Jump to content

கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும்

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 31

உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய்.   

‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல.   

2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘சார்ஸ்’ நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது.   

2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘மேர்ஸ்’ நோயை ஏற்படுத்தி, மத்திய கிழக்கையும் உலகையும் பதறவைத்தது.   

தற்போது 2020இல், ஒரு வகையான கொரோனா வைரஸ், சீனாவின் வூஹானில் தொடங்கி, உலகெங்கும் பரவி, மனிதனின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.  

இந்த நிமிடத்தில், இலங்கையும் இந்தியாவும் உலகின் பல்வேறு நாடுகளும், தம்முடைய மக்களை, வீட்டுக்குள்ளேயே தடுத்து வைத்திருக்கிறார்கள்; ஊரடங்கி, உலகமே முடங்கிப் போய் இருக்கிறது.   

சீனாவின் வூஹானில் தொடங்கிய நோய், அங்கு அடங்கி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், அது பரவிய இத்தாலி,ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள், சீனாவை விட அதிகமாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, ஏனைய நாடுகளிலும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, பரிசோதனைகள் நடத்தப்பட நடத்தப்பட, நாளாந்தம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.   

தினமும் கேள்விப்படும், தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், ‘கொவிட்-19’ பலிகொண்ட உயிர்களின் எண்ணிக்கையும், உலகத்தை ஒருபுறம் பதறவைத்தாலும், மறுபுறத்தில், திடீரென முடக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைச்சுழல், உலகெங்கும் வாழும் மக்களை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.   

குறிப்பாக, பொருளாதார வசதி, சுகாதார வசதி வாய்ப்புகள் குறைந்த பெரும்பான்மையான மக்கள், இந்தத் திடீர் முடக்கத்தால், மீளமுடியாத பாதாளப் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.  

சில தினங்களுக்கு முன்னர், டெல்லியிலிருந்து பெருந்தொகையான மக்கள், கால்நடையாக வௌியேறிச் சென்ற காட்சியின் படங்கள், மனதில் ஆற்றொனா வலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

உலக வரலாற்றில், பெருந்தொகையான மக்கள், ஓரிடத்திலிருந்து வௌியேறிய சம்பவங்கள் அனைத்துமே, பெருந்துயரான சம்பவங்களாகவே இருந்துள்ளன. 

“எல்லோரும் வீட்டுக்குள் இருங்கள்” என்று நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல், அரசாங்க இயந்திரம் வரை, மக்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில், இவர்களைத் தவறும் சொல்ல முடியாது. கொள்ளை நோய் தொற்றாது தடுக்க, மனித நடமாட்டத்தையும் மனிதர்கள் பெருமளவில் புழங்குவதையும் தடுப்பது, மிக அடிப்படையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஆனால், உணவின்றி மனிதன் எப்படி வாழ்வான்? இன்றைய பொருளாதார, சமூகக் கட்டமைப்பின் கீழ், பணமின்றி உணவு எப்படிக் கிடைக்கும்? தொழிலின்றி எப்படிப் பணம் கிடைக்கும்? பணமும் பொருளும், உணவும் உள்ளவர்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதில் உடனடியான பெருஞ்சவால்கள் எதுவுமில்லை. 

அடுத்த வேளை, உணவுக்கான அரிசியை வாங்குவதற்கு, இன்று வேலை செய்தால்தான் பணம் கிடைக்கும் என, அன்றாட உழைப்பில் வாழும் மனிதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா? 

பணம், பொருள் உள்ளவர்கள் கூட, எத்தனை நாள்தான் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? இவை, வெறும் அடிப்படையான பிரச்சினைகள் தான். இதிலிருந்து, ஒரு சங்கிலித் தொடராக, பெரும் வலைப்பின்னலாக, இந்தக் கட்டாய முடக்கம், மனித இயக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. 

பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது. பொருளாதார ஸ்தம்பிதம் என்பது, பறந்து கொண்டிருக்கும் விமானமொன்றின் இயந்திரம் நிறுத்தப்பட்டதைப் போலாகும். ஒரு குறுகிய காலத்துக்குக் காற்றில், அது மிதந்த படி கீழே வரும். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பின்னர், அது மிக வேகமாகக் கீழ்நோக்கி விரைந்து, தரையில் முட்டி மோதி வெடித்துவிடும்.  கொரோனா வைரஸின் தற்போதைய அச்சுறுத்தலுக்கும், பொருளாதார முடக்கத்தால், விரைவில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிக்கும் நடுவில், உலகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. 

