Jump to content

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்?


Recommended Posts

வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன.

பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார்.

வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. அவை... ஹென்ட்ரா, லாகோஸ், லிசா, நிபா, இப்போது கொரோனா. பல்வேறு வகையான வைரஸ்களை, எந்தவித பிரச்னையும் இன்றித் தன் உடலில் சுமந்துகொண்டிருக்க ஒரு வௌவாலால் முடியும். ஆப்பிரிக்கா, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மார்பக், நிபா மற்றும் ஹென்ட்ரா போன்ற வைரஸ்கள் அவற்றிடமிருந்து உற்பத்தியும் ஆகின்றன. இபோலா வைரஸ், அவற்றின் உடலில்தான் உருவாவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சுமந்துகொண்டிருக்கும் வைரஸ்களில், அவற்றைப் பாதிக்கக்கூடிய ஒரேயொரு வைரஸ் இருக்கிறது என்றால், அது ரேபிஸ் மட்டும்தான்.

எப்படி வௌவால்கள் இத்தனை வைரஸ்களைச் சுமந்துகொண்டு வாழ்கின்றன. இந்தத் தொற்றுநோய்களைப் பரப்பும் வைரஸ்களால், அவற்றுக்கு ஏன் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை?

நிபா வைரஸ்

 

மற்ற பாலூட்டிகளோடு ஒப்பிடுகையில், வைரஸ்களைத் தாக்குப்பிடித்து பாதிப்புகளின்றி இருக்கின்ற உடலமைப்பு வௌவால்களின் தனித்தன்மையாகும். பறக்கும் பாலூட்டிகளான இவை, நோய்களைச் சுமந்து பறக்கும் லட்சக்கணக்கான பூச்சிகளை டன் கணக்கில் சாப்பிடுகின்றன. அதேநேரம், வாழை, அவாகேடோ, மா போன்ற பழங்களின் மகரந்தச் சேர்க்கையிலும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், தொற்றுநோய்களைச் சுமந்துகொண்டு எந்தவித பாதிப்பும் இன்றி வாழக்கூடிய திறன் அவற்றுக்கு இருக்கிறது. இதனால் அவற்றைச் சாப்பிடும்போது, விலங்குச் சந்தைகளில் வளர்ப்பதற்காக விற்கும்போது, ஒரு வாழ்விடத்திலிருந்து வேறோர் வாழ்விடத்திற்கு அவை இடம் மாறும்போது வைரஸ்களையும் சுமந்தே சென்று மற்ற உயிரினங்களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்குப் பரப்புகின்றன.

வௌவால் குறித்த அறிவியல் ஆய்வுகளில், அவை எப்படி தொற்றுநோய்களைச் சுமந்துகொண்டே சுற்றுகின்றன என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவந்தது. பிற்காலத்தில் அதற்கான விடை, வௌவால்களின் எதிர்ப்புச்சக்தி குறித்த ரகசியம் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் ஒளிந்துள்ளதைக் கண்டுபிடித்தார்கள்.

டி.என்.ஏ-வை உணர்தல் (DNA sensing) என்றொரு பதம் மரபணு அறிவியலில் உண்டு. உடலிலுள்ள அணுக்கள், சில நேரங்களில் ஆங்காங்கே உடைந்து சிதறி சில துண்டுகளாகப் பிரிந்துவிடும். அவை எங்கு இருக்கக்கூடாதோ, அங்கு மிதந்துகொண்டிருந்தால் தேவையற்ற நோய்களை உருவாக்கும் பாகங்களாக மாறிவிடும். அப்படி மாறாமல் தவிர்க்க, அனைத்து பாலூட்டிகளிலுமே ஒருவித தற்காப்புச் செயல்பாடு இயற்கையாகவே இருக்கும். ஆனால், பறக்கும் பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் அந்தச் செயல்பாடு பலவீனமடைந்துவிட்டது.

அதேநேரம், அத்தகைய தொற்றுநோய்கள் உருவாகும்போது, அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அவற்றின் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின்போது, முந்தைய செயல்பாடு பலவீனமடைந்ததால் உருவாகின்ற நோய்களை எதிர்த்துச் சண்டையிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதனால், அவற்றை எதிர்க்கக்கூடிய திறனுள்ள ஆற்றலைப் பரிணாமவியல் அவற்றுக்கு வழங்கியுள்ளது.
 

