Jump to content

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்


Recommended Posts

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்

 

 

     by : Litharsan

Trump-and-Putin.jpg

மருத்துவ உபகரணங்களை வழங்கியதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பை ரஷ்யா அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி ஆலோசனைக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து வென்ரிலேற்றர் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அதிகப்படியான மருத்துவ உதவிகளைத் தருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக பதிலளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக ரஷ்யா செய்யும் பிரசாரங்கள் பற்றி தனக்குக் கவலையில்லை எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், சீனா மற்றும் பிற நாடுகளிடம் இருந்தும் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் பல நாடுகளுக்கு உதவி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/கொரோனாவுக்கு-எதிரான-போரா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்

 

 

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

A delivery of protective masks destined for Germany will probably never arrive ....

The USA intercepted the delivery on the way to Germany and redirected it to its own country. Health Minister Jens Spahn (CDU) confirmed this to BILD.

The "Tagesspiegel" had previously reported about it.

According to information from "rbb24", this should be an order from the Berlin police. The masks had been ordered from the 3M company.

The American manufacturer also has its masks made in China. 3M is one of the largest providers of respiratory masks for industry and healthcare. The delivery was to be reloaded in Bangkok and transported from there to Germany by air freight. In Bangkok, the delivery was then "redirected" to the USA, the Berlin police confirmed.

https://www.bild.de/regional/berlin/berlin-aktuell/bericht-schutzmasken-lieferung-fuer-berlin-von-den-usa-abgefangen-69824084.bild.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

நீங்கள் பீட்சா என்னிடம் ஓடர் செய்துகிறீர்கள் நான் உங்களிடம் டெலிவரி செய்ய வரும் போது மனம் மாறியோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரர் கேட்டு கொண்டதிற்காகவோ பிட்சாவை அவரிடம் ஒப்படைத்தால் தவறு என்னுடையதும் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் பீட்சா என்னிடம் ஓடர் செய்துகிறீர்கள் நான் உங்களிடம் டெலிவரி செய்ய வரும் போது மனம் மாறியோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரர் கேட்டு கொண்டதிற்காகவோ பிட்சாவை அவரிடம் ஒப்படைத்தால் தவறு என்னுடையதும் தானே

முதலாளிமார் டெலிவரி செய்யுறது குறைவு.அதுக்கெண்டு ஆக்கள் இருப்பினம்.டெலிவரி செய்யிறவன் அமெரிக்கனாய் இருந்தால்?????

Link to comment
Share on other sites

அமெரிக்கன் வாழ்ந்தால் தான் பிரெஞ்சும் ஜெர்மனியும் கனடாவும் வாழும்.

அமேரிக்கா வீழ்ந்து சீனா வென்றால், எங்களுக்கும்  நாயும், எலியும் வவ்வாலும் தான்   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ampanai said:

அமெரிக்கன் வாழ்ந்தால் தான் பிரெஞ்சும் ஜெர்மனியும் கனடாவும் வாழும்.

அமேரிக்கா வீழ்ந்து சீனா வென்றால், எங்களுக்கும்  நாயும், எலியும் வவ்வாலும் தான்   😁

அமெரிக்காவின்ரை வரலாறு சில நூறு வருடங்கள் தான்....
சீனாவின்ரை வரலாறு பல ஆயிரம் வருடங்கள்...
இப்பவும் அமெரிக்காவுக்கு சீனாதான் கை கொடுக்குது....ரஷ்யாவும் எண்டது வேறை விசயம்.
ஐரோப்பாவிலை இங்கிலாந்தை தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு வரையறையோடை சீனாவை ஆதரித்து சமாளித்துத்தான் நடக்கின்றார்கள்.ரஷ்யாவுடன் இன்னும் அதிகம்
போன கிழமையும் சைனா வைரஸ் சைனா வைரஸ் எண்டு கத்திப்போட்டு இப்ப சீனாவின்ரை காலிலை விழுந்து போய் கிடக்கிறார் டொனால்ட் ரம்ப்.🤣

படிப்பை விட அனுபவம் முக்கியம் ராசா....அதுதான் இப்ப வேலை செய்யுது.😎

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவின்ரை வரலாறு சில நூறு வருடங்கள் தான்....
சீனாவின்ரை வரலாறு பல ஆயிரம் வருடங்கள்...

சீனா அதிகாரத்தில் இருந்த நாடு. பின்னர் வீழ்ந்தது. 

அமெரிக்க - சின்ன பொடியன் தான் - ஆனால்,இன்னும் வீழ வில்லை  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

இப்ப உங்களுக்கு முக கவசம் இருக்குதா இல்லையா 😎

ஊரில கனபேர் துவாயுடன் தான் செல்கிறார்கள் வயசுக்காரர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப உங்களுக்கு முக கவசம் இருக்குதா இல்லையா 😎

ஊரில கனபேர் துவாயுடன் தான் செல்கிறார்கள் வயசுக்காரர்கள் 

வெளியில் போயிற்று வந்து துவாயை துவைச்சு போடினமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

வெளியில் போயிற்று வந்து துவாயை துவைச்சு போடினமோ ?

