Jump to content

தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.

 
 
 
தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப்
 
நியூயார்க்:
 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது. 
 
இதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ ரஷிய அதிபர் புதின் முன்வந்தார். 
 
இதற்காக, செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய சரக்கு விமான ரஷியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
 
நியூயார்க் வந்தடைந்த ரஷிய விமானத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
ரஷியா அமெரிக்காவுக்கு அனுப்பிய மருத்துவ உபகரணங்கள்
 
இதற்கிடையில், 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உக்ரேன், கிர்மியா விவகாரங்களின் போது அமெரிக்கா அரசு ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தது. 
 
ரஷியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் தடை விதித்தது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது. 
 
தங்கள் விதித்த தடைகளை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா ரஷிய நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத்தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 
 
ரஷிய அதிபர் புதின்
 
இந்நிலையில், நியூயார்க் நகருக்கு ரஷியா அனுப்பிய மருத்துவ உபகரணங்களில் வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அமெரிக்காவின் வர்த்தகத்தடை பட்டியிலில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
யூபிசெட் என்ற அந்த நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா தனது வர்தக தடைப்பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு வழங்கிய மருத்துவ உபகரணங்களில் செயற்கை சுவாசக்கருவி யூபிசெட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்படத்தக்கது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்

Link to comment
Share on other sites

22 minutes ago, உடையார் said:

தாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்

ஈரான் அமெரிக்க நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதிப்படுத்தினால் தடையை எடுப்பது பற்றி சிந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

தாங்கள் மட்டும் ஈரனுக்கு விதித்த தடையை எடுக்கமாட்டார்கள், எத்தனை தடவை கேட்டுவிட்டார்கள் . அவர்களும் இப்பூமியின் மக்கள்தான்

தாங்கள் கோமணத்துடன் நிற்பதால் எதையும் ஏற்பார்பார்கள் அமெரிக்கர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

ஈரான் அமெரிக்க நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதிப்படுத்தினால் தடையை எடுப்பது பற்றி சிந்திக்கலாம்.

உது என்ன நியாயம்? ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உது என்ன நியாயம்? ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான் 

தங்கச்சி! அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ரோசம் மானம் சூடு சுரணை கிடையாது.மனிதாபிமானமும் கிடையாது.
அதற்குத்தான் மனிதனுக்கு மெய்ஞானமும் வேண்டுமென்பது.எல்லோரையும் ஏற்றத் தாழ்வின்றி சகமனிதனாக மதிக்க சொல்வது ஆன்மீகம் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

7 hours ago, MEERA said:

தாங்கள் கோமணத்துடன் நிற்பதால் எதையும் ஏற்பார்பார்கள் அமெரிக்கர்கள்....

எங்களுக்கு உள்ள சுதந்திரம் உங்களுக்கு இல்லை.😀

4 hours ago, ரதி said:

உது என்ன நியாயம்? ...உங்களுக்கு தேவை என்றவுடன் வெட்கமில்லாமல் போய் எதிரியின் காலில் விழுகிறீர்கள்...அவர்களும் மனிதர்கள் தான் 

அவர்களும் வெட்கமில்லாமல் எங்கள் கால்களில் வந்து விழவேண்டியது தானே நியாயம்?  

1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி! அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ரோசம் மானம் சூடு சுரணை கிடையாது.மனிதாபிமானமும் கிடையாது.
அதற்குத்தான் மனிதனுக்கு மெய்ஞானமும் வேண்டுமென்பது.எல்லோரையும் ஏற்றத் தாழ்வின்றி சகமனிதனாக மதிக்க சொல்வது ஆன்மீகம் மட்டும்தான்.

ஆகவே, ஈரானியர்கள் அல்லாஹ்ஹிடம் தமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளட்டும், ஆன்மீகவாதிகள் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

எங்களுக்கு உள்ள சுதந்திரம் உங்களுக்கு இல்லை.😀

அவர்களும் வெட்கமில்லாமல் எங்கள் கால்களில் வந்து விழவேண்டியது தானே நியாயம்?  

ஆகவே, ஈரானியர்கள் அல்லாஹ்ஹிடம் தமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளட்டும், ஆன்மீகவாதிகள் தானே?

இதிலிருந்து உங்களுக்கும் ஆன்மீகம் என்றால் என்ன எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.