Jump to content

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!

இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.
பதிவு: ஏப்ரல் 03,  2020 13:30 PM
புதுடெல்லி
 
அமெரிக்காவை போல் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு பின்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. அதே போல் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
 
தொற்றுநோயின் மோசமான நிலையைக் கையாளும் பல நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம்  மெதுவாக உள்ளது. மார்ச் 8 அன்று, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 541 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 994 பாதிப்புகள் என  இரு மடங்காக அதிகரித்தது. இருப்பினும், கடந்த வாரத்தில், இது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
கடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனாபாதிப்புகள் இந்தியாவில் இரட்டிப்பாகிவிட்டன, கடந்த ஏப்ரல் 2ந்தேதி  328 பாதிப்புகள் மற்றும் 12 இறப்புகள் பதிவாகி இருந்தன . மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இப்போது 2,069 வழக்குகள் உள்ளன, 53 இறப்புகள் மற்றும் 156 குணப்படுத்தப்பட்டுள்ளன .மாநிலங்களின் அதிகாரிகள் தகவ்ல் படி 2,500 க்கும் அதிகமான பாதிப்புகளும் எண்ணிக்கையையும், உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆகவும் உள்ளது.
 
மராட்டியத்தில் 335 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் 286 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 309 மற்றும் டெல்லியில் 219, கர்நாடகாவில் 124, உத்தரபிரதேசத்தில் 113, தெலுங்கானாவில் 107, ராஜஸ்தானில் 133, மத்திய பிரதேசத்தில் 99, குஜராத்தில் 87, ஆந்திராவில் 132க்ஷ்`க்ஷ்`, ஜம்மு காஷ்மீரில் 62, பஞ்சாபில் 46,அரியானாவில் 47, மேற்கு வங்கத்தில் 53, பீகாரில் 24, சண்டிகரில் 16, லடாக்கில் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 5, சத்தீஸ்காரில் 9, கோவாவில் 5, இமாச்சல பிரதேசத்தில் 3, ஜார்க்கண்டில் 1, மணிப்பூர் மற்றும் மிசோரத்தில் 1, ஒடிசாவில் 4, புதுச்சேரியில் 3, உத்தரகாண்டில் 7 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
 
உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது, 50,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
டெல்லி நிஜாமுதீன் சம்பவத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலும்,தமிழகத்திலும் அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 200  கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த வேகத்தில் அதிகரித்தால், ஊரடங்கு 21 நாட்கள் முடிவில் பத்தாயிரத்தை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் கூற்றுப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், தொற்றின் வேகம் இப்போது குறையுமா என்று இப்போது கண்ணிக்க இயலாது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
 
பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆற்றிய உரையில் கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது; எந்த தவறும் நடந்துவிடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் சுகாதார பணியாளர் கள், போலீசார், அரசாங்கத்துக்கு மட்டுமானது என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போராக கருதவேண்டும் என மக்களை கேட்டு கொண்டார்.
 
மார்ச் 24 மாலை, கொரோனா வைரஸின் "சமூக பரவலை" தடுக்க  பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது - மார்ச் 25 அன்று 606 பாதிப்பாக இருந்தது. முதல் ஏப்ரல் 1 அன்று 1,637 ஆக அதிகரித்தது. 
 
இந்தியாவில் முதல் 200 நோயாளிகளுக்கு கொரோனா ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் முதல் நபருக்கு கேரளாவில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 20ஆம் தேதிதான் 200வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீர் என்று வேகம் எடுத்து இருக்கும் கொரோனா, நேற்று ஒரே நாளில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
பிப்ரவரி 15ல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29ம் தேதி தான் இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட்டது.
 
மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க இதே நிலைதான். முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும், அதன்பின் திடீர் என்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக்கும். கொத்து கொத்தாக பலர் மருத்துவமனையில் சேர்வார்கள்.
 
அதேபோல் தான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பிப்ரவரி 15. மார்ச் 15ம் திகதி சரியாக ஒரு மாதத்தில் அங்கு ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது.அதன்பின் வேகம் எடுத்த தொற்று கொத்து கொத்தாக மக்களை மருத்துவமனைகளில் சேர வைத்தது.
 
அதில், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் இருந்து 85 ஆயிரத்தை தொட எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் 6 நாட்கள்தான். சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது. இதுபோன்றுதான் இத்தலியிலும் நிகழ்ந்தது.
 
கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். உதாரணமாக ஏ என்ற நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தும் அறிகுறி இல்லை. அவர் பல இடங்களுக்கு செல்கிறார். பலரை சந்திக்கிறார். அவருக்கு தெரியாமல் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புவார்.இவர் மூலம் ஒரே நாளில் பலருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ஒரே நாளில் வேகமாக உயர காரணம் ஆகும். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என்பதை மற்ற நாடுகள் உணர்த்துகின்றன.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.