Jump to content

முஸ்லிம்கள் கொவிட் 19 நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்


Recommended Posts

(ஆர்.யசி)

கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது.

78051292_448269296077649_871072253708599


கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய ஒன்று உடலை எரிக்க முடியும், அதேபோல் புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் கூறியுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் இலங்கையில் உயிரிழந்த இஸ்லாமிய நபர் எரிக்கப்பட்டுள்ளதானது இஸ்லாமிய மத சம்பிரதாய முறைமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் இஸ்லாமிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அதிகாரிகள் இலங்கையில் நிலைமைகளை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் சகல உடல்களையும் எரிக்கவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால நிலைமையில் எவரும் மத சடங்குகளை கருத்தில் கொள்ளாது சுகாதார ரீதியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும்.

அதுவே நாட்டு மக்களை பாதுகாக்க ஒரே வழிமுறையாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் அரச தரப்பினர் இடையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/79161

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

அவர்கள்  சொல்வதை சொல்லிவிட்டர்கள்... முசுலிம் பார்ட்டி விழுந்தும் மீசையில் மண்படவில்லை என கதை விடுகினம்..தமிழ்நாடு ,வட கிழக்கில்   நோய்க்காவிகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

இங்கே எரிப்பத புதைப்பதா என்பதல்ல விடயம். சமூகத்திற்கு, நாட்டிற்கு எது பாதுகாப்பானதோ அதனைத்தான் செய்யலாம்.  இதுவொரு கொள்ளை நோய். இதற்கு எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் இவற்றைக் கையாள்வதுதான் சரியான தெரிவாக அமையும்.🙂

முசிலும்களின் மிகவும் சுயனலமிக்க செயற்பாடு. ☹️

இல்லை சமய முறைப்படிதான் செய்யவேண்டுமென்றால், முசிலும் நோயாளரைக் கையாள்வதற்கு தாதியிலிருந்து வைத்தியர், மெளலவி நல்லடக்கம் செய்பவர்வரை எல்லாவ்ச்ற்றையும் முசிலும்களே பார்த்துக்கொள்ளட்டும் என கூறிவிட்டால் போச்சு. 

இவங்கள பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். மிகுதியை அவன் பார்த்துக் கொள்வான். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

இங்கே எரிப்பத புதைப்பதா என்பதல்ல விடயம். சமூகத்திற்கு, நாட்டிற்கு எது பாதுகாப்பானதோ அதனைத்தான் செய்யலாம்.  இதுவொரு கொள்ளை நோய். இதற்கு எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் இவற்றைக் கையாள்வதுதான் சரியான தெரிவாக அமையும்.🙂

முசிலும்களின் மிகவும் சுயனலமிக்க செயற்பாடு. ☹️

இல்லை சமய முறைப்படிதான் செய்யவேண்டுமென்றால், முசிலும் நோயாளரைக் கையாள்வதற்கு தாதியிலிருந்து வைத்தியர், மெளலவி நல்லடக்கம் செய்பவர்வரை எல்லாவ்ச்ற்றையும் முசிலும்களே பார்த்துக்கொள்ளட்டும் என கூறிவிட்டால் போச்சு. 

இவங்கள பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். மிகுதியை அவன் பார்த்துக் கொள்வான். 😀

கபிதான்.....  அருமையான கருத்து. :)

Link to comment
Share on other sites

11 hours ago, Vankalayan said:

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

வெளிநாடுகளில், சட்டம் இனம், மதம் மற்றும் அவர்கள் சார்ந்த மொழியோ, கலாச்சாரமோ சார்ந்த ஒன்றல்ல. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.