அது தெரியல ஆனால் முகக்கவசங்களை  பாவிப்பவர்களை காணகுறைவு ஒரு துணி மாத்திரம் தான் கட்டியுள்ளார்கள் இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் அரச வேலையோ பணக்காரரோ கிடையாது நாள் தோறும் வயலுக்கும் , கடலுக்கும் ,குளத்துக்கும் , ஆறுக்கும், விவசாயத்துக்கும் ,(பயிர்செய்கை) செல்ல வேண்டும் குறிப்பாக கிழக்கில் இவர்களை தங்களைகூட கவனிக்கல தங்கள் குடும்பம் வாழணும் என நினைப்பவர்கள் ஒருத்தரை இடைமறித்து கேட்ட போது எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்றார் நான் சொன்னேன் இது உங்களுக்கு வந்தால் உங்கள் குடும்பமும் பாதிப்படையும் என்று சொன்னேன் அதற்கு அவர் அது வர முதல் பசி வந்து செத்துடுவோம் என சொல்லி கடந்து போனார்

* அரசு கொடுத்த 5000 ரூபாயில் கூட 3000 மட்டுமே கொடுத்து மீதி இரண்டாயிரத்தை சேமிப்பு என சொல்லி வங்கியில் வைத்திருக்கும் சமுர்த்தி ஊழியர்களும் 

* அரசு வழங்கிய நிதியில் பழுதாகிய மரக்கறிகளை வாங்கி கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் வரைக்கும் நாம் நாங்கள் வாழ போராடத்தான் வேண்டும் இங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அது தெரியல ஆனால் முகக்கவசங்களை  பாவிப்பவர்களை காணகுறைவு ஒரு துணி மாத்திரம் தான் கட்டியுள்ளார்கள் இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் அரச வேலையோ பணக்காரரோ கிடையாது நாள் தோறும் வயலுக்கும் , கடலுக்கும் ,குளத்துக்கும் , ஆறுக்கும், விவசாயத்துக்கும் ,(பயிர்செய்கை) செல்ல வேண்டும் குறிப்பாக கிழக்கில் இவர்களை தங்களைகூட கவனிக்கல தங்கள் குடும்பம் வாழணும் என நினைப்பவர்கள் ஒருத்தரை இடைமறித்து கேட்ட போது எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்றார் நான் சொன்னேன் இது உங்களுக்கு வந்தால் உங்கள் குடும்பமும் பாதிப்படையும் என்று சொன்னேன் அதற்கு அவர் அது வர முதல் பசி வந்து செத்துடுவோம் என சொல்லி கடந்து போனால் 

* அரசு கொடுத்த 5000 ரூபாயில் கூட 3000 மட்டுமே கொடுத்து மீதி இரண்டாயிரத்தை சேமிப்பு என சொல்லி வங்கியில் வைத்திருக்கும் சமுர்த்தி ஊழியர்களும் 

* அரசு வழங்கிய நிதியில் பழுதாகிய மரக்கறிகளை வாங்கி கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் வரைக்கும் நாம் நாங்கள் வாழ போராடத்தான் வேண்டும் இங்கே

தனி அந்த 3000 மும் இன்னும்நிறைய பேருக்கு குடுபடேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

தனி அந்த 3000 மும் இன்னும்நிறைய பேருக்கு குடுபடேலை

ம்ம் எப்போது சுனாமி வந்து ஏழைகளுக்கு வந்த வளங்களை சுரண்டினார்களோ அதே போல இந்த கொரோனோ வந்தும் சுரண்டுகிறார்கள்.

நான் திருமணமான பின்னர் எங்கள் கிராம சேவகருக்கு  கடிதம் கொடுத்து நான் கல்யாணம் கட்டி விட்டேன் அதனால் மாமியாருக்கு வாக்காளர் இடாப்பை பிரித்து மச்சினன் , மாமி ,மாமா அவர்கள் வேறு என கடிதம் கொடுத்தும் அவர் இன்னும் பிரிக்காமலும் சமுர்த்தி கொடுக்காமலும் இருந்திருக்கிறார் கேட்டபோது உங்கள இன்னும் பிரித்து பதியவில்லை என்று சொல்லிவிட்டார் இதுவரைக்கும் அவர்களுக்கு எந்த உதவியுக் கிடைக்கல. 

காரணம் அந்த கிராம சேவகர் அவரின் அலட்சிய போக்கு என்ன செய்யலாம் இதுதான் அரச வேலை பார்க்கும் அதிகாரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் - டிரம்ப்

 

ரஷியா அதிபர் புதின் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் பலரது உயிரை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் - டிரம்ப்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
 
வாஷிங்டன்:
 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 59 ஆயிரத்து 128 இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.
 
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 
 
 
அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 76 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
 
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
 
இதற்கிடையில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தத்தளித்துவந்த அமெரிக்காவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உதவ முன் வந்தார். 
 
அமெரிக்காவுக்கு ரஷிய வழங்கிய மருத்துவ உபகரணங்கள்
 
இதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ரஷியாவில் இருந்து மிகப்பெரிய சரக்கு விமானம் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. 
 
அந்த விமானம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் பலரது உயிர்களை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:-
 
டிரம்ப் மற்றும் புதின்
 
‘'அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை ரஷிய அதிபர் புதின் அனுப்பியது மிகவும் நல்ல உபசரிப்பு. ரஷியா அளித்த உதவியை நான் வாங்காமல் வேண்டாம் நன்றி என கூறியிருக்கலாம் அல்லது வாங்கிக்கொண்டு நன்றி என கூறியிருக்கலாம். 
 
புதின் மிகப்பெரிய விமானத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளார். இந்த உபகரணங்கள் அமெரிக்காவில் பலரது உயிர்களை காப்பாற்றும். ஆகையால், நான் அதை ஏற்றுக்கொண்டேன்’’ என்றார். 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.