உலகெங்கும், இலட்சக்கணக்கில் உயிர்களைக் காவுகொண்ட பற்பல கொள்ளை நோய்களை, வரலாற்றுக் காலம் முதல், உலகம் சந்தித்திருக்கிறது. அந்தக் கொள்ளை நோய்கள் ஏற்படுத்திய இழப்புகளிலிருந்து, மனிதன் மீண்டு வந்திருக்கிறான். அதுதான், மனித வரலாற்றின் வெற்றி. 

ஆனால், இதுபோன்ற உலகளாவிய ரீதியிலான, பாரிய கொள்ளை நோய் பாதிப்பு, நிச்சயமாக உலக இயக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும். கிட்டத்தட்ட உலகம், செயலற்று இருக்கும் நிலைக்குச் சென்று வருவதைப்போலாகும்.

ஓர் இயந்திரம், செயலற்றிருக்கும் நிலைக்குச் சென்று வரும் போது, அது விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடங்கும். ஆனால், உலகமும் மனிதர்களும், அப்படி விட்ட இடத்திலிருந்து தொடங்க முடியாது. நான்கு வாரங்கள் முடங்கிப் போன நாடு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, அந்த இடத்தை அடையவே சில பல வருடங்கள் ஆகலாம். பொருளாதாரம், ஆரோக்கியம், சமூகப் பின்னடைவைச் சரிசெய்வது, இன்றைய உலகுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. 

அதனால், கொரோனா வைரஸ் உலகுக்குப் பெரும் சவாலாக மட்டுமின்றி, உலகின் போக்கை மாற்றி அமைக்கப்போகும் திருப்புமுனையாகவும் இருக்கப் போகிறது.  

அரசியலும் அதிகாரமும்  

கொரோனா வைரஸின் தாக்கமும் பரவுகையும் அமெரிக்காவில் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருப்பதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் மருத்துவக் காப்புறுதி மய்ய சுகாதாரக் கட்டமைப்பு, சுகாதார சேவைகள் அனைவரையும் சென்றடைவதை எப்போதும் சவாலாக வைத்திருந்தது. 

மருத்துவக் காப்புறுதி இல்லாதவர்கள், சாதாரணமாகவே சிறு நோய் அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இந்தச் சுகாதாரம்சார் கலாசாரக் கட்டமைப்பு, கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக, கொரோனா வைரஸின் பரவுகை, மிகப்பாரியளவில் அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கைக் கடுமையாக அமல்ப்படுத்தும் போது, அமெரிக்கா வீட்டுக்குள் இருக்குமாறும், சமூக ஊடாட்டங்களைக் குறைக்குமாறும் அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியிருக்கிறது. 

அமெரிக்காவின் நிலை இவ்வாறு இருக்க, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக மாறியிருக்கிறது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கடுமையாகச் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஈரானின் நிலைமையும் மோசமானதாக இருக்கிறது. 

சீனாவிலிருந்து பரவியதாக அறியக்கிடைக்கும் இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து, சீனா பெருமளவு மீண்டு விட்ட நிலையில், மேற்கு மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள்  சிக்கிக்கொண்டுள்ள நிலையே ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சூழல், சர்வதேச அரசியல் இயங்கியலில், கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனச், சில எதிர்வுகூறல்களை, கேட்கக்கூடியதாக இருக்கிறது. 

மேற்குலகுடனான, சீனாவின் அதிகாரப் போட்டி என்பது, வௌிப்படையாகத் தெரியாததொன்றல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு நாடுகள், தங்கள் உற்பத்திக் கட்டமைப்பை, பொருளாதாரக் காரணங்களுக்காக சீனா நோக்கி நகர்த்தியிருந்தன. இது, சீனாவின் பொருளாதாரப் பலத்தை, கணிசமாகப் பெருக்கியதுடன், இந்த நாடுகளும், அவற்றின் பொருளாதாரமும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய சூழலையும் ஏற்படுத்தி இருந்தன. 

யுத்தம், நேரடித் தலையீடுகள் மூலம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தும் அணுகுமுறை சீனாவிடம் இல்லை. சீனா, பொருளாதார ரீதியாகவே நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்த விளைகிறது. 

பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த நாடுகளை, தனது உற்பத்திகளில் தங்கியிருக்கச் செய்கிறது; பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளைத் தனது கடன்களிலும் முதலீட்டிலும் தங்கியிருக்கச் செய்கிறது. 

ஆகவே, இந்த வகையில் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாகச் சீனா, தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுகை கூட, சீனாவுக்கு இலாபகரமானதாகவே மாறியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் நோய்ப் பரிசோதனைக்கான கருவிகளிலிருந்து, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வரை, சீனா உற்பத்தி செய்து, மேற்குலகுக்கு அவற்றை விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு, இலவசமாக அவற்றை வழங்கியும் உடனடியாகக் கடன்களை வழங்கியும் தனது செல்வாக்கை, அந்த நாடுகளில் அதிகரித்தும் வருகிறது.

