Jump to content

கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்…

April 4, 2020

 

No-Chance-800x601.jpgகொரோனாவைரஸ் ஓர் உலகப் பொதுஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஓர் அறிவிப்பைவெளியிட்டார. உலகம் முழுவதிலும் போரில் ஈடுபடும் தரப்புகள் தங்களுக்கிடையே யுத்த நிறுத்தத்துக்குப் போக வேண்டும் என்று அந்த அறிவிப்பு கேட்டிருந்தது.

ஆனால் உலகப் பேரரசான ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த ஒரு பின்னணியில்  ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை போரில் ஈடுபடும் தரப்புக்கள் பெருமளவுக்கு பொருட்படுத்தவில்லை என்றே தோன்றியது.

உதாரணமாக இந்தியாவில் சதீஷ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் போராளிகள் இந்தியதுருப்புகளின் மீதுதாக்குதல் தொடுத்துக் கிட்டத்தட்ட பத்துக்கும் குறையாத படைவீரர்களை கொன்றிருந்தார்கள. அதற்குப்பின் ஆபிரிக்காவில் நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தால் ஏழுபதுக்கும் குறையாத நைஜீரிய துருப்புகள் கொல்லப்பட்டார்கள். அதற்கும் சற்று பிந்தி கடந்தவாரம் தலிபான்கள் ஆப்கான் அரசதுருப்புகளின் மீதுதாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். ஏற்கனவே அங்குயுத்த நிறுத்தம் உண்டு. அது இந்தஆண்டில் ஒரு பெரிய அடைவாக காட்டப்பட்டது. அதனால் யுத்தநிறுத்தம் இருக்கத்தக்கதாகவே தலிபான்கள் ஆப்கான் துருப்புக்கள் மீது தாக்குதலை நடாத்திச் சிலரைக் கொன்றிருக்கிறார்கள். வடகொரியா வழமைபோல ஏவுகணைச் சோதனைகளை செய்துகொண்டிருக்கிறது.

அல்கைதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ்சும் கொரோனா வைரஸை கடவுளின் ‘மிகச் சிறிய சிப்பாய்’என்று கருதுவதாக தெரிகிறது. அல்கொய்தாவின் ஆதரவாளர் ஒருவர் ஒண்லைன் உரையாடல்களின் போது கொரோனாவைரஸ் ஆனது ‘அல்லாவின் சிப்பாய்’ என்று வர்ணித்திருக்கிறார். இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முன்னெடுத்து வரும் போருக்குஎதிராககடவுளின் கோபம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது என்ற தொனிப்பட அல்கைதாவும் ஐ.எஸ்.ஐ.எஸ்சும் கருத்து கூறியுள்ளன.செப்டம்பர் 11 தாக்குதலின் போது கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் மொத்தத் தொகையைவிட அதிக தொகையினர் கடந்தவாரத்தில் மட்டும் கொரோனாவைரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள. எனவே அந்தவைரஸை கடவுளின் மிகச்சிறிய சிப்பாய் என்றுஅல்காய்தாவின் பிரச்சாரஏடாகிய அஸ்ஸகாப் (As-Sahab) வர்ணித்துள்ளது.

அதாவது ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கேட்டுக் கொண்டபின்னரும் கூட கொரோனா வைரஸினால் இதுவரை ஜம்பதினாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் கூடபோரில் ஈடுபடும் தரப்புக்கள் போரை நிறுத்ததயாரில்லை. போருக்கு காரணமான பகைமையும் குறையவில்லை. ஒரு வைரசுக்கு எதிராகஉலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் ஒருகாலகட்டத்தில் தங்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒத்தி வைத்து யுத்தநிறுத்தத்துக்கு போக பெரும்பாலான தரப்புக்கள் தயாரில்லை.

இதில் விதிவிலக்காக கொலம்பியாவில் அரசுக்கு எதிராக போராடும் அமைப்பாகிய தேசிய விடுதலை ராணுவம் (ELN) ஒருதலைப்பட்சமாக ஏப்ரல் மாதம் முழுவதுக்கும் யுத்தநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. இதுமிகஅரிதான ஒரு புறநடை.

ஆனால் பொதுப் போக்கு எதுவென்று பார்த்தால் ஓர் உலகப் பேரிடரின் போதும் உள்நாட்டுப் போர்கள் நிறுத்தப்படவில்லை என்பதுதான். போர்கள் மட்டுமல்ல உலகின் பொதுவான வணிக மனோநிலை மாறவே இல்லை. ஓர் உலகப் பொதுப் பேரிடரின் போதும் வியாபாரிகள் இரங்கவில்லை. உலகம் முழுவதிலும் வர்த்தக நிலையங்களில் வரிசையாகக் காத்திருக்கும் மக்கள் வழமையைவிடக் கூடுதலான விலைகளைக் கொடுத்தே பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது. அனர்த்தகாலச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒன்றுதான்.