இப்போது பரவிக்கொண்டிருக்கும் 2019-கொரோனா வைரஸை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால், அதன் மூலாதாரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வாக இருக்கமுடியும். அதற்கு, வௌவால்களைக் கண்காணிப்பதும் அவைகுறித்து ஆய்வு செய்வதும் ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர் டஸ்ஸாக் கூறியுள்ளார். சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே அதற்கான வேலையைத் தொடங்கிவிட்டனர்.

எலி, பறவை போன்ற உயிரினங்களும்கூட இத்தகைய நோய்ப் பரவலைச் செய்கின்றன. ஆகவே, இந்த விஷயத்தில் வௌவால்களை மட்டுமே நாம் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட முடியாது. ஆனால், அவற்றின் மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதே இந்த கவனக் குவியலுக்குக் காரணம். அப்படிப் பரவும் நோய்களின் எண்ணிக்கையும் அவை பரவும் வேகமும் அதிகம். அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலுமே வௌவால்கள் வாழ்கின்றன. அதுவும் எலிகளைப் போலவே மனிதர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே வாழ்கின்றன. ஆனால், பறக்கும் திறன் இருப்பது நோய்களைப் பரவலாகக் கொண்டுசேர்க்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

அது மட்டுமின்றி, வௌவால்கள்தான் சிறிய பாலூட்டிகளிலேயே அதிக ஆயுள் காலத்தைக் கொண்டவை. சைபீரியாவிலிருந்த ஒரு சிறிய வகை வௌவால், 41 ஆண்டுகள் வாழ்ந்தது. ஆனால், எலிகள் சராசரியாக இரண்டு ஆண்டுகளே வாழ்கின்றன.

சீனா உட்பட, பூமியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வௌவாலை சாப்பிடுகின்றனர். அவை, விலங்குச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வௌவால்கள் குகைகளில் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அத்தகைய கூட்டமான வாழ்வியலைக் கொண்ட உயிரினம் தொற்று நோய்களை எளிமையாகப் பரப்பிவிடும்.

2017-ம் ஆண்டின்போது, டஸ்ஸாக் மற்றும் அவருடன் பணிபுரியும் ஆய்வாளரான கெவின்.ஜெ.ஆலிவலோடு இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதன்மூலம் அவர்கள், 754 பாலூட்டி வகைகள் மற்றும் 586 வைரஸ் வகைகள் குறித்த தரவுகளைத் தொகுத்து, எந்த வைரஸ் எந்தப் பாலூட்டியிலிருந்து உருவாகிறது. மேலும் அந்த வைரஸ்கள் தன்னைச் சுமந்து நிற்கும் உயிரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை ஆய்வுசெய்து தரவுகளைத் தொகுத்தனர். அந்த ஆய்வின் முடிவில், மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய பெருவாரியான வைரஸ் தொற்றுகளை மற்ற பாலூட்டிகளைவிட வௌவால்கள் அதிகமாகச் சுமந்திருக்கின்றன என்பதை உறுதி செய்தார்கள். வௌவால்கள், வைரஸ்களால் பாதிக்கப்படாமல் பிழைத்திருப்பதை மட்டும் செய்யவில்லை, வைரஸ்களையும் உருவாக்குகின்றன.

https://www.vikatan.com/social-affairs/environment/why-bats-dont-get-affected-by-any-virus-they-carry

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

வௌவால் குறித்த அறிவியல் ஆய்வுகளில், அவை எப்படி தொற்றுநோய்களைச் சுமந்துகொண்டே சுற்றுகின்றன என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவந்தது. பிற்காலத்தில் அதற்கான விடை, வௌவால்களின் எதிர்ப்புச்சக்தி குறித்த ரகசியம் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் ஒளிந்துள்ளதைக் கண்டுபிடித்தார்கள்.

 

24 minutes ago, ampanai said:

அப்படிச் சுமந்துகொண்டிருக்கும் வைரஸ்களில், அவற்றைப் பாதிக்கக்கூடிய ஒரேயொரு வைரஸ் இருக்கிறது என்றால், அது ரேபிஸ் மட்டும்தான்.

 

வௌவால்களின் எதிர்ப்புச்சக்தி ரேபிஸ் இடம் தோற்று விட்டது !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.