Jump to content

கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு

எம். காசிநாதன்   / 2020 மார்ச் 31 

நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது.  

மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.   

முத‌ற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது.   

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற்றியது. ‘உயிர்ப் பயம்’ மக்களை வீட்டுக்குள் இருக்க வைத்தது என்றாலும், பிரதமரின் வெறும் வேண்டுகோளுக்கே வீட்டுக்குள் அமர்ந்து, வெற்றி கரமாக ஒத்துழைத்தது வரலாறாக மாறியிருக்கிறது.   

இதுவரை, இந்தியாவில் இருந்த பிரதமர்கள் விடுத்த வேண்டுகோளை, இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இந்திய மக்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்று கேட்டால், அதில் முதலிடத்தில் இருப்பது மோடியின் ‘சுய ஊரடங்கு’ வேண்டுகோள்தான்.   

மக்களின் இந்த ஒத்துழைப்பை விமர்சிக்க, அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக, ஒரு சிலரின் மீறல்களை எடுத்துக் கொண்டார்களே தவிர, ஒட்டு மொத்த இந்தியாவும் பிரதமர் மோடியின் பின்னால் நின்றது. டிசெம்பர் மாதத்திலேயே, சீனாவில் கொரோனா வைரஸ் வந்து விட்டது. ஜனவரி மாதத்தில் அது, இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் மூன்று பேரைத்தாக்கி விட்டது. அப்படி இருக்கும்போது, ஏன் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு, மார்ச் 22 ஆம் திகதி வரை காத்திருந்தார்கள் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டது.   

இருந்தபோதிலும், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில், ‘மிக முன்பாகவே’ கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது இன்னமும் கூட, விடை தெரியாத கேள்விதான். இவ்வளவு நெருக்கடிகளுக்குப் பிறகு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையே வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியர்கள், முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை. விமான நிலையத்தில் சோதனைக்கே மறுத்தவர்கள் ஏராளம். அதில், சிரேஷ்ட அதிகாரிகளின் பிள்ளைகள் கூட, கொரோனா சோதனைக்கு மறுத்த செய்திகள் வெளிவந்தன.   

ஆகவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன் கூட்டியே நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதெல்லாம் எளிமையான கேள்விகளாக இருக்கிறதே தவிர, ஆட்சியில் இருப்பவர்கள் அது மாதிரி முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு பரிசீலனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது.   

ஏனென்றால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரமாக அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவித்து விட்டது என்ற பழியை, ஏற்கெனவே மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் சுமந்து கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸிலும் அப்படியொரு பழியை எடுத்துக் கொள்ள அரசாங்கம் தயங்கியிருக்கலாம்.   

ஆனால், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில், இப்போது ஏப்ரல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.  

‘தனிமைப்படுத்துதல்’ என்ற ஒன்றே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் என்பதால், ‘சமூகத் தொற்று’ கட்டத்தை அடையாத இந்தியா, இது போன்ற ஊரடங்கு மூலம் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும் என்று பிரதமரும் மற்ற மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்தது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.  

ஊரடங்கு பிறப்பித்த கையோடு 1.70 இலட்சம் கோடி, நிவாரண நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அதில், ஊரடங்குச் சட்டத்தை சமாளிப்பதற்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு நிதியுதவி அறிவித்திருக்கிறார்.  

இன்னொரு பக்கம், இந்திய ரிசர்வ் வங்கி, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது, வருமான இழப்பு ஏற்படும் என்பதால், வங்கிக் கடன் தவணைகளை மூன்று மாதம் கட்டத் தேவையில்லை என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. 24 மணி நேரமும் அத்தியாவசியப் பொருள்கள், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.   மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வீடியோ கலந்துரையாடல்கள் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.   

ஆகவே, ஒரு புறம் ‘சுகாதாரப் பேரிடர்’; இன்னொரு பக்கம், ‘பொருளாதாரப் பேரிடர்’. இந்த இரண்டையும் சம அளவில் கையாண்டு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் வேகமாகச் செயற்பட்டு வருகிறது.   

இந்தக் கட்டுப்பாட்டின் பலன் தற்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் எண்ணிக்கை, மள மளவென என்று உயராமல், மிகவும் மெல்லவே நகருகிறது. 21 நாள் ஊரடங்கு முடிவில் உலக நாடுகளோ, உலக சுகாதார நிறுவனமோ எதிர்பார்த்த பாதிப்பு ஏதும் இந்தியாவில் நடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகின்றன.  

மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, மாநில முதலமைச்சர்கள் மிகவும் உத்வேகத்துடன் செயற்படுகிறார்கள் என்பதே கள நிலைவரம்.  கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், நாட்டில் உள்ள மற்ற முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடியாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நோய்க்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதில், கேரள அரசாங்கம் மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறது.   அதேபோல், பாதிப்படைந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கைதூக்கி விடுவதற்கும் உரிய சலுகைகளை அறிவித்து, மத்திய அரசாங்கத்திடம் மட்டும், புதிதாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறார்.   

