Jump to content

ஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
ஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்
ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நபர்கள் (கோப்பு படம்)
 
ஐதராபாத்:
 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 156 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
 
இதனால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக சென்ற மக்கள் ஆங்காங்கே சிக்கித்தவித்து வருகின்றனர். 
 
அவ்வாறு சிக்கியவர்களில் பலர் உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காது என அஞ்சி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டபோதிலும் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். 
 
குறிப்பாக டெல்லியில் தினக்கூலி வேலை செய்துவந்த உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலை வழியாக நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களை அடைந்த வண்ணம் இருந்தனர்.
 
சொந்த ஊர்களுக்கு இடம்பெயரும் மக்கள்
 
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்துவந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு நடந்து வரும் வழியில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் நடந்துள்ளது.
 
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார். 
 
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலை, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து லோகேஷ் சொந்த ஊரான நாமக்கலுக்கு வர முடிவு செய்துள்ளார்.
 
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நாக்பூரில் இருந்து நாமக்கலுக்கு சுமார் 500 கிலோமீட்டர் தூரம் சாலைவழியாக நடந்தே வர லோகேஷ் முடிவு செய்துள்ளார். 
 
இதையடுத்து, வெளிமாநிலங்களில் வேலைசெய்துவந்த தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன் இணைந்து லோகேஷ் பாலசுப்ரமணியும் சாலை வழியாக நடந்தே வந்துள்ளார்.
 
கடுமையான வெயிலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட லோகேஷ் தனது 500 கிலோமீட்டர் பயணத்தின் வழியில் நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், வெயிலில் தொடந்து நடந்ததில் மிகவும் சோர்வடைந்திருந்த லோகேஷ் சக நடைபயணிகளுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த போது நிலைகுலைந்து மயங்கி கிழே விழுந்தார். 
 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் டாக்டரை உடனடியாக அழைத்தனர். அங்கு வந்த டாக்டர் லோகேஷை பரிசோதனை செய்தார்.
 
உயிரிழந்த லோகேஷ் பாலசுப்ரமணி
 
லோகேஷ் பாலசுப்ரமணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த சக பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர். 
 
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, உயிரிழந்த லோகேஷ் பால சுப்ரமணியின் உடலை அவரது சொந்த ஊரன நாமக்கலுக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
 
ஊரடங்கு காரணமாக சாலை வழியாக சுமார் 500 கிலோமீட்டர் நடை பயணம் செய்து நாமக்கல் மாவட்டத்திற்கு வர எண்ணிய லோகேஷ் பாலசுப்ரமணியம் இறுதியில் உயிரிழந்த உடலாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.