கொரோனா வைரஸை, மேற்குலக நாடுகள் முறையாக எதிர்கொள்ளத் தவறும் போது, பொருளாதார ரீதியாக, மேற்குலக நாடுகள் கடுமையான பின்னடைவைச் சந்திக்கும் அதேவேளை, சீனாவின் பொருளாதார பலமும் சர்வதேச ரீதியிலான செல்வாக்கும் கணிசமாக அதிகரிக்கும். இது, 21ஆம் நூற்றாண்டின் முக்கிய திருப்பமாக அமையலாம்.  

பொருளாதாரமும் ஆரோக்கியமும்  

முடங்கி இருக்கும் பல நாடுகளின், பொருளாதாரம் மீள இயங்கத் தொடங்கும் போது, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தவர்களின் நிலைமை, கணிசமாக மோசமடைந்திருக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அன்றாட உழைப்பை நம்பி வாழும் மக்களின் நிலைமை, இன்னும் மோசமாகும். 

அமெரிக்கா போன்ற, திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையுடைய நாடுகளே, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்துள்ள நிலையில், இலங்கை போன்ற நாடுகளில் நிவாரணங்களின் தேவை மிக அதிகமாகும். 

சேவை மய்யப் பொருளாதாரமாக உருவாகிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம், மீட்சியடையப் பல ஆண்டுகள் தேவைப்படலாம். அதுவரை காலமும் மக்களுக்கு முறையான நிவாரணமும் பாதுகாப்பும் வழங்க வேண்டிய தேவை, அரசுகளுக்கு இருக்கிறது. 

இந்த விடயத்திலிருந்து அரசுகள் தவறும் போது, அது பாரதுரமான சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே தடுமாறும் பொருளாதாரத்தையும் அதைச் சில ஆண்டுகளுக்கு சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் சவாலும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்படப்போகிறது.  

மறுபுறத்தில், கொரோனா வைரஸை, அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியப் பிரச்சினையாக மட்டும் மட்டுப்படுத்தி அணுகிவிட முடியாது. பல வாரங்களாக, இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, பெருமளவான மக்கள் கூட்டம், வீட்டுச்சிறைக்குள் அடைபட்டு இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உள ஆரோக்கியப் பிரச்சினைகள், மிகப்பாரதுரமானவை. 

மேற்குலகம் இன்றளவில் கூட, உள ஆரோக்கியம் பற்றிப் பெருமளவு விழிப்புணர்வையும் உள ஆரோக்கியத் தேவைக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில், உள ஆரோக்கியம் என்பது, இன்னமும் பேசப்படாத பொருளாகவும் ‘பைத்தியங்களுக்கு’ மட்டுமானதும் என்ற அபத்தமான பொது மனநிலையைக் கொண்டதாகவுமே காணப்படுவது துரதிர்ஷ்டவசமானதே. இது, உள ஆரோக்கியப் பிரச்சினைகளை, இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்வதை, மிகக் கடினமாக்கப் போகிறது.  

நீண்டகாலத்தின் பின்னர், இனம், மதம், மொழி, நாடு கடந்து, மனிதர்கள் அனைவரினதும் இருப்புக்கு ஒரு பொதுவான சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸ் மனிதனை இந்தப் புவியிலிருந்து இல்லாதொழிக்கப் போவதில்லை; அது நிச்சயம்! 

வரலாற்றில் தான் சந்தித்த அனைத்துக் கொள்ளை நோய்களையும், மனிதன் எவ்வாறு வெற்றி கொண்டானோ, அதைப் போலவே கொரோனா வைரஸையும் வெற்றி கொள்வான். ஆனால், இந்தச் சில மாதங்கள், கொரோனா வைரஸ் தந்த தாக்கம், மனித வாழ்வைத் தனி மனித அளவிலும், நாடுகள் ரீதியாகவும் உலக அளவிலும் அடுத்த ஒரு தசாப்த காலத்துக்கேனும் பாதிக்கப்போகிறது. 

பறக்கும் கார்களைப் பற்றிய கனவைக் கொண்ட மனிதனை, அடிப்படையான உணவு,  சுகாதார வசதிகள் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கச் செய்திருக்கிறது கொரோனா வைரஸ். இயற்கை பற்றிய பிரக்ஞையும், பரவலாக உயிரூட்டம் கொண்டுள்ளது. ஒன்று மட்டும் உண்மை! கொரோனாவுக்கு முந்திய உலகம் போல, கொரோனாவுக்குப் பிந்திய உலகம் இருக்கப் போவதில்லை.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸ்-பெருந்தொற்றும்-உலகப்-பதற்றமும்/91-247716

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.