Jump to content

அமெரிக்காவை உலுக்கிய திகில் சம்பவம் /The Amityville Horror House|mystery video tamil


Recommended Posts

1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற  நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த  வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.   இந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன? இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா? வாருங்கள் முழுமையாக காணலாம்.

அமிட்டிவில்

ஹாலிவுட்டில் பல்வேறு பேய் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த பேய்ப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாகக் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அமிட்டி வில் ஹாரர். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்ததோ அது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விடக் கொடூரமானதாகவும் திகில் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தையே கேள்விப்படாத பலருக்கு இந்த சம்பவம் தெரிந்ததும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியமைதான் இதைத் திரைப்படமாகவும் எடுக்கக் காரணமாக அமைந்ததது. இந்த காணொளியில் நாம் அமிட்டிவில் பேய் வீடு குறித்தும் அங்கு நடந்தவற்றையும் தற்போது அந்த வீட்டில் நடப்பவைகளையும் பார்க்கலாம் வாருங்கள்.

 

அழகான வீடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அமிட்டிவில் இங்குள்ள ஒரு வீட்டில் தான் இந்த விஷயம் நடந்தது. இந்த வீடு வழக்கம் போல மற்ற வீடுகளைப் போலத் தான் இருந்தது. இதை வீடு என்பதை விடப் பங்களா என்றே சொல்லலாம். இந்த வீட்டில் சன்ரூம், பேக் பேட்டியோ, டெக், போட்ஹவுஸ் என்ற சகல வசதிகளும் இருந்தன. பொதுவாக அமெரிக்காவில் இந்த வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.

 

1970  களில் இந்த வீட்டில் டிஃபோ என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வீட்டில் அவர், அவர் மனைவி மற்றும் அவரின் 5 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணிக்கு இந்த வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது

டிஃபோவின் 23 வயது மகன் ரொனால்டு டிஃபோ என்பவர் அதிகாலை 3.15 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்த 0.35மிமீ துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள மற்றவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வரிசையாகச் சுட்டுக் கொலை செய்தார். அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரைக் கொரூரமாக கொலை செய்கிறான் இவன்

 

கைது

இந்த தகவல் அதிகாலை போலீசாருக்கு தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரொனால்டை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவன் கூறியபதில் அவ்ர்களை திக்குமுக்காடவைத்தது தன்னை ஏதோ ஒரு குரல் அப்படிச்செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும். அது தன்னை மூளைச் சலவை செய்து அப்படிச் செய்ய வைத்துவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தான் அவன். ஆனால் போலீசார்  ஆரம்பத்தில் இவன் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ பொய் கூறுகிறான் என்றுதான் நினைத்தார்கள்

 

பாழடைந்த வீடு

6 பேர் கொலைசெய்யப்பட்ட வீடு என்பதால் அந்த பகுதியில்உள்ள மக்கள் அந்த வீட்டை ஒரு பயங்கரமான வீடாகவே பார்த்தனர். வீட்டில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். ரொனால்டும் சிறைக்குச் சென்று விட்டார். அந்த வீட்டில் யாருமே வசிக்க வில்லை. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது.

 

கோட்டில் ரொனால்டு மீது நடந்த வழக்கில் அவருக்கு 6 ஆயுள் தண்டனை கிடைத்தது. இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் இன்றும் கைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிறைக்குச் சென்றதும்  வீடு அந்த வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் யாரும் இந்த வீட்டை வாங்க முன்வரவில்லை அந்த வீட்டில் அமானுஷ்யமான சக்திலக்ள் இருப்பதாக பலர் நம்பியமையே இதற்கு காரணம்,மிகக்குறை1975ம் ஆண்டு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.

அதனால் இந்த வீட்டின் மதிப்பு மிகவும் குறைந்துகொண்டே சென்றது கிட்டத்தட்ட இவ்வளவு பெரிய பங்களாவை வெறும் 80 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் வாங்கினார். அவர் தனது மனைவி கேத்தி, மற்றும் மகன்கள் டேனியல் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோருடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தார். குறைந்த விலையில் வீடு வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து லட்ஸ் ஆரம்பத்தில் மிகவும்  சந்தோஷமாக இருந்தார்.

ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. வீட்டிற்குள் அவர்கள் குடிவந்ததும் ஏதோ ஒரு வித அமானுஷ்யத்தை உணர துவங்கினர். அவர்களை யாரோ கண்காணிப்பது போலவும், அவர்களைச் சுற்றி யாரோ ஒருவர் இருப்பது போலவும் அவர்கள் உணர்ந்தனர். இது மட்டுமல்ல தினம் தினம் ஏதோ ஒரு விடயம் வித்தியாசமாக நடக்கத் துவங்கியுள்ளது.

 

samayam tamil

லட்ஸ் அவர் வீட்டின் சுவர்களிலிருந்து பிசுபிசுப்பான ஏதோ ஒரு விஷயம் வெளியேறுவதைக் கவனித்துள்ளார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் வீட்டின் அருகே உள்ள பன்று யாரும் இல்லாத வீட்டை உற்றுப் பார்த்து மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் சிவப்பு நிறங்களில் ஏதோ தெரிந்துள்ளது. ஆனால் இவர் பார்க்கும் போது வீட்டிற்குள் எதுவுமில்லை.அமெரிக்காவை உலுக்கிய திகில் சம்பவம்

இதை விட உச்சகட்டமாக லட்ஸ் இரவு தூங்கும் போது ஒருமுறை அதிகாலை நேரத்தில் விழித்து  எழுந்துள்ளார். அப்பொழுது அருகில் படுத்திருந்த அவரது மனைவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் இவர் பதறி எழுந்துள்ளார். உடனே மனைவி கட்டிலில் விழுந்துவிட்டார் விடயம் இதோடு முடிந்துவிடவில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.