Jump to content

Recommended Posts

Tamilnadu-Corona-Situation.jpg

தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழகத்தில்-கொரோனாவால்-ம/

 

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 411 ஆக உயர்வு!

Coronavirus-affected-another-102-persons-in-Tamilnadu.jpg

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்ற நிலையில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்ற போது அதில் தமிழகத்தில் இருந்துசென்ற 1500 பேர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளத நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 411 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-மேலும்-102-பேரு/

 

தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது பீலா ராஜேஷ்

மாநில-சுகாதாரத்துறை-செயலாளர்-பீலா-ராஜேஷ்.jpg

தமிழ்நாட்டில், நேற்று(வெள்ளிக்கிழமை) 102 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர நுரையீரல் தொற்று உள்ளவர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, இதுவரையில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் சமுதாய தொற்றாக மாறவில்லை என உறுதிபடக் கூறியுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-2ஆம்-கட்டத்த/

Link to comment
Share on other sites

தமிழகத்திற்கு 510 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு!

Tamilnadu.jpg

கொரோனா தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் உட்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் அபாய மேலாண்மை நிதியின் கீழ் மத்திய அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது.

இந்த நிதியானது கொரோனா நோய்த்தடுப்பு மையங்களை அமைத்தல், கூடுதலாக ஆய்வகங்களை அமைத்தல், மருத்துவ உபகரணங்களை வாங்குதல், அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் இரண்டாம் திகதிவரை மொத்தம் 62 கோடியே 30 இலட்சம் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழகத்திற்கு-510-கோடியை-ஒத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளுக்கு நாள் பலி அதிகரிப்பு; தமிழகத்தில் பதுங்கி பாய்கிறதா? கொரோனா: வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

 

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மதுரையை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் நபராக பலியானார். இதையடுத்து நேற்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயது முதியவர் டெல்லி மத மாநாட்டிற்கு சென்ற திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் விவரம்:

1.  மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்..! (25/03/2020)

2. விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் உயிரிழந்தார் (04-/04/2020)

3. தேனியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் உயிரிழந்தார்(04-/04/2020)

4. சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர் உயிரிழந்தார் (02-/04/2020)

5. சென்னையில் சிகிச்சை பெற்று 61 வயது ஆண் உயிரிழந்தார் (05-/04/2020)

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576831

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.