Jump to content

பிரித்தானிய அரசின் உத்தரவை மீறிவரும் மக்கள் - 5வயது குழந்தை உட்பட ஒருநாளில் 708 உயிரிழப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு.

இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக சிற்சில நாடுகள் மிக கடுமையான முடக்கல்களை அமுல்ப்படுத்தியிருந்தாலும் பிரித்தானியா கடுமையாக முடக்காதுவிடினும் மக்களுக்காக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

ஆனாலும் அதை மக்கள் செவிமெடுக்காது கடந்த மாதம் அன்னையர் தினத்துக்காக வெளியிடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காது ஒன்றாக பொது இடங்களில் கூடியிருந்ததை பிரித்தானிய ஊடகங்கள் வெளிக்காடி இருந்தமையை அடுத்து மீண்டும் அரசு மக்களை வீடுகளில் முடங்கியிருந்து மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்தி கொரோனா வைரஸ் பிடியில் சிக்குண்ட நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுமாறும் கேட்டிருந்தது.

safe.png

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் பிரதமர் உட்பட இன்னும் சில உயரதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரும் பிரித்தானியாவில் நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இன்றைய காலநிலை மிகவும் நன்றாக இருப்பதனால் பல இடங்களில் பொதுமக்கள் கூடி இருப்பதை மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் வெளிவிட்டிருக்கின்றன.

இவ்வாறு தொடரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதனால் பிரித்தானிய மக்கள் அரச அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது, கொரோனாவுக்கு பயப்படாது தத்தம் வேலைகளில் ஈடுபடுவதோடு வார இறுதி நாட்களில் சூரிய வெளிச்சத்திற்காக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவே முடியாது.

இதனாலேயே கொரோனா தொற்று இன்னும் அதிகமாக ஏற்படும் என்பதை அரசு அடிக்கடி சுட்டிக்காட்டினாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் பொலிஸாரால் அதைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/uk/01/242680?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

இந்த படங்களில் உள்ளவர்களுக்கு அதிகூடிய நம்பிக்கை தங்களுக்கு வருத்தம் வந்தாலும் வெண்டிலேற்றர்  கட்டாயம் இருக்குமென்று மீண்டும் படங்களை பார்க்கவும்  விடயம் புரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

இவர்களின் இந்த திமிருக்கான விலை ஏலவே கொடுக்கப்பட்டாயிற்று. இன்னும் கொடுக்கப் போகிறார்கள்.

சீனா.. 3300 போரோடு நிறுத்தியதை இவர்கள்.. 4200 தாண்டியும் நிறுத்த முயலவில்லை.

பிபிசி பிரித்தானியா சீனாவை விஞ்சி விட்டது குறித்து மூச்சும் விடவில்லை.

இவர்களின் திமிருக்கு.. 5 பேரூந்து ஓட்டினர்கள்.. 7 சுகாதார சேவையாளர்கள்.. விலை கொடுத்துள்ளனர் இதுவரை.

இன்னும் இந்த வகுப்பினரிடையே உயிழப்பு அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனரே தவிர கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தெளிவாக இல்லை.

பிரித்தானிய அரசின் இறுக்கமற்ற அணுகுமுறை.. பலியிடலை அதிகரிக்கும். புதிய தொற்றுக்களை குறைக்காமல்.. பலிகளை குறைக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

திமிருக்கான விலையை பிரித்தானியா கொடுக்க போகிறது

நியூயோர்க்கிலும் இது தான் நிலமை.

உண்மையில் இவர்கள் தான் காவிகள்.
 

14 minutes ago, nedukkalapoovan said:

இவர்களின் இந்த திமிருக்கான விலை ஏலவே கொடுக்கப்பட்டாயிற்று. இன்னும் கொடுக்கப் போகிறார்கள்.

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

என்னுடைய வேண்டுகோளும் அதுவே கவனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் காணப்பட்ட கூத்துக்களை ஜேர்மனியில் பார்ப்பது அரிது.
ஏதும் அவசர தேவையெண்டால் கடைக்கு போறம் ....வாங்குறம்...வாறம் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

படத்தில் காணப்பட்ட கூத்துக்களை ஜேர்மனியில் பார்ப்பது அரிது.
ஏதும் அவசர தேவையெண்டால் கடைக்கு போறம் ....வாங்குறம்...வாறம் அவ்வளவுதான்.