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நான்கு மாதச் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.   

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காலை ஆறு மணிக்கெல்லாம் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கொரோனா வைரஸ் தடுப்பு அறிவுரைகளைக் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார்.   

‘தனிமைப்படுத்தலைப் பொருட்படுத்தாமல் வெளியே வந்தால், கண்டதும் சுட உத்தரவிடுவேன்’ என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்து, மக்களை ஒருமுகப்படுத்தி, கொரோனா வைரஸின் ‘சமூகத் தொற்றை’த் தடுக்க முனைகிறார்.   சமயல் பொருள்களை, வீட்டுக்கே கொண்டு சேர்த்து, மக்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்கிறார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். தனிமைப்படுத்துதலை முதலில் அமல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக அதிகம் பாதிப்புக்குள்ளான மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செயல்படுகிறார்.   

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘அனைத்து அரிசி ‘ரேசன்’ அட்டை தாரர்களுக்கும் 1,000 ரூபாய்’,‘அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்’, ‘நடை வியாபாரிகளுக்கு 2,000 ரூபாய்’ என்று நிதியுதவித் திட்டத்தை அறிவித்துச் செயல்படுகிறார். 

ஆகவே, பிரதமரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், பா.ஜ.க முதலமைச்சர்ளும் எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களும் ஒத்துழைப்புக் கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

தங்கது பங்குக்கு எதிர்க்கட்சிகளும் போதிய ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, ஈடுகட்ட நிதியுதவி, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று நாட்டில் முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆவார். இதை, காங்கிரஸ் தலைவர்கள் பின் தொடர்ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். 

அதேபோல், தமிழக அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை எடுத்த எடுப்பில், “வரவேற்கிறேன்” என்று அறிவித்து, “தமிழகச் சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள்” என்று குரல் கொடுத்தவரும் ஸ்டாலின் தான். ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த ஒத்துவைப்பு எதிர்க்கட்சிகளிடமிருந்தும் ஆளுகின்ற முதலமைச்சருக்கு கிடைத்துள்ளது என்பது, இந்தப் பேரிடரின் மிகப்பெரிய அனுபவம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட, முதலில் பிரதமர் மோடியைக் குறை கூறியவர்கள், பிறகு, “உங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறோம்” என்று கூறியதைக் காண முடிந்தது.  குறிப்பாக, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமருக்குக் கடிதம் எழுதி, அந்த ஆதரவை நல்கினார். நிவாரணத் திட்டங்களையும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ராஜ்ய சபை எம்.பி சீத்தாராம் எச்சூரி, “45 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் கதி என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார். அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ‘1.70 இலட்சம் கோடி’ நிவாரண அறிவிப்பு வெளியானது.

பிரதமர் முதல் முதலமைச்சர் வரை, ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை, அனைவரும் ஒரே முகமாக நின்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ ஊழியர்கள் பணி போற்றத்தக்கது. ஊரடங்குச் சட்டத்தை மீறும் ஒரு சிலரைக் கூடப் பிடித்து வைத்து, நூதன தண்டனைகளை வழங்கிப் பொலிஸார் ஊரடங்குச் சட்டதைதைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறார்கள்.

தனிமைப்படுத்துதல், சமூக விலக்கு என்ற மக்களின் மகத்தான ஒத்துழைப்பு மூலம், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை, இந்தியா தனிமைப்படுத்தி விடும் என்ற நம்பிக்கை, 21 நாள் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அதிகரித்திருக்கிறது.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸைத்-தடுக்க-இந்திய-மக்களின்-ஒத்துழைப்பு/91-247714

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்
மருத்துவர்களை தாக்கிய கும்பல்
 
இந்தூர்:
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்கின்றனர். 
 
ஒரு சில இடங்களில் மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், அவர்களை தாக்கவும் செய்கின்றனர். பரிசோதனைக்கு வரும்படி அறிவுறுத்தினாலும், நோயின் தீவிரத்தை அறியாமல் அலட்சியமாக இருப்பதுடன், அரசாங்கத்தை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  
 
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் தாட் பட் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். 3 டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் என 5 பேர் அங்குள்ள மக்களிடம், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் குறித்து கேட்டறிந்தனர்.
 
இது அங்கிருந்தவர்களை ஆத்திரமடையச் செய்தது. டாக்டர்கள் மீது பெரிய கற்கள் மற்றும் கம்புகளை வீசி தாக்கி விரட்டியடித்தனர். வன்முறைக் கும்பலிடம் இருந்து சுகாதாரக் குழுவினரை போலீசார் மீட்டனர். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைக் கும்பல் தாக்கியதில் 2 பெண் டாக்டர்கள் பலத்த காயமடைந்தனர். 
 
டாக்டர்களை குறுகலான தெருவில் அந்த கும்பல் துரத்தி தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களின் கடமையை அவமதிப்பதுடன், வைரஸ் பெருந்தொற்று பரவ வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது. 
 
மத்திய பிரதேசத்தில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.