Jump to content

யாழ். அரியாலை ஆலயத்திற்கு சென்றவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தவும் - வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்


Recommended Posts

கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம் அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளனர் மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

https://www.virakesari.lk/article/79281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுவோரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரும்  அடையாளம் காணப்பட்டு  மிகக் கடுமையாத் தண்டிக்கப்படல் வேண்டும்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் அல்லுலோயா மதத்தில்  இருப்பவரின் வீட்டில் இந்த கூட்டத்துக்கு போய் வந்தவர் பெண்மணி ஒளித்து இருந்து காய்ச்சலுக்கு தாமாக வைத்தியம் பார்த்து முடியாமல் இன்று சுகாதாரத்திணைக்களத்துக்கு அறிவித்து அவர்களின் வண்டியில் முதல் அவ போயிருக்கின்றா .

எல்லாம் சரி இவவை வைத்து பராமரித்தவர்கள் மூலம் எத்தனை பேருக்கு கொரனோ  பரவியிருக்கும் ?

Link to comment
Share on other sites

அரியாலை பூசையில் கலந்து கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தற்பொழுது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

பூசை ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்களும் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாவடியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவரகளில் 18 பேருக்கு நேற்றையதினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளட்பட்டது இன்று மாலை பரிசோதனை அறிக்கை வெளிவரும் எனவும் அறிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தவறுவோரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரும்  அடையாளம் காணப்பட்டு  மிகக் கடுமையாத் தண்டிக்கப்படல் வேண்டும்.😡

நல்லது ஆனால் அவங்கள் வருவாங்களா என்பது சந்தேகமே 

இலங்கையில் அரசு மாணவர்களுக்கென அறிமுகப்படுத்திய சுரக்‌ஷா காப்புறுதி திட்டம்  மாணவர்கள் சுகவீனம் அடைந்தாலோ, சத்திரசிகிச்சை செய்தாலோ, அல்லது மாணவ மாணவிகளின் தாய் தந்தையர் இறந்தாலோ அவர்களுக்கு 2 லட்சம் வரைக்கும் காப்புறுதி பணம் வழங்கப்படும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட காப்புறுதி அட்டைகளை மாணவர்கள் அல்லது பெற்றோர் வந்து பொறுப்பெடுத்து கைஒப்பம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தல் கொடுத்தோம் மாணவிகளும் வந்து பெற்றுக்கொண்டார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் சில பெற்றோர்களால் நாங்கள் இதெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை , மருத்துவமும் செய்வதில்லை என்று காட்டை திருப்பி கொடுத்தார்கள். 

நானும் அதிபரிடமும் சொல்லி விட்டு காட்டை கைவசம் வைத்திருக்கிறேன் . இப்படியும் சில சபைகளும் ஆட்களும் இருக்கு 

நான் எதற்க்காக சொல்ல வருகிறேன் என்றால் இவர்களும் மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்களாக இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லது ஆனால் அவங்கள் வருவாங்களா என்பது சந்தேகமே 

இலங்கையில் அரசு மாணவர்களுக்கென அறிமுகப்படுத்திய சுரக்‌ஷா காப்புறுதி திட்டம்  மாணவர்கள் சுகவீனம் அடைந்தாலோ, சத்திரசிகிச்சை செய்தாலோ, அல்லது மாணவ மாணவிகளின் தாய் தந்தையர் இறந்தாலோ அவர்களுக்கு 2 லட்சம் வரைக்கும் காப்புறுதி பணம் வழங்கப்படும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட காப்புறுதி அட்டைகளை மாணவர்கள் அல்லது பெற்றோர் வந்து பொறுப்பெடுத்து கைஒப்பம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தல் கொடுத்தோம் மாணவிகளும் வந்து பெற்றுக்கொண்டார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் சில பெற்றோர்களால் நாங்கள் இதெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை , மருத்துவமும் செய்வதில்லை என்று காட்டை திருப்பி கொடுத்தார்கள். 

நானும் அதிபரிடமும் சொல்லி விட்டு காட்டை கைவசம் வைத்திருக்கிறேன் . இப்படியும் சில சபைகளும் ஆட்களும் இருக்கு 

நான் எதற்க்காக சொல்ல வருகிறேன் என்றால் இவர்களும் மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்களாக இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும் 

நீங்கள் சில கிறீத்துவ சபைகளின் பெற்றோரைக் கூறுகிறீர்களென நம்புகிறேன். இச் சபைகளின் (கொசுத்) தொல்லை சொல்லி மாளாது.  
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்,  யாழ் நகர் பாடசாலைகளிடையே  மிகவும் பிரபலமான விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு விசர் நாய் கடித்தது.  ஆனால் அவர்களின் மத நம்பிக்கைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.  அவர் கடுமையாக நோயுற்று இறந்தார். 

பாவம் இயேசுக் கிறீத்து. 😏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் போர்ச்சூழல், இடப்பெயர்வு. ஒரு பெண் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அவரை வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிக்காமல், கிணற்றை சுற்றி நின்று பெருங்குரலில் செபித்துக்கொண்டு இருந்தார்கள். தெருவில் போன ஒருவர், நிலைமையை உணர்ந்து கூடிநின்றவர்களை தள்ளிவிட்டு, தானே கிணற்றில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினார். அல்லேலூயா! 

Link to comment
Share on other sites

சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்

இலங்கையிலும் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 1300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம் எனவும் அந்த நேரத்திலே தான் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக் கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. அரியாலை ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையோடு விடுவிப்பதற்கு தயாரான நிலையில் இருந்தவர்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140670?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.