Jump to content

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் “தமிழன்” என்று சொல்லலாமா?


Recommended Posts

கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன.

ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6 மாதத்திற்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் தமிழர்கள் பங்கேற்குமாறு வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை சமூகத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்கள். உடன் ஒரு யூடியூப் வீடியோ இணைப்பும் அனுப்பட்டு இருந்தது. அதில் ஹெச்1, மாணவர் விசாவில் அபார்ட்மெண்டில், மாணவர் விடுதியில் தங்கியிருப்பவர்களும் இந்த கணக்கெடுப்பில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்ற விளக்கத்துடன், Other Asian என்று தேர்வு செய்து அருகே உள்ள பெட்டிக்குள் Tamil என்று அடையாளப்படுத்துங்கள் என்று கூறப்பட்டிருந்தது. தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் என்னென்ன நன்மை என்று பட்டியலிட்டு இருந்தார்கள்.

இன்னொரு பக்கம், இப்படி தமிழர் என்று அடையாளப் படுத்தக்கூடாது. இந்தியாவிலிருந்து வந்திருப்பவர்கள் ஏசியன் இந்தியன் என்று தான் அடையாளப்படுத்த முடியும். பெற்றோர்கள் வேறு வேறு ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றால் தான் Other Asian என்று பதிவிட முடியும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் Other Asian என்று பதிவிட்டால் அது குற்றமாகும். மேலும், இனவாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் 675 பில்லியன் டாலர்கள், சமுதாயத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கான செயல்திட்டங்களுக்கானது. இந்த தொகையில் பங்கு கேட்டால் தமிழர்கள் பேராசைக்காரர்கள் என்று கறுப்பின மற்றும் லத்தீன் இன மக்கள் கருதுவார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் ஒரு பதிவும் சுற்றி வந்தது.

இது தொடர்பாக சென்சஸ் அலுவலர்களிடமே கேட்டு விடலாமே என்று,சென்சஸ் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 1-844-330-2020 என்ற எண்ணில் அழைத்துக் கேட்டபோது, இனம் (Race) என்பது, நீங்கள் உங்களை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள் என்ற விருப்பத்தின் அடிப்படையிலானது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்று மறுமுனையில் பேசிய அலுவலர் குறிப்பிட்டார். மேலும், நான் கருப்பின அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக். எனவே இரண்டையும் குறிப்பிடுவேன். ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தை குறிப்பிடவும் படிவத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

 

Census-Race-Questions.jpg

சென்செஸ் அலுவலர்கள் கிழக்கு நேரம் இரவு 2 மணி வரையிலும் 1-844-330-2020 என்ற தொலைபேசி எண்ணில், கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் அந்த அலுவலர். இன்று ஏப்ரல் 1ம் தேதி ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள். அமெரிக்காவில் வசிப்பவர்கள் கட்டாயம் இந்த கணக்கெடுப்பில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை ஆன்லைனில் பதிவு செய்யத் தவறினால், விடுபட்ட வீடுகளுக்கு விரைவில் நேரடியாக சென்செஸ் அலுவலர்கள் வர உள்ளனர். எல்லா சந்தேகங்களுக்கும் நேரிலேயே விளக்கம் கேட்டு, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

https://a1tamilnews.com/april-1-2020-us-census-day/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நான் தமிழன் என்றுதான் போட்டு வருகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஸ்ரீலங்கன் தமிழர் என்று போட்டோம். இரண்டாவது மகன் கனடாவில் பிறந்ததால் கனேடியன் தமிழ் என்று போட்டோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

நாங்கள் ஸ்ரீலங்கன் தமிழர் என்று போட்டோம். இரண்டாவது மகன் கனடாவில் பிறந்ததால் கனேடியன் தமிழ் என்று போட்டோம் 

இனம் ஒருபோதுமே மாறாது, வேற்றினக் கலப்பு இல்லாமல்.

UK இல் அல்லது EU இல் எந்த form இலும் diversity monitoring ஐ நிரப்பும் போது, ஈழத்தமிழர் (Eezham Tamil) என்றே இனத்தை எப்போதும் குறிப்பிடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.