பெருந் தமிழ்ப் தரப்பில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கொரோனாக் காலம் விலைகளை கூட்டியிருக்கிறது. பொருட்களைப் பதுக்கியிருக்கிறது. நாட்டில்,வீட்டுக்குவரும் வியாபாரிகளில் மிகச் சிலரைத் தவிர அதிகமானவர்கள் கொள்ளைக்காரர்களாகவே தெரிகிறார்கள். எல்லாவற்றுக்கும் அறாவிலை. இலங்கை அரசாங்கம் மீன் டின்னுக்கும் பருப்புக்கும் முட்டைக்கும் விலையை குறைத்தது. அதிலிருந்து தொடங்கி நிவாரணத்துக்கு வழங்கக் கூட பருப்பைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பதுக்கிவிட்டார்கள்.

முட்டையை, பருப்பை, டின் மீனைஅரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்த விலைக்கு விற்க எந்த ஒருவியாபாரியும் தயாரில்லை. அப்படி விற்பதால் வரும் நட்டத்தை யார் பொறுப்பது என்று கேட்கிறார்கள். அரசாங்கம் ‘சதோசா’ விற்குமட்டுமே மானியம் கொடுக்கிறது. எங்களுக்கு தரவில்லை. நாங்கள் வாங்கிய விலைக்குத்தான் பொருட்களை விற்கலாம். என்றுஅவர்கள் கூறுகிறார்கள். முட்டைகிடந்து அழுகினாலும் பரவாயில்லை என்று கருதும் வியாபாரிகளுடைய இதயத்தை கொரோனாவைரஸ் இன்னும் கரைக்கத் தொடங்கவில்லை.

இதுதான் நிலைமை. ஒருலகப் பொதுப் பேரிடர் ஆனது எல்லாவற்றையும் உடனடியாக மாற்றிவிடவில்லை. வியாபாரிகள் மட்டுமல்ல சிங்களத் தலைவர்களும் திருந்தமாட்டார்கள் என்பதைத் தான் கொரோனாவைரஸ் நிரூபித்திருக்கிறது.

உலகம் முழுவதும் சமூக இடைவெளி பற்றியும் தனிமைப்படுத்தல் பற்றியும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தும் விதத்திலும் இன இடைவெளியை அதிகப்படுத்தும் விதத்திலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருகுற்றவாளியான சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்திருக்கிறது.

படைக் கட்டமைப்புக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையிலான உறவு சீமெந்தினால் கட்டப்பட்ட ஒன்று. படைத் தரப்பைத் தண்டிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ முடிவாக அக்குற்றங்களை செய்யுமாறு அரசியல் தீர்மானம் எடுத்த ராஜபக்சக்களை தண்டிப்பதுதான். ஏனவே ராஜபக்சக்கள் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்ததிலிருந்து படைத் தரப்பைத் தண்டிக்கப்பட முடியாத ஒருதரப்பாகக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள். ஏனெனில் படைத் தரப்பை தண்டனையிலிருந்து பாதுகாத்தால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக ராஜபக்ச சகோதரர்களையும் தண்டனையிலிருந்து பாதுகாத்துவிடும் என்றுஅவர்கள் நம்புகிறார்கள்.

கோத்தாபய ஜனாதிபதியான பின் நாட்டின் முக்கியதிணைக்களங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு கீட்பட்டதாக மாற்றினார். சவேந்திரசில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்தது. ஆனால் ராஜபக்சக்கள் இறங்கிவரவில்லை. அமெரிக்கத் தடைக்கு எதிரான நடவடிக்கைஎன்று கூறிக்கொண்டு ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்கள். அதுமட்டுமல்ல சிவில் கட்டமைப்புகளுக்கும் ஓய்வுபெற்ற படைப் பிரதானிகளைப் பொறுப்பாக நியமித்தார்கள். அண்மையில் கூட மேல் மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் வான் படைத் தளபதிநியமிக்கப் பட்டிருக்கிறார். இவ்வாறு ராஜபக்சக்கள் நாட்டைமேலும் மேலும் படைமயப்படுத்தி வந்த ஒருபின்னணியில் தான் கொரோனாத் தாக்கம் பரவியது.

