Jump to content

காதல் என்பது எதுவரை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

433941-DC-6-C74-4-B2-E-B42-D-29-EC677336

என்னதான் தடைகள் வந்தாலும் உண்மையான காதல் அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தங்களைச் சந்திப்பதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடும்காதலுக்கான ஒரு விளக்கத்தை இப்படிச் சொன்னவர், யேர்மனியில் Nordfriesland பகுதியில் உள்ள Suederlugum இல் வசிக்கும் 89 வயதான Karsten.

Karsten இனின் காதலியின் பெயர் Inga. 85 வயதான Inga டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். கொரோனா நோய்த் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் எல்லைகளை மூட ஆரம்பித்த  பொழுது யேர்மனியும் டென்மார்ககும் தங்கள் எல்லைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடிக் கொண்டன.

எல்லைகள் மூடப் பட்டதால் Karstenனாலும் Ingaவுவாலும் சந்திக்க முடியாமல் போனது. தினமும் சந்தித்து மகிழ்ந்திருந்த இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில் தவித்துப் போனார்கள். முதுமையால் அவர்கள் இருவரும் தளர்ந்து போயிருந்தலும் அவர்களது காதல் இளமையானது. அவர்கள் காதலிக்கத் தொடங்கி இரண்டு வருடங்கள்தான்.

Karsten தனது நகரத்தில் இருந்து சைக்கிளில் இரண்டு நாடுகளுக்கும் உள்ள எல்லைப் பகுதியான Aventoft வுக்கு வருவது என்றும் Inga தனது நகரன Gallehus வில் இருந்து அந்த எல்லைக்கு காரில் வருவது என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

இப்பொழுது இருவரும் தினமும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் தங்கள் தங்கள் நாட்டு எல்லைகளில் குறிப்பிடப்பட்ட இடைவெளி விட்டு அமர்ந்திருந்து உணவுண்டு, கோப்பி குடித்து, அளவளாவிச் சந்தோசமாக இருக்கிறார்கள். எல்லைகளின் தடை விரைவில் நீங்கி முன்னர் போல் மகிழ்ந்திருப்போம் என இருவரும் தங்கள் நம்பிக்கையுடன் சொன்னார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு கணவன், மனைவி, குழந்தை குட்டிகள் இல்லையா..?
யாரும் யாரோடையும் எப்பொழுதும் போகலாமென்ற கற்கால வாழ்க்கையில் என்ன பெருமை இருக்கிறது..?

கீழே செய்தியிலுள்ள காதலுக்கும், இவர்கள் கற்பிக்க முனையும் காதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தோன்றுகிறது.

 

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

இவங்களுக்கு கணவன், மனைவி, குழந்தை குட்டிகள் இல்லையா..?
யாரும் யாரோடையும் எப்பொழுதும் போகலாமென்ற கற்கால வாழ்க்கையில் என்ன பெருமை இருக்கிறது..?

கீழே செய்தியிலுள்ள காதலுக்கும், இவர்கள் கற்பிக்க முனையும் காதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தோன்றுகிறது.

 

அந்த இரண்டு முதியவர்களின் வாழ்ககைப்  பின்னணி தொடர்பாக எதுவும்  தெரியாமல்  இந்தியாவல் நடக்கும் கள்ள காதலுடன் இவர்களின் காதலை ஒப்பிட்டிருகின்றீர்கள் ராசவன்னியன். இருவருக்கிடையே ஏற்பட்ட உண்மையான அன்பை  புரிந்து கொள்ளாமல்  வெறும் இந்திய   பார்வையில்  பார்த்ததால் வந்த வினை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த இரண்டு முதியவர்களின் வாழ்ககைப்  பின்னணி தொடர்பாக எதுவும்  தெரியாமல்  இந்தியாவல் நடக்கும் கள்ள காதலுடன் இவர்களின் காதலை ஒப்பிட்டிருகின்றீர்கள் ராசவன்னியன். இருவருக்கிடையே ஏற்பட்ட உண்மையான அன்பை  புரிந்து கொள்ளாமல்  வெறும் இந்திய   பார்வையில்  பார்த்ததால் வந்த வினை 

நான் இணைத்த செய்தியில் இருப்பது - அவர்கள் கள்ளக் காதலர்கள் அல்ல. இருவரும் தத்தமது திருமணத்திற்கு முன் ஏற்கனவே காதலர்கள் தான். விதி வசத்தால், சூழ்நிலைகளால் இளமையில் பிரிந்தவர்கள்.

