Jump to content

எப்போதும் முக்கியத்துவம் தராத நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன்?தூய்மைப்பணியாளர்கள் உள்ளக்குமுறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TamilNews_Apr_2020__949382960796357.jpg

சென்னை: எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கி வைக்கும் நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன் என தூய்மைப்பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.  இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடு தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்கள் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பல இடங்களில்  தூய்மைப்பணியாளர்கள் சேவையை பாராட்டி பொதுமக்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவப்படுத்தி வருகின்றனர். ஆனால், சமூகத்தில் ஏற்படும் இதுபோன்ற அவசர காலகட்டத்தில் மட்டுமே தூய்மைப்பணியாளர்களை பொதுமக்கள் மதிப்பதாகவும், மற்ற நேரங்களில் அவர்களை ஒதுக்கிவைத்து தீண்ட தகாதவர்கள் போல் பார்ப்பதாகவும்தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ‘ தூய்மைப்பணியாளர்கள் தெய்வங்கள்’ என்ற வாசகம் இயற்கை பேரிடரின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரத்தில் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மட்டுமே எங்களுக்கு முகக்கவசமும், கையுறைகளும் வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற நேரங்களில் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. சுகாதாரப்பணிகளில் ஈடுபடும்போது தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டால் கூட சிலர் கொடுப்பதில்லை. சரியான நேரத்திற்கு சாப்பாடு கூட இல்லாமல் வேலை செய்து வருகிறோம். தெருக்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையான குப்பை தொட்டிகள் இருக்கும்.

இதில் கூட பெரும்பாலான பொதுமக்கள் வகைபிரித்து குப்பையை போடுவதில்லை. ஒவ்வொரு தனிநபரும் செய்யவேண்டிய இந்த வேலையை கூட துப்புரவு பணியாளர்கள் மட்டுமே வகைபிரித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் தெருக்களில் குவியும் குப்பைகளை அகற்றுவது எவ்வளவு கஷ்டம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. இங்கு, ஆபத்தை கூட பொருட்படுத்தாமல்  தூய்மைப்பணிகளை மேற்கொண்டோம். ஆனால், இப்போது மட்டும் எங்களை கடவுள் போல் பார்த்து கொண்டாடுகின்றனர். நாட்டின் எதாவது ஒரு மூலையில் நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் கூட சென்னையில் பெண்  தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.   தூய்மைப்பணி என்பது பருவகால வேலையோ அல்லது பேரிடர் காலத்தில் உள்ள வேலையோ கிடையாது. இது நிரந்தரமான பணி. இதேபோல், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் இந்தியாவில் தான் உள்ளது. இதற்கு தடை சட்டம் இருந்தும் அது பின்பற்றப்படவில்லை. பேரிடர் காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. துப்புரவு பணி என்பது சமூகத்தின் உயிர்மூச்சு. யார் யாரோ போராட்டம் செய்கிறார்கள். எப்போதாவது  தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் செய்துள்ளார்களா. அப்படி போராட்டம் செய்தால் இந்த நாடு தூய்மையாக இருக்குமா என்பதை அனைவரும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போது கொரோனாவை வீழ்த்த உலக நாடுகள் உச்சரிக்கும் ஒரே சொல் ‘சுத்தமாக இருப்பது’. இந்த சொல்லை செயலில் காண்பிப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள். தனி நபர் கழிவு, மருத்துவ கழிவு, சாலையோர கழிவு, வீடுகளின் கழிவு, அலுவலக கழிவு என அனைத்து வகையான கழிவுகளையும் நாங்கள் மட்டுமே அகற்றுகிறோம். ஆனால், பணி நிரந்தரம் கூட இல்லாமல் வேலை செய்து வருகிறோம். எனவே, எங்களை அரசு நிரந்தர பணியாளர்களாக மாற்றி, ஊதிய உயர்வை அளிக்க வேண்டும். மேலும், பேரிடர் காலங்களில்  தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்பீட்டு வழங்க வேண்டும். மக்களும் துப்புரவு பணியாளர்களுக்கு பேரிடர் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து நேரங்களிலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

சென்னையில் 85 லட்சம் பேர் வசிக்கின்றனர்
மத்திய அரசின் கொள்கைப்படி 3  தூய்மைப்பணியாளர்கள் 1,000 நபர்களின் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், பேரிடர் காலங்களில் ஒரு  தூய்மைப்பணியாளர் சரியாக 1,200 நபர்களின் அனைத்து கழிவுகளையும் அகற்றுகிறார். நாள் ஒன்றுக்கு 700 கிலோ கழிவை ஒரு தூய்மைப்பணியாளர் அகற்றுகிறார்.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576778

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.