Jump to content

கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எப்படி செய்ய வேண்டும்?


Recommended Posts

உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது.

பிறகு, மத ரீதியிலான பிரச்சனையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரை அலசுகிறது.

 

"தனிப்பட்ட விதிமுறைகளை யாரும் உருவாக்க முடியாது"

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், "தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் வழிகாட்டுதல்களையே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை கண்டிப்பாக தகனம் வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் கூறவில்லை" என்று கூறினார்.

"மும்பை மாநகராட்சியின் இந்த அறிக்கை தொடர்பாக அதன் ஆணையரிடம் நான் பேசியபோது, கவனக்குறைவாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், எனவே அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுகின்றன. எனவே, இதுபோன்ற சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் வேறுபட்ட விதிமுறைகளை உண்டாக்குவது மக்களிடையே பதற்றத்தையே உண்டாக்கும்" என்று அவர் கூறினார்.

 

உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும், அடக்கம் செய்யக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்படவில்லை. இறுதிச்சடங்குகள் தொடர்பாக கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.

  • இறுதிச் சடங்குகளின்போது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட கூடாது.
  • கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலுக்கு கூடிய விரைவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
  • குறைந்தபட்ச எண்ணிக்கையிலான மக்கள் முன்னிலையில் உயிரிழந்தவரின் உடல் மத நடைமுறைகளின்படி, தகனம் செய்யப்பட வேண்டும் அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டும்.
  • இறுதிச் சடங்குகளைச் செய்யும்போது மருத்துவமனை பணியாளர்களின் உதவி கோரப்பட்ட வேண்டும்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எந்தவொரு உறவினர் அல்லது தெரிந்தவர்களால் கோரப்படாவிட்டால், அது தகனம் செய்யப்பட வேண்டும்.
  • தகனம் செய்யும் போது மாசு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சார தகனம் மிகவும் வசதியானது.

 

உடல் அடக்கம் செய்யப்பட்டால் அதிலிருந்து வைரஸ் பரவுமா?

"கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் அடக்கம் செய்யப்பட்ட உடலிலிருந்து வைரஸ் பரவுவதாக இதுவரை எந்த மருத்துவ பதிவுகளும் இல்லை. எனினும், உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்" என்று மும்பையை சேர்ந்த மருத்துவர் பல்லவி சப்பாலே கூறுகிறார்.

  •  

இந்திய அரசின் வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?

கொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலில் அந்த வைரஸ் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை என்று இந்திய அரசு அளித்துள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றால் ஒருவர் உயிரிழந்தவுடன் அவரது உடல் உடனடியாக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பையில் வைத்து சுற்றப்பட்ட வேண்டும். இந்திய அரசு வழங்கியுள்ள மேலும் சில வழிகாட்டுதல்கள் இதோ.

  • இறந்தவரின் உடலை உறவினர்கள் தொலைவில் இருந்தே பார்க்க வேண்டும்; உயிரிழந்தவரின் உடலை கட்டியணைப்பதோ, அருகில் செல்வதோ கூடாது.
  • முடிந்தவரை பிரேத பரிசோதனை தவிர்க்கப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அவசியம் என்றால் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • இறுதிச்சடங்குகள் குறிப்பிட்ட மத சடங்குகளின்படி செய்யப்படலாம். ஆனால், இறந்தவர் உடலின் மீது தண்ணீர் ஊற்றுவது போன்றவை செய்யக்கூடாது.
  • சவக்கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/india-52133924

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.