Jump to content

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு


Recommended Posts

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.


modi4_0.jpg


அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில்,

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது.

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

ஏப்ரல் 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்.

அது மாத்திரமன்றி டோர்ச் லைட் அல்லது தொலைபேசி மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்குமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தியாவில் இதுவரை 2,567 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 72 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79199

Link to comment
Share on other sites

49 minutes ago, ampanai said:

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

இறையியல் என்பதும் ஒரு ஆயுதம், அதை மோடி என்றுமே கையாளுவதில் கில்லாடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ampanai said:

இறையியல் என்பதும் ஒரு ஆயுதம், அதை மோடி என்றுமே கையாளுவதில் கில்லாடி. 

மனிதன் உருவாக்கிய இந்த ஆயுதத்தை வைத்து மதவாதிகள் அரசியல்வாதிகள் மதமாற்றிகள் எப்படி எல்லாம் பயன் அடைகிறார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மனிதன் உருவாக்கிய இந்த ஆயுதத்தை வைத்து மதவாதிகள் அரசியல்வாதிகள் மதமாற்றிகள் எப்படி எல்லாம் பயன் அடைகிறார்கள் 😂

மனிதன் இறைவனை உருவாக்கினான் என்றால் மனிதனை யார் உருவாக்கியது? இயற்கை என்று சொல்லி தப்பிக்க கூடாது!!

Link to comment
Share on other sites

4 minutes ago, Eppothum Thamizhan said:

மனிதன் இறைவனை உருவாக்கினான் என்றால் மனிதனை யார் உருவாக்கியது? இயற்கை என்று சொல்லி தப்பிக்க கூடாது!!

மோடிதான் !

இல்லாவிட்டால், இப்படி சொல்வாரா எவ்வாறு வைரஸை அழிக்கலாம் என்று :' ஏப்ரல் 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்.' 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு...  வேலைக்கு போகமுடியாததால்,
கையில் காசு இல்லாமல், உணவுப் பொருளை வாங்க இயலாமல்....
வறிய குடும்பத்தை சேர்ந்த  பெற்றோரின் ஆறு வயது மகன்...
நான்கு நாள் சாப்பிடாமல்... இறந்து விட்டான். 

பட்டினியால் இறக்கப் போகும் ஏழை மக்களுக்கு ஒரு, மாற்று வழியையும் காட்டாமல்...
மோடி, வாயால்... வடை சுடுவதில்,  கவனம் செலுத்துவது அழகல்ல.

இதே போக்கில் போனால்...  கொரோனாவை விட, பட்டினிச்  சாவு அதிகரிக்கும்.

Link to comment
Share on other sites

3 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்பு...  வேலைக்கு போகமுடியாததால்,
கையில் காசு இல்லாமல், உணவுப் பொருளை வாங்க இயலாமல்....
வறிய குடும்பத்தை சேர்ந்த  பெற்றோரின் ஆறு வயது மகன்...
நான்கு நாள் சாப்பிடாமல்... இறந்து விட்டான். 

பட்டினியால் இறக்கப் போகும் ஏழை மக்களுக்கு ஒரு, மாற்று வழியையும் காட்டாமல்...
மோடி, வாயால்... வடை சுடுவதில்,  கவனம் செலுத்துவது அழகல்ல.

இதே போக்கில் போனால்...  கொரோனாவை விட, பட்டினிச்  சாவு அதிகரிக்கும்.

இந்தியாவில் உள்ள வசதி படைத்த மக்கள் பல நூறு மில்லியன்கள். 

இவர்கள் தான் முன்வரவேண்டும்... பட்டினி ச்சாவை தடுக்க.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் இல்லாத நாடு வேண்டுமென்றால் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.....காடு அழகாய் இருப்பதற்கு காரணம் அங்கு வலிமை குன்றிய விலங்குகள் வாழ்வதில்லை.வாழ முடிவதில்லை.....இந்த விடயத்தில் பல நாடுகளுக்கு கொரோனா ஒரு ஆயுதம்/கவசம்....தக்கன இதையும் கடந்து பிழைக்கும்.....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.