Jump to content

உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்கமாட்டோம்! எழுந்தது கண்டனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்க மாட்டோம் என்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சு கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்பதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் சிங்கள மொழியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இடைவேளையின் போது முஸ்லிம்களின் சமய உயர் சபையை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்திருந்தார்.

பின்னர் அது பற்றி அவர் அளித்த முகநூல் வீடியோவில் முஸ்லிம்களே ஊரடங்கு சட்டத்தை மீறுகிறார்கள். இதனை முஸ்லிம்களுக்கு புரிய வைத்து அவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே இதனை பேசியதாகவும் கூறியிருந்தார்.

உண்மையில் நாம் அறிந்த வரை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இனவாதம் இல்லாத ஒரு அரசியல்வாதி. தமிழில் நன்கு உரையாற்றக்கூடியவர்.

முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகக்கூடியவர். அத்தகைய ஒருவரிடம் இருந்து இத்தகைய வார்த்தை வந்தமை மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்த அரசை ஆதரிக்கும் கட்சியாக உலமா கட்சி இருந்த போதும் இந்த அத்துமீறலை எம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

அத்துடன் முஸ்லிம்களில் சிலர் ஊரடங்கை மீறினால் அதை இனத்தை வைத்து ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதையும் ஏனைய ஊர்களில் நடைபெறும் மீறல்களை இனத்தை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வதையும் காண்கிறோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இன்று வரை சுமார் 143. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 30 பேர்தான்.

அவர்களின் ஊர்களான அட்டுளுகம, அக்குரணை, புத்தளம் என்பவற்றைத் தான் ஊடகங்கள் காட்டுகின்றனவே தவிர ஏனைய நூற்றுக்கணக்கான நோயாளிகள் யார் அவர்களின் ஊர்கள் எவை என்பது பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் ஊரடங்கை மீறியதால் கைது செய்யப்பட்டோர் கொழும்பு, கம்பஹா, களுத்துறை என பொலிஸ் சொல்கிறது. சுமார் பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்களா என கேட்கிறோம்.

இவர்கள் அனைவரும் எந்த இனங்களை சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சர் பகிரங்கமாக வெளியிடுவாரா? எந்த சமூகத்திலும் சுய புத்தி இல்லாத தறுதலைகள் இருக்கத்தான் செய்வர்.

அதற்காக ஒரு இனத்தை இழுத்து குற்றம் சொல்வது மிகப்பெரும் பிழையாகும். அத்தகைய பிழையை, அடிப்படையில் இனவாதியாக இல்லாத அமைச்சர் செய்தமை மிகவும் கவலையான விடயமாகும்.

ஆகவே இக்கருத்துக்காக அமைச்சர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருவதே முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140468

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்க மாட்டோம் என்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சு கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

ஒரு குரங்குச் சபையோட உலமா சபையை ஒப்பிட்டிருக்கார் சொறிலங்கா மினிஸ்டர்!

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

அதற்காக ஒரு இனத்தை இழுத்து குற்றம் சொல்வது மிகப்பெரும் பிழையாகும். அத்தகைய பிழையை, அடிப்படையில் இனவாதியாக இல்லாத அமைச்சர் செய்தமை மிகவும் கவலையான விடயமாகும்.

ஆகவே இக்கருத்துக்காக அமைச்சர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருவதே முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா துரை மகிந்தாவும் தம்பி துரை கோத்தாவும் மற்றையவர்களை இயக்கி பின்னால் மௌனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சமூகத்திலும் சுய புத்தி இல்லாத தறுதலைகள் இருக்கத்தான் செய்வர்.

தமிழரோடை தனகிறமாதிரி  வெளிக்கிட்டவர்....இப்ப அவங்கள்  குரங்குச் சபை என்று ..ஆக்கிட்டாங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்க மாட்டோம்

சிங்களத்தில் அடுக்கு மொழி உண்டா இல்லையா என்டு தெரியல ..

0.jpg

டைமிங் ஓகே..ஆனா ரைமிங் இல்ல..☺️..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.