Jump to content

முதலைக்கு இரையாகிய இளைஞன் : உணவு தேடி அலைந்தபோது இடம்பெற்ற சோகம்


Recommended Posts

முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03.04.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் இளைஞனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.

78051292_448269296077649_871072253708599


புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளைஞரே இவ்வாறு முதலைக்கு இரையாகி, மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சம்பவம் குறித்த, மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\

https://www.virakesari.lk/article/79198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஊரங்கு சட்டம் போட்டானுகள் காசு இருக்குறவன் சாமான்களை வாங்கி வைத்துள்ளான் ஆனால் நாள் தோறும் கடல் ,ஆறு , குளம் என அலைந்து மீன்பிடித்து வாழும் மக்களை என்ன செய்வது  எங்கு பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளையே பாதிக்கிறது  மீன் பிடித்து வந்தாலும் அதை விற்க முடியாமலும் இருக்கின்றனர் வியாபாரிகள் இல்லை விற்பதற்கு .

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

புலம்பெயர்ந்தவர்களை இங்குள்ளவர்கள் ஏழையாக பார்ப்பதில்லை ஆனால் அங்கு நடக்கும் நிலமைகள் , செய்யும் தொழில்கள் அது அவர்களுக்கே வெளிச்சம் அது இங்கு தெரிய வாய்ப்பில்லை காரணம் பணத்தின் பெறுமதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

வறுமைகாரணமாக புலம்பெயர் தேசத்தில் இறந்தார்களா ? 

 

பலியானவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.😢

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

வறுமைகாரணமாக புலம்பெயர் தேசத்தில் இறந்தார்களா ? 

ஆமைய்யா. இங்கேயும் வறுமைக்கோடும் வறுமையும் உள்ளன. 

https://en.wikipedia.org/wiki/Poverty_in_the_United_Kingdom

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம், இயற்கை, நோய் என்று எதுவந்தாலும்  முதற்பலியாவது ஏழைகளே. அது இலங்கையில் என்றால் தமிழர்கள்!................. இந்தவிதியை யார் மாற்றுவது. இப்படியே கடந்துபோய்;  கலைந்துபோவிடுவதாகவே இருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டில் ஊரங்கு சட்டம் போட்டானுகள் காசு இருக்குறவன் சாமான்களை வாங்கி வைத்துள்ளான் ஆனால் நாள் தோறும் கடல் ,ஆறு , குளம் என அலைந்து மீன்பிடித்து வாழும் மக்களை என்ன செய்வது  எங்கு பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளையே பாதிக்கிறது  மீன் பிடித்து வந்தாலும் அதை விற்க முடியாமலும் இருக்கின்றனர் வியாபாரிகள் இல்லை விற்பதற்கு .

ஆழ்ந்த இரங்கல்கள் 

இயற்கை அழிவிற்கும் செயற்கை அழிவிற்கும் பலிக்கடா ஆவது ஏழை மக்களே.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

 

78051292_448269296077649_871072253708599


புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளைஞரே இவ்வாறு முதலைக்கு இரையாகி, மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

முதலை கூட....  நொந்து போயுள்ள,  தமிழனைப்  பார்த்துத்தான்.. கடித்து தின்னுது. ஹ்ம்ம்... 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளுக்கு எங்கு போனாலும் வாழ்வு இல்லை. அவர்கள் வாழத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இயற்கை அழிவிற்கும் செயற்கை அழிவிற்கும் பலிக்கடா ஆவது ஏழை மக்களே.

ஆழ்ந்த இரங்கல்கள்.

ம் உன்மைதான் 

Link to comment
Share on other sites

சின்ன வயசுல அநியாய மரணம்!

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான மரணம். சிறுவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

குளம், வாவியில் மீன்பிடிப்பது வழமை. ஊரவர்களுக்கு முதலையின் பிரசன்னம் வழமையாக தெரிந்து இருக்கும். தம்பாட்டில் சிறுவர்கள் எதேச்சையாக செய்யும் செயற்பாடுகள் ஆபத்தில் முடிந்து போகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.