Jump to content

கொரோனா தொற்றாளரான கர்ப்பிணித் தாய் குழந்தை பிரசவிப்பு : பிரசவம் பார்த்த 6 பேர் தனிமைப்படுத்தல் ; பொருள் கொள்வனவால் தொற்றியதென சந்தேகம்


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் , மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு ( சைட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று பதிவானது,

கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி, பிரசவத்துக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 28 வயதான தாய், பிரசவ சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தாதியர், அத்தாயின் ஊர் பெயரைக் கோரி, அதில் ஏற்பட்ட சந்தேகத்தில் செய்த பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்று உறுதியாகும் போதும் குறித்த தாய் குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், பிரசவ சிகிச்சைகளுக்கு உதவிய குறித்த வைத்தியசாலையில் 6 தாதியர் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய, அக்குழந்தையின் இரத்த மாதிரி பொரளை மருத்துவ ஆய்வு கூடத்துக்கு அனுப்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த தாயும், குழந்தையும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கவென விஷேடமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாலபே, நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் மகேஷ் கருணாதிலக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் களுத்துறை - நகொட வைத்தியசாலை, பேருவளை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரின் தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது,

குறித்த 28 வயதான தாய் பேருவளை பன்வில பகுதியிலிருந்து சற்று தொலைவாக உள்ள கிராமமொன்றில் வசித்துள்ளார்.</p>
<p>நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று, அங்கு தனது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, கணவன், தாயாருடன் சென்றே களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக  அனுமதியாகியுள்ளார்.

அவ்வாறு வைத்தியசாலைக்கு உள் நுழையும் போது பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந் நிலையில், வைத்தியசாலை நுழைவின் போது குறித்த பெண் தனது முகவரியை பேருவளை - அம்பேபிட்டி என தனது தயார் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அந்த முகவரியே, பி.எச்.டி. அட்டையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் பிரசவத்துக்காக பிரசவ அறைக்கு அழைத்து செல்லும் போது தாதி ஒருவர் அப்பெண்ணிடம் ஊர் பெயரை வினவிய போது அவர் பன்வில என தெரிவித்துள்ளார்.

இதனால் தாதியர்கள் கலவரமடைந்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருவளை பகுதியில் முடக்கப்பட்ட பிரதேசமாக பன்வில காணப்படுவதே அதற்கான காரணம்.

இந்நிலையிலேயே அப்பெண்ணுக்கு கொரோனா தொடர்பிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போதே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக களுத்துறை - நாகொட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. எனினும் அப்போதும் அவர் குழந்தையை பிரசவித்திருந்துள்ளார்.

பின்னர் குறித்த தாய் தொடர்பில் விசாரணை செய்த போது, அப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட பன்வில கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் சுமார் 30 வீடுகள் வரை மிக நெருக்கமாக உள்ளமை அவதனைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி முடக்கப்பட்ட பகுதியல்ல என பிரதேச மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.

குறித்த தாய் வெளியே நடமாடுவது குறைவு எனவும், அனைத்து வெளித் தேவைகளையும் கணவரே பூர்த்தி செய்துள்ளமையையும் சுகாதார பாதுகாப்புத் தரப்பினர் தேடியுள்ள நிலையில் அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது என ஆராய்ந்து வருகின்ரனர்.

அத்தாயின் வீடு அமைந்துள்ள சபா ஸ்கீம் எனப்படும் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறிய கடை ஒன்றுக்கு பன்வில பகுதி மக்கள் பொருட் கொள்வனவுக்கு வருவதும், அக்கடைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்து சென்றுள்ளமை தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அக்கடை உரிமையாளர் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இந் நிலையில் அக்கடையிலேயே குறித்த தாயின் கணவர் பொருட்களை கொள்வனவு செய்வது தெரியவந்துள்ள நிலையில், கொரோனா தொற்றாளரால் பிடிக்கப்பட்ட பொருளொன்றினை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதன் ஊடாக அத்தாய்க்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகதாரத் துறையினர் சந்தேக்கின்றனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் சுகாதார தரப்பினர் தற்போது சபா ஸ்கிம் மக்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.

https://www.virakesari.lk/article/79284

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.