Jump to content

`மாஸ்க் அணியும் நாடுகளில் கொரோனா கட்டுப்படுத்தப்படுகிறதா?'-ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்


Recommended Posts

சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும்.

உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, 'காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும், சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும்' என்று அமெரிக்க சர்ஜன் ஜெனரல் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், மாஸ்க்குக்கு எந்தளவுக்குப் பங்கிருக்கிறது என்பது குறித்து எந்தவோர் ஆராய்ச்சியும் அதுவரை செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் 'முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றை எந்தளவுக்குக் குறைக்க முடியும்?' என்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டிருக்கிறது maskssaveslife இணையதளம்.

அவர்களின் ஆய்வு முடிவில், 'ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய நாடுகளே கொரோனாவின் நோய்த்தொற்றால் அதிக பாதிப்படைந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் முகக்கவசம் அணிவதில் காட்டிய அலட்சியம்தான். உலகளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேலும், 'பொதுவாகவே மாஸ்க் அணியும் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் ஜப்பானியர்கள். இவர்கள், உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களில், மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டிருக்கிறார்கள். இங்கு, மக்கள் தொகையில் வயதானவர்கள் அதிகம் என்பதால் நோய்த்தொற்று எளிதாகப் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புண்டு. ஆனால், தொற்று மற்றும் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவாக இருப்பது ஜப்பானில்தான். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,387. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய அதே நேரத்தில்தான் இங்கும் நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது.

மார்ச் 18 முதல் செக் குடியரசு, மக்கள் பொதுவெளியில் இருக்கும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியது. அங்கு இதுவரை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,942, மற்றும் 23 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது பாதிப்பு விகிதம் இங்கு மிகவும் குறைவு. இதற்குக் காரணம் அங்கு அமல்படுத்தப்பட்ட கட்டாய முகமூடி அணியும் சட்டம்தான்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

"முன்பு காய்ச்சல், சளி இருப்பவர்கள் மட்டுமே மாஸ்க் பயன்படுத்த அறிவுறுத்தினோம். தற்போது நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நிலைப்பாட்டை மெல்ல மெல்ல மாற்றிவருகிறோம். என்றாலும், மாஸ்க் அணிவதன் மூலம் 100% நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிவிட முடியாது. மாஸ்க் உபயோகம் முழுக்க முழுக்க தனிமனிதப் பாதுகாப்புக்காக மட்டுமே. எனவே, மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எந்த மாஸ்க் அணியவேண்டும் என்பதில் கவனம் தேவை. அதைச் சரியாகப் பராமரிப்பதும் அவசியம்.

N95, சர்ஜிக்கல் மற்றும் துணி என மூன்று வகையான மாஸ்க்குகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பொதுமக்கள் நிச்சயம் N95 மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது. நோய்த்தொற்று உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே N95 மாஸ்க்குகளை பயன்படுத்தவேண்டும். சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் சர்ஜிக்கல் மாஸ்க்கை, நோய்த்தொற்றாளர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழலிலிருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். அதைச் சரியான முறையில் அணியவும், அப்புறப்படுத்தவும் வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் இல்லாத பட்சத்தில், சுத்தமான, தரமான பருத்தித் துணியில் தயாரித்த மாஸ்க்குகளை உபயோகப்படுத்தலாம்" என்றவர்,

''மாஸ்க் அணிவதால் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிடலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கண்கள் வழியாகவும் பரவக்கூடும். மேலும், ஏரோசால்ஸ் (aerosols) எனும் சிறிய வைரஸ் துகள்கள் மாஸ்க்கிலும் ஊடுருவக்கூடும். இருப்பினும், கொரோனா வைரஸின் முக்கியப் பரிமாற்றப் பாதையாக இருக்கும் நீர்த்துளிகளைத் தடுப்பதில் மாஸ்க்குகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சரியான மாஸ்க்கை முறையாகப் பயன்படுத்துவது சிறந்தது'' என்றார் டாக்டர்.

https://www.vikatan.com/news/healthy/less-corona-prevalence-in-asian-countries-compared-to-western-countries

 

Link to comment
Share on other sites

இன்று, அமேரிக்காவின் வெள்ளிமாளிகை, முக உறை ஊடாக பரப்புதலை குறைக்க முடியும் என கூறியது. பிரதான வைத்தியான பாவ்ச்சி, இந்த முக உறை அணிபவரால் பரவுவதை, குறிப்பாக தமக்குள் கொவிட் 19 உள்ளது என தெரியவர்கள், குறைக்க முடியும் என்கிறார். 

குறிப்பு : அமெரிக்க நாட்டில், எல்லோரையும் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.  

 

 

CDC recommends Americans wear face masks voluntarily in public but some officials say they felt 'pressured' to draft new guidelines

 

The US Centers for Disease Control and Prevention is recommending people wear face coverings in public and health officials just reported the most deaths in a single day.

President Donald Trump announced the new guidelines Friday, saying it's a voluntary measure and people should not wear surgical or medical masks.
 
"It's really going to be a voluntary thing," he said. "I'm not choosing to do it."
 
But some public health experts at the CDC said they felt "pressured" by the White House to draft recommendations and were under "intense pressure" to do it quickly, according to a senior federal health official involved in discussions.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த மாஸ்க்தான் பாவிகின்றேன். ஒர் மாதம் தாக்குப்பிடிக்கும்

 

body-worn-devices-badge-covid-19.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.