Jump to content

இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர்  நிதியுதவி


Recommended Posts

இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர்  நிதியுதவி

கொவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராட இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு உலக வங்கி முன் வந்துள்ளது.

இதன்மூலம், இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைக்க முன்னுரிமை அளிக்கும், நோய் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் சமூகங்களில் பரவலை தடுக்க உதவும்.

மேலும், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை வலுப்படுத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மற்றும் கை கழுவுதல்,சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பேணல் (Social Distance) பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவும்" என்று உலக வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், உலக வங்கி இந்தியாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மாலதீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நிதியுதவியாக வழங்கவுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டொலர்கள் உதவித்தொகை அறிவிக்கவுள்ளது. உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம். மேலும் விரைவில் இதிலிருந்து மீள்வது பொருளாதார சரிவையும் தடுக்குமென உலகவங்கி தெரிவித்துள்ளது.
 

இலங்கைக்கான நிதியதவி தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மற்றும் நோபாள், மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்க்கான அவசர நிலைமைகளின் போது நாட்டை தயார்படுத்தவும் உலக வங்கியானது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும்.</p>
தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் இலங்கை ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான எமது ஆதரவு, பாதிப்புகளை குறித்து எதிர்கால அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/79194

Link to comment
Share on other sites

’மத்திய வங்கியால் மக்களுக்கு நிவாரணம்’

கொரோனா வைரஸால் நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரச் சிக்கல்களைக் குறைப்பதற்காக, மத்திய வங்கியினால், பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ. லக்‌ஷ்மன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல், இந்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், சாதாரண மக்கள் இயல்பு வாழ்க்கையை சுமூகமாக நடத்திச் செல்ல முடியாத சூழல் எற்பட்டுள்ளது என்றும் இதனால், பொருளாதாரம், வங்கித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்றும், அவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், ஆளுநரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மத்திய-வங்கியால்-மக்களுக்கு-நிவாரணம்/175-247910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகவங்கி எல்லா நாடுகளுக்கும் மில்லியன் பில்லியன் என்று தன்னிச்சயாய் அள்ளிக் குடுக்குது சரி நல்ல விடயம்....ஆனால் இந்த உலக வங்கிக்கு யார் இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்....ஏதாவது மிசின் வச்சு நோட்டு கீட்டு அடிக்குதா ......தெரியவில்லை, அதுதான் ஒரு சின்ன சந்தேகம்.....!  🤔

Link to comment
Share on other sites

பணக்கார நாடுகளும் உலக பங்கு சந்தைகள், திறைசேரிகள் (capital markets) ஊடாகவும் திரட்டப்படும் பணம் ..அங்கத்துவ நாடுகளுக்கு, நெருக்கடி காலத்தில்  கொடுத்து உதவப்படும்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் உருவாக்கப்பட்டது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

ஏற்கனவே வெளிநாட்டு நிதிகளில் வாழும் நாடு.
அதில் சுனாமி மூலம் பெரும் வருவாயை பெற்றது.
அதற்கு பின் 2009 இன அழிப்பின் உலக நாடுகள் கொடுத்த வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு கொடுத்த வருவாய் எண்ணிலடங்காது.
இப்போது கொரோனா நிதியுதவி மற்றும் கடன் தள்ளுபடிகள்.

அழிவுகள் மூலம் வரும் நிதிகளை வைத்து வயிறு வளர்க்கும் நாடு சிறிலங்கா.

Link to comment
Share on other sites

14 hours ago, வாதவூரான் said:

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

உதை சுருட்ட தான் ராஜபக்ச கும்பல் ஒரு பெரும் கோஷ்டியை நியமிச்சு இருக்கு!
வழமை போல வடபகுதிக்கு உதவி என்ட பேர்ல தான் கொள்ளைக் கோஷ்டி பிளான் போட்டிருக்கு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.