Jump to content

கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனகன்


Recommended Posts

மலையகத்திலிருந்து வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் மலையக இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

கொழும்பில் பணி நிமிர்த்தமாகத் தங்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலர் என்னிடமும் தலைவர் மனோ கணேசனிடமும் தொடர்ந்தும் உதவிகளைக் கேட்டு வருகிறார்கள்.

தலைவர் மனோ கணேசனின் ஆலோசனைப்படி, ஜனனம் அறக்கட்டளையூடாக சில உதவிகளைச் செய்து வருகின்றோம். ஆனாலும், அவை போதுமானதாக இல்லை.

கொழும்பில் தங்கியுள்ள பல இளைஞர், யுவதிகள் உணவுக்காக கஷ்டப்படுகின்றனர். அவர்களது உணவுத்தேவையை ஓரளவுதான் எங்களால் பூர்த்திசெய்ய முடிகிறது.

நிலைமை நீடிக்குமாக இருந்தால், அந்த இளைஞர், யுவதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர். ஆகையால், இவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அக்கறையெடுக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி, கொரோனா வைரஸ் தொற்று நிலை மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. இத்தகைய நிலையில் கொழும்பு போன்ற ஆபத்தான வலயத்துக்குள் மலையக இளைஞர், யுவதிகள் சிக்கியிருப்பது ஏற்புடையதல்ல.

எனவேதான், கொழும்பில் நிர்க்கதியாகியிருக்கும் மலையக சொந்தங்களை தத்தமது ஊர்களுக்கு, பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும்படியும் அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

ஊர்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுமாக இருந்தால், பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதோடு, சுயதனிமைப்படுத்தலை உறுதிப்படுத்துவதோடு, கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் உறுதிபூணவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/79150

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.