் கோமாளிகளாக இருக்கிறார்கள் 
கோமாளிகளுக்கு  தேவையான ஊக்க மாத்திரைகளித்தான் 
அவர் தன பேச்சுக்கள் மூலம் நாளுக்கு நாள் கொடுக்கிறார்.

தாலிபானையே அடிக்க வழியில்லை 
பேச்சுவார்த்தை நடக்குது 

தான் ஒருத்தரோடையும் அடிபட மாட்டன். பிரச்சனைகளை எல்லாரோடையும் பேசி தீர்ப்பன் எண்டு தானே சொல்லி லெக்சனிலை வெண்டு வந்தவர்..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தான் ஒருத்தரோடையும் அடிபட மாட்டன். பிரச்சனைகளை எல்லாரோடையும் பேசி தீர்ப்பன் எண்டு தானே சொல்லி லெக்சனிலை வெண்டு வந்தவர்..😂

இல்லை அவ்வாறு அவர் சொல்லவதில்லை 
அவருடைய ஆதரவாளர்களுக்கு அப்படி சொன்னாலும் பிடிக்காது 
அவர்களும் தமிழர்களைப்போலத்தான் .... எதுவும் விளக்கமாக இருந்தால் 
அவர்களுக்கு பிடிக்காது ..குழப்பமாக இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இல்லை அவ்வாறு அவர் சொல்லவதில்லை 
அவருடைய ஆதரவாளர்களுக்கு அப்படி சொன்னாலும் பிடிக்காது 
அவர்களும் தமிழர்களைப்போலத்தான் .... எதுவும் விளக்கமாக இருந்தால் 
அவர்களுக்கு பிடிக்காது ..குழப்பமாக இருக்கவேண்டும். 

இப்ப என்ன ட்ரம்பர் அடுத்த முறையும் வருவாரோ இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறையும் வருவார் என்றுதான் நினைக்கிறன் 
எதிர்க்கடசியில் எந்த மாற்றமும் இல்லை கிளரிக்கு பதிலாக இன்னொரு கிளறியை 
விட்டிருக்கிறார்கள் ....... ஏற்கனவே இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.