Jump to content

ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? அதிர்ச்சியில் உறைந்த பிரான்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
 
 
ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? அதிர்ச்சியில் உறைந்த பிரான்ஸ்
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் (கோப்பு படம்)
 
பாரிஸ்:
 
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 
 
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
 
உலகம் முழுவதும் 10 லட்சத்து 9 ஆயிரத்து 452 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிவந்தது. 
 
ஆனால், இத்தாலியைக் காட்டிலும் மற்றொமொரு ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா நோயாளியை கொண்டு செல்லும் காட்சி (கோப்பு படம்)
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.
 
ஒரே நாளில் கொரோனாவுக்கு ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதால் பிரான்ஸ் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

14 hours ago, உடையார் said:

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ்  கடுமையான நிலையை எடுத்திருப்பதால், நிலைமைகள் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும். 

இருந்தாலும், சில சமூகங்கள் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் முதியோர் காப்பக இல்லங்கள் உலகம் முழுவதும் சிக்கல்  தருபவையாக உள்ளன. 

Link to comment
Share on other sites

நேற்று திடீரென பிரான்ஸ் தனது நேற்றயை நாளிலான இறப்பை 1355 ஆக பதிவு செய்தது. இன்று வரை எந்தவொரு நாடும் ஒரு நாளில் இறப்பில் ஆயிரம் எண்ணிக்கையை கடக்கவில்லை. இது சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியும் ஆகியது. ஆனால் அந்த எண்ணிக்கைக்கு வேறு வியாக்கியானம் ஒன்று வேறு இருந்தது. அதாவது 461 பேர் தான் நேற்றைய கணக்கில் இறப்பில் வருபவர்கள். ஏனைய 884 பேரும் வைத்தியசாலைகளுக்கு வெளியே காப்பகங்களில் பல்வேறு நாட்களில் கோவிட்-19 நோய்த்தாக்கம் காரணமாக இறந்து போனவர்கள். தற்போது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்களாம். என்ன குழப்பமாக இருக்கிறதா? அதாவது வைத்தியசாலைக்கு வந்து அனுமதிக்கப்பட்டு இங்கு உங்களுக்கு கோவிட் நோய்த்தொற்று உண்டு என உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் இறந்து போனால் தான் நீங்கள் கணக்கில் வருவீர்கள் என்பதே செய்தி. இவ்வாறு தான் ஏனைய நாடுகளும் கணக்கை முடிக்க முயல்கின்றன என்றால் உண்மையான இறப்பு எண்ணிக்கை என்ன? இன்று கட்டை மீறியுள்ள இத்தாலியும் சரி ஸ்பெயினும் சரி வைத்தியசாலைகளில்; இடமின்றி நிரம்பி வழிவதால் முத்தவர்களை அனுமதிக்க முடியாமலே பலர் இறந்து போகின்றனர். இவர்கள் கணக்கில் இல்லை என்பதா செய்தி?

பிரான்சின் தற்போதைய கணக்கு இது தான். மொத்த நோய்த்தொற்று: 59 ஆயிரத்து 105. இதில் வைத்தியசாலையிலான இறப்பு: 4,503. (கவனத்தில் கொள்ள இது நாடுதழுவிய மொத்த இறப்பு அல்ல) முதற்தடவையாக இதுவரை வெளியிலான இறப்பாக ஏற்றுக் கொண்ட தொகை: 884. வைத்தியசாலைகளில் அனுமதி: 26 ஆயிரத்து 246. அங்கு கடுமையான நிலையில்: 6,399. முழுமையாக குணமடைந்தவர்கள்: 12 ஆயிரத்து 428. ஆகவே பிரான்ஸ் இதையாவது தெளிவுபடுத்தியது. எவ்வித தெளிவுபடுத்தலும் இன்றி தமது அரசியல் இருப்பிற்காக அரசியாளலர்கள் உலகளாவி வெளிப்படுத்த அனுமதிக்கும் இந்தத் தரவுகள் எம்மை எவ்வளவு தூரம் ஏமாற்றுகின்றன என்ற புரிதலுக்காக இந்தப்பகிர்வு.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
(முகநூல்) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான தகவல். 

Link to comment
Share on other sites

சரியான விபரம் தெரியாது அரைவேக்காட்டுத் தனமாகச் செய்தி எழுது இணையத் தளங்கள் முதலில் ''அதிர்ச்சி'' என்ற சொல்லைப் பாவிக்காமல் தலைப்பு எழுதப் பழக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் முதலே கொர்னோ  விடயத்தில் இஷ்ட்டத்துக்கு எண்ணிக்கைகள் ஏறி இறங்குது அத்துடன் தொற்றும் விதம் குறித்து ஆள் ஆளுக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கதை நேற்று 27 அடி  மட்டும் தும்மும் போது  பரவும் என்கிறார்கள் இன்று ஜெர்மன் விஞ்சானி அப்படி இல்லை என்கிறார் .https://www.telegraph.co.uk/news/2020/04/02/no-proof-coronavirus-can-spread-shopping-says-leading-german/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

சரியான விபரம் தெரியாது அரைவேக்காட்டுத் தனமாகச் செய்தி எழுது இணையத் தளங்கள் முதலில் ''அதிர்ச்சி'' என்ற சொல்லைப் பாவிக்காமல் தலைப்பு எழுதப் பழக வேண்டும்.

உண்மையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பிரான்சில் இறந்தார்களா ?

பிரான்சில் கடந்த இரு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி பல்வேறு இணையதளங்களிலும், சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. உண்மையில் அது பிழையான புள்ளிவிபரம் என தெரியவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிரான்சின் சுகாதாரத்துறையின் அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 471பேர்களை மருத்துமனைகளில் உயிரிழந்தனர் எனத் தெரிவித்திருந்தது.

மேலும் அச்சுகாதாரஅறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மூதாளர் இல்லங்களில் இதுவரை 884 முதியவர்கள் உயிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெள்ளிக்கிழமை சுகாதாரஅறிக்கையில் மொத்தமாக இதுவரை மூதாளர் இல்லங்களில் 1416 மூதாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை மூதாளர் இல்லங்களில் இறந்த எண்ணிக்கையினையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெளிவந்த நாளாந்த மருத்துவமனை இறப்புக்களை கூட்டி, பிழையான புள்ளிவிபரத்துடன் செய்திகளை பல ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.

வியாழக்கிழமை மருத்துமனைகளில் 471பேரும், வெள்ளிக்கிழமை 588பேரும் உயரிழந்துள்ளனர் என்பதே சுகாதார அறிக்கையின் புள்ளிவிபரம்.

(காணொளி வெள்ளிக்கிழமை ஐ.பி.சி தமிழின் சிறப்பு நிகழ்சிக்கான வியாழன் நிலைவரம்.).           http://www.francetamils.com/?p=2853

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.