Jump to content

சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி)

இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால்  எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன்.

உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி. 

சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது.

வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது.

சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா. 

இங்கே, சற்று  கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும்.

மிக முக்கியமாக கறுக்க விடாமல், நிறம் மாறி, வாசனை வரும் போது, எண்ணெய் சேர்த்து பின்னர் வெங்காயம் முதல் ஏனைய வழக்கமான தாளித பொருட்களை சேர்த்து வதங்கி வரும் போது அசைவகாரர் எனில், றால், மாசி சேர்க்கலாம்.

இல்லாவிடில் வதங்கி வரும் போது , மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட சுரைக்காய் அல்லது முள்ளங்கி சேர்த்து, சட்டியை மூடி வேக வைக்க வேண்டும்.

வெந்ததும், பால் சேர்க்கலாம். அந்த பெண்மணி, டபுள் கிரீம் சேர்த்து இருந்தார்.

வறுத்த வெந்தய வாசனை அந்த பால் கறியினை தூக்கி நிறுத்தி இருந்தது. இன்னோரு விதமாக சொல்வதானால், வழக்கமான தாளித்ததுக்கு வறுத்த வெந்தயம் சேர்த்தல் போல எனலாம்.

முயன்று பாருங்கள். 

 

முள்ளங்கி  (Moole or Radish)

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

 

சுரைக்காய் (Bottle Gourd)

 

Sreemeenakshi Fruits. Bottle Gourd (சுரைக்காய்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையில் இதுவரை....முள்ளங்கி செய்து பார்க்கவில்லை.
அடுத்தமுறை வெந்தயம் போட்டு செய்து பார்க்க வேண்டும்.
வித்தியாசமான சமையல் குறிப்புக்கு நன்றி நாதமுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒருவித மணம் வாறபடியால் வீட்டில் யாருக்கும் விருப்பம் கிடையாது.
எப்போதாவது  பால்கறி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதில் ஒருவித மணம் வாறபடியால் வீட்டில் யாருக்கும் விருப்பம் கிடையாது.
எப்போதாவது  பால்கறி தான்.

எதனை சொல்கிறீர்கள்?

மணம், மரக்கறியிலா? வெந்தயத்திலா? றால், மாசியிலா?

மரக்கறியில் என்றால், நான் சொன்ன விதத்தில் செய்யுங்கள்.

வெந்தயத்தில் என்றால், வெந்தயத்தின் மகிமையினை சொல்லி வையுங்கள்.

றால், மாசி ஆயின் தவிர்த்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எதனை சொல்கிறீர்கள்?

மணம், மரக்கறியிலா? வெந்தயத்திலா? றால், மாசியிலா?

மரக்கறியில் என்றால், நான் சொன்ன விதத்தில் செய்யுங்கள்.

வெந்தயத்தில் என்றால், வெந்தயத்தின் மகிமையினை சொல்லி வையுங்கள்.

றால், மாசி ஆயின் தவிர்த்து விடுங்கள்.

இல்லை நாதம் நீங்கள் சொன்னது போல செய்வதில்லை.றால் மாசியும் கறிவகைக்குள் போடுவதில்லை.
வெங்காயம் மிளகாய் போட்டு அவிய வைத்து இறக்கும் போது கொஞ்சம் பசுப்பால்.
அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டிலை நீற்றுப்பூசணிக்காய் கறிமாதிரி சமைக்கிறனாங்கள். 
பால் கறியாயும் சமைக்கலாம். இல்லாட்டி கொஞ்ச மிளகாய் தூள் போட்டும் சமைக்கலாம். ஆனால் பால் கறி ரேஸ்ற் நல்லாயிருக்கும்.விலையும் குப்பை மலிவு.
மருத்துவ குணங்களும் எக்கச்சக்கமாம். சுகர் வருத்தத்துக்கும் நல்லது எண்டு கேள்விப்பட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லாயிருக்கு செய்முறை, அடுத்த முறை செய்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தையம் சீனியை குறைக்க அருமையான சாமான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.