Jump to content

சிறையிலுள்ளவர்களின் சுகாதாரத்தினை பாதுகாக்க ஐ.சி.ஆர்.சி. நடவடிக்கை


Recommended Posts

கொரோனா வைரஸின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் உள்ள 24 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக சர்வதேச செஞ்சிலுவை குழுமத்தின் இலங்கை பேராயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை குழுவின் (ஐ.சி.ஆர்.சி) இலங்கை பேராயமானது பொதுமக்களையும், தடுத்து வைக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன், நீதி அமைச்சு. சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், ஏனைய அதிகாரிகள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

92498291_519658048750879_340502919872774

 

இதுதொடர்பில், ஐ.சி.ஆர்.சியின் இலங்கைக்கான பேராயத்தின் தலைவர் லுக்காஸ் பெட்ரிடிஸ் கூறுகையில், ஐ.சி.ஆர்.சியின் உலக பதிலளிப்புத் திட்டத்திற்கும் அவசர கோரிக்கைகளுக்கும் பங்களிப்பு நல்கும் நாம், கொரோனா தொடர்பாக அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவி செய்வதற்கு ஏற்புடைய வகையில் எமது நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். பொதுச் சுகாதாரம், தடயவியல், தடுப்புக்காவலில் சுகாதாரம், தொற்றுநீக்கம், கழிவு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் எமது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியுள்ளோம்.

>இலங்கையில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 1989ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.சி.ஆர்.சி விஜயம் செய்து வருகிறது. அத்தகைய தடுப்புக் காவல்களில் ஆட்கள் நடத்தப்படும் விதத்திற்கும், அவற்றின் நிலைமைகளுக்கும் அதிக முன்னுரிமை வழங்குகிறது. இலங்கையில் உள்ள 24 சிறைச்சாலைகளுக்கும், ஐந்து பிரதான பொலிஸ் தடுப்பு நிலையங்களுக்கும் கடந்த மார்ச் 22ஆம் திகதி சுகாதாரப் பொருட்களையும், தனிநபர் பாதுகாப்புக் கருவிகளையும் ஐ.சி.ஆர்.சி. விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த விநியோக நடைமுறையில் வழங்கப்படும் பொருட்களின் பயன்பாடு பற்றியும், முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் உரிய அதிகாரிகளுடன் துணையுடன் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கும், தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகிக்கத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக எமது குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதுவரையில், நாடு முழுவதும் 20,000 இற்கு மேலான பயனாளிகளுக்கு நாம் உதவிகளை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எமது முயற்சிகளில் இருந்து பின்வாங்கவோ, மந்தமடையவோ முடியாது என்பதை நாம் அறிவோம். துரிதமாக தீவிரம் பெற்று வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தேவைகளையும், முன்னுரிமைகளையும் சிறப்பாக புரிந்து கொண்டு, எவ்வளவு சிறப்பாக நாம் அதிகாரிகளுக்கு பங்களிப்பு வழங்க முடியும் என்பதை மதிப்பிடுவதற்காக, அடுத்து வரும் வாரங்களில் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/79292

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.