ஜேர்மனிகள் சாவுக்கு பயந்தவர்கள் பிரித்தானியர்கள் சாவை எதிர்கொண்டு சாவார்கள் 😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லு கேளாமல், வெளிய போய் வருத்தம் வந்தால், அவர்களது மருந்து செலவு, அவர்களே பொறுப்பு, அவர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் அரசு கழித்துக் கொள்ளும் என்று சொன்னால், வீட்டுக்குள் இருப்பார்கள். 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இந்த படங்களில் உள்ளவர்களுக்கு அதிகூடிய நம்பிக்கை தங்களுக்கு வருத்தம் வந்தாலும் வெண்டிலேற்றர்  கட்டாயம் இருக்குமென்று மீண்டும் படங்களை பார்க்கவும்  விடயம் புரியும் .

ஏன் ஆஸ்பத்திரியில் இன வேறுபாடு பார்க்கிறார்களா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் ஆஸ்பத்திரியில் இன வேறுபாடு பார்க்கிறார்களா?
 

அதெல்லாம் வெளியில் சொல்லப்படாது இன்னும் சொல்வது என்றால் ஆசியர்கள் கூட உள்ள பகுதி ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான மாஸ்க்குகள் கூட அனுப்பப்படவில்லை ஆனால் M 25 விட்டு வெளியே கதை வேறு பொதுவெளியில் ஓரளவுக்கு மேல சொல்ல முடியாது உங்களுக்கு தெரிந்த வைத்திய நிலையத்தில் வேலை பார்ப்பவர்களை கேட்டு பாருங்கள் குமுறி விழுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அதெல்லாம் வெளியில் சொல்லப்படாது இன்னும் சொல்வது என்றால் ஆசியர்கள் கூட உள்ள பகுதி ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான மாஸ்க்குகள் கூட அனுப்பப்படவில்லை ஆனால் M 25 விட்டு வெளியே கதை வேறு பொதுவெளியில் ஓரளவுக்கு மேல சொல்ல முடியாது உங்களுக்கு தெரிந்த வைத்திய நிலையத்தில் வேலை பார்ப்பவர்களை கேட்டு பாருங்கள் குமுறி விழுவார்கள் .

😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இந்த வீக்கன்டோட இறப்பு வகை  தொகையின்றி போகும் என்று சொல்லினம்...இத்தாலியை மிஞ்சிடுவம் போல இருக்கு😟 ...பாக்குகளையும் பூட்டப் போறார்களாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 23:13, ஈழப்பிரியன் said:

வணக்கம் நெடுக்கு
நீங்களும் வைத்திய சம்பந்தமான துறை என்று எண்ணுகிறேன்.
மிகவும் கவனமாக இருங்கள்.

 

On 4/4/2020 at 23:49, பெருமாள் said:

என்னுடைய வேண்டுகோளும் அதுவே கவனம் .

நன்றி உறவுகளே. கடந்த தைத் திங்களில்... சீனாவில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பிரித்தானியாவுக்குள் நோய் காவாளர்கள் வரத்தொடங்கி விட்டார்கள். அப்போதே நாம் எச்சரித்தோம்.. சரியான தடுப்பு protocols ஐ உடனடியா நிறுவி அமுல்படுத்துங்கள் இன்றேல்.. இது பாரதூரமான விளைவுகளை கொண்டு வரும் என்று. எமது வேலைத்தள.. நிர்வாகப் பொதுக்கூட்டத்தில் கூட இதனை வலியுறுத்தினோம். எமக்கான வழிமுறைகளை வரையச் சொல்லி கேட்டோம். ஆனால் அப்போது PHE இன் வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

ஆனால்... அன்று இதனை சாதாரணமாக எடுத்தவர்களும்.. ஆரம்பத்தில்.. covid -19 ஐ downgrade பண்ணி அரசுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் தவறே.. இத்தனை மரணங்கள். தொற்றுக்கள்.

குறிப்பாக.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. சீனாவில் பரவத்தொடங்கியதும்.. தம் தம் நாடுகளை பூட்டி விட்டார்கள். எல்லைகளை மூடிவிட்டார்கள். ஆனால்.. பிரித்தானியா.. இத்தாலியில் ஸ்பெயினில்... தொற்றுள்ளவர்கள்.. பிரித்தானியவுக்குள் வந்து பதுங்கும் வரை ஒரு உருப்படியான செயற்திட்டமும் இன்றி.. செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். 

நாங்கள் நேரடியாக.... covid-19 positive மாதிரிகளோடு வேலை செய்திருக்கிறோம். இதுவரை எந்தப் பெரிய பாதிப்பும் வரவில்லை. இது கெட்டித்தனம் அல்ல.. அதிஷ்டம் அவ்வளவே. குறிப்பாக ஆய்வுசாலைகளுக்கூடாக கொவிட் 19 பரவியதாக சான்றுகள் இல்லை. பொதுப் போக்குவரத்து மற்றும் பொது மக்கள் கூடும் அல்லது அடர்த்தியா உள்ள இடங்களில் பரவியது தான் அதிகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.