Jump to content

கொரோனா குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்

April 4, 2020

பாறுக் ஷிஹான்

IMG_0212-800x600.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்கு மக்கள் சுகாதார துறையினர் ,அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர் என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

நாட்டில  தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றமை தொடர்பாக சனிக்கிழமை(4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

இந்த நாட்டிலே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் பொறுப்புள்ள பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த அசாதாரண சூழ்நிலை பயன்படுத்தி தொற்று நோய் குறித்து  பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் தயவுசெய்து நான் மதத் தலைவர் என்ற வகையில் கூறிக்கொள்வதில் இவ்வாறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு மக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒவ்வொருவரும் பொறுப்புவாய்ந்தவர்கள் என்ற ரீதியில் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தயவுசெய்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புவது நான் அசாதாரண சூழ்நிலை கொண்டு எடுத்துக் கொண்டு வரும்.

மேலும் அனைவரும் ஜனாதிபதியின் ஊடக துறை வழங்கும் செய்தியை மாத்திரம் ஏன் நம்ப வேண்டும்.பலர் இன்று மக்களை குழப்புவதற்காக பல்வேறு விடயங்களை பரப்பி வருகின்றனர் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை  மாத்திரம்  நம்பவேண்டும் இதன் மூலம் அரசாங்கம் சுகாதாரத்துறையினர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.வைத்தியர்கள் ஊழியர்கள் பொது சுகாதார உத்தியோகததர்கள் அவர்கள் தங்கள் உயிரை பார்க்காமல் துச்சமாக நினைத்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  ஊடகங்கள்   மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான விடயங்களை உடனுக்குடன் 24 மணித்தியாலமும் தெளிவுபடுத்தி  வருகின்றனர்.

விசேடமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் இளைஞர்கள் வெளியில் வந்து குழப்பமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தயவுசெய்து நாம் அனைவரும் அமைதியாக இருந்து உயிரை பாதுகாக்க வேண்டும் இதற்கு பாதுகாப்பு படையினருக்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வலிகள் தரும்  குழப்பமான செயல்களை செய்து வந்தால் உயிரை காப்பாற்ற முடியாது காரணம் உயிர்கள் செயல்களால் பெறுமதிமிக்க உங்கள் உயிர்கள் பலியாகும். தற்போது பாடசாலை கூட மூடப்பட்டு கல்வியியல் வீழ்ச்சியடைந்துள்ளது.நமது கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்தி நாம் மீண்டு வர முடியும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரை துச்சமாக நினைத்து உண்மையான செய்திகளை அரசை ஊடகங்களிலும் தனியாருடன் கவலை தெரிவித்துவருகின்றனர்.இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா  எனும் கொடிய அரக்கனை எமது நாட்டிலிருந்து இல்லாமல் செய்வோம்.கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் இருக்கின்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் உடனே நம் மக்களுக்கு சலுகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

நீங்கள் பிராந்தியத்தில் எடுத்த முடிவு ஜனாதிபதியின் ஊடகத்தின் ஊடாக வெளியிடப்பட்டதாக என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.எமது கல்முனை பிரதேசத்தில் மக்களுக்கு எந்தவித அசௌகரியங்களை ஏற்படாத வகையில் அரச படை வீரர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.ஊரடங்கு சட்ட காலத்தில் வீட்டில் இருக்கும் போதும் மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொண்டு செல்ல ஏதுவான வழிமுறைகளை செய்து கொடுக்க அந்த கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள மாணவர் சபையினர் மற்றும் ஏனைய துறையினர் முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில் கல்முனைப் பிராந்தியத்தில் பாரியதொரு பிரச்சினையாக இருந்த கல்முனை வடக்கு பிரதேச முதலமைச்சர் சம்பந்தமாக உன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம் ஒரு வருட காலம் ஒரே நிலையில் இதுவரை தீர்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.உண்ணாவிரதம் நிறைவடைந்து நான் விகாரைக்கு வரும்போதும் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பல உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வந்து  வாக்குறுதிகளை தந்துவிட்டுப் போன அந்த வாக்குறுதிகள்  பொய்யாகவே இருக்கின்றது. இன்றுவரை அந்த வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது எம்மை ஏமாற்றும் செயலாக இருக்கின்றது.

அதேபோன்றுதான் சாய்ந்தமருது நகர சபை பிரச்சனை வழங்கப்பட்டு மூன்றும் தடுத்து நிறுத்தப்பட்டது மக்களுக்கு அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.இந்த உண்ணாவிரதத்தில் சாகர் எனது உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தவன். அந்த வகையில் நிச்சயம் அந்த  எனது உயிருள்ள வரை அதற்காக போராடுவேன்.இன மத கட்சி பேதமின்றி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒரு மதத்திற்கு மட்டுமான நோய் அல்ல என்பதை உணரவேண்டும்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர கால சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியமில்லை ஜனாதிபதியிடம் அதிகாரம் உள்ளது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதனால்  யாராவது ஒருவருக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு மீண்டும் பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார். #கொரோனா #வதந்தி #ஊரடங்கு

 

http://globaltamilnews.net/2020/139984/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.