ஒருவனுக்கொருத்தி என்பது மனித வாழ்வியல் நெறி, இதில் இந்தியப் பார்வை. ஐரோப்பிய பார்வை என ஏன் வேறுபாடு..?

இந்த முதியவர்கள் நிச்சயம் திருமணமாகாமல் தனியே வாழ்ந்திருக்க வாய்ப்பிலை. அவர்களில் இந்த காலம் கடந்த காதல் இரு வடத்திற்கு முந்தையதுதானே..?

Link to comment
Share on other sites

38 minutes ago, ராசவன்னியன் said:

நான் இணைத்த செய்தியில் இருப்பது - அவர்கள் கள்ளக் காதலர்கள் அல்ல. இருவரும் தத்தமது திருமணத்திற்கு முன் ஏற்கனவே காதலர்கள் தான். விதி வசத்தால், சூழ்நிலைகளால் இளமையில் பிரிந்தவர்கள்.

ஒருவனுக்கொருத்தி என்பது மனித வாழ்வியல் நெறி, இதில் இந்தியப் பார்வை. ஐரோப்பிய பார்வை என ஏன் வேறுபாடு..?

இந்த முதியவர்கள் நிச்சயம் திருமணமாகாமல் தனியே வாழ்ந்திருக்க வாய்ப்பிலை. அவர்களில் இந்த காலம் கடந்த காதல் இரு வடத்திற்கு முந்தையதுதானே..?

இல்லை நண்பரே இருவரும் தமது வாழ்வின் இறுதிப்பகுதியில் இருப்பவர்கள். முதிய வயதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட அன்பின் பிணைப்பில்  மனம் நெகிழ்ந்திருக்கிறார்கள். இதுவே அவர்களின் காதல்.   இது ஜதார்த்தம். இதற்கும் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைக்கும் நீங்கள் கூறிய  ஒருவனுக்கு ஒருத்தி தத்துவத்திற்கும் தொடர்பே இல்லை. 

தமது துணையை இழந்த இரு வயோதிபரகள்  அண்மையில் தமிழகத்தில் ஒரு வயோதிபர் மடத்தில்  காதலித்த  செய்தி வந்ததை தங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

... முதிய வயதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட அன்பின் பிணைப்பில்  மனம் நெகிழ்ந்திருக்கிறார்கள். இதுவே அவர்களின் காதல்.   இது ஜதார்த்தம். இதற்கும் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைக்கும் நீங்கள் கூறிய  ஒருவனுக்கு ஒருத்தி தத்துவத்திற்கும் தொடர்பே இல்லை...

எனக்கென்னமோ இது சரியா படலை. மனமும் ஒப்பவில்லை.
அவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்..

நாம் அடுத்த வேலையை பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

இல்லை நண்பரே இருவரும் தமது வாழ்வின் இறுதிப்பகுதியில் இருப்பவர்கள். முதிய வயதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட அன்பின் பிணைப்பில்  மனம் நெகிழ்ந்திருக்கிறார்கள்.

அழகு இல்லாத பூவும் இல்லை 
அந்த காதல் இல்லாத வாழ்வும் இல்லை .😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒன்றும் உடல் இச்சைக்காகப் பழகுபவர்கள் போல் தெரியவில்லை. ஒருவர் சொல்வதை ஒருவர் பொறுமையாக கேட்க ஒரு துணை தேவை.அது காதலாகவோ நட்பாகவோ மனைவியாகவோ துணைவியாகவோ எப்படி வேண்டுமானாலும்  இருந்துட்டு போகலாம். பிள்ளைகள் எல்லாம் நிண்டு கேட்கும் எண்டு நம்புகிறீர்களா.அவங்கள் கேட்க மாட்டாங்கள்.அறுபதாம் கலியாணத்துக்கு கூட அதே பெண்ணைத்தான் அழைத்து வந்து கட்டி வைக்கிறாங்கள்......!  😁 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.