இதுவிடயத்தில் கொரோனா அவர்களுக்கு விழுந்த ஒரு லொத்தர். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் படையினரிடம் கையளித்ததன் மூலம் இறுதியிலும் இறுதியாக கொரோனாவை வெற்றி கொள்ளும் பொழுது அந்த புகழ் அனைத்தும் படைத்தரப்புக்கே சேரும். இதன் மூலம் படைத்தரப்புக்கு வெள்ளை அடிக்கலாம்.

இவ்விதமாக படைத்தரப்பைப் பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சிநிரலின் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு படைவீரருக்கு கொரோனாக் காலத்தில் அரசாங்கம் மன்னிப்பு வழங்கி இருக்கிறது. தமிழ்மக்களின் கவனமும் உலகத்தின் கவனமும் ஒருவைரைசின் மீது குவிந்து இருக்க அந்தவைரஸை வெற்றிகொள்ளும் நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கும் படைத் தரப்பை மகிழ்விக்கும் விதத்தில் சுனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இதன் மூலம் ஓர் உலகபேரிடரின் போதும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எதையும் கற்றுக் கொள்ளாது என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இலங்கைத்தீவு இரண்டுஉலகப் பொதுப் பேரிடர்களை சந்தித்திருக்கிறது. முதலாவது சுனாமி. இப்பொழுது கொரோனா.

சுனாமியிலிருந்து இந்தோனேசிய அரசும் அதற்கெதிராக போராடிய அச்சேமக்களும் பெற்றுக் கொண்ட படிப்பினைகளின் விளைவே அங்கு ஏற்பட்ட சமாதான உடன்படிக்கைஆகும. ஆனால் இலங்கைத் தீவு சுனாமிப் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தோல்வியுற்றது. இப்பொழுதும் கொரோனாத் தாக்கத்திலிருந்து அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கொரோனாவுக்குப் பின்னரான இலங்கைதீவில் பெரும்பாலும் படைத் தரப்பைக் கொண்டாடும் ஓர் அரசியலே கோலோச்சும். அதாவது போர்க் குற்றங்களை மறைக்கின்ற,போர்க் குற்றவாளிகளை மன்னிக்கின்ற ஓர் அரசியல் சூழல். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயாரற்ற ஓர் அரசியல் சூழல். சுனில் ரட்நாயக்காவிற்கு வழங்கப்படட மன்னிப்பு கொரோனாவுக்குப் பின்னரானஅந்தஅரசியலுக்குக் கட்டியம் கூறுகிறதா?

‘கோவிட-19 உம் இனவாதமும் சாவுக்கேயான தொற்றுநோய்கள். அவற்றைப் பற்றிப்பிடிக்கக் கூடியவர்களை அவைத் தொற்றிக் கொள்ளும். நாங்கள் அவற்றில் ஒன்று பரவக் கூடிய வழிகளைப் பூட்டிவிட்டோம். ஆனால் முரண்பாடான விதத்தில் மற்றொன்று பெருக்கெடுத்தோடும் வழிகளைத் திறந்துவிட்டுள்ளோம்’ என்று அண்மையில் கரு ஜயசூரிய கூறியிருக்கிறார். அப்படியென்றால் தெருக்களை மூடி கிராமங்களை மூடி நகரங்களைமூடி மாவட்டங்களை மூடி கொரோனாவை வெற்றிகொண்ட பின்னரும் நாடு பெருக்கெடுத்தோடும் இனவாதத்தால் இறுதியிலும் இறுதியாகத்தோற்கடிக்கப்பட்டுவிடுமா?
 

http://globaltamilnews.net/2020/140064/

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

முட்டையை, பருப்பை, டின் மீனைஅரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்த விலைக்கு விற்க எந்த ஒருவியாபாரியும் தயாரில்லை. அப்படி விற்பதால் வரும் நட்டத்தை யார் பொறுப்பது என்று கேட்கிறார்கள். அரசாங்கம் ‘சதோசா’ விற்குமட்டுமே மானியம் கொடுக்கிறது. எங்களுக்கு தரவில்லை. நாங்கள் வாங்கிய விலைக்குத்தான் பொருட்களை விற்கலாம். என்றுஅவர்கள் கூறுகிறார்கள். முட்டைகிடந்து அழுகினாலும் பரவாயில்லை என்று கருதும் வியாபாரிகளுடைய இதயத்தை கொரோனாவைரஸ் இன்னும் கரைக்கத் தொடங்கவில்லை.

இந்த பதுக்கல் சிக்கலுக்கு இன்றுவரை இலங்கை அரசு தீர்வை காணவில்லை, காணப்போவதும் இல்லை. ஒரு காரணம், இந்த பதுக்கல் அதில் வரும் பணம் என்பனவற்றில் இந்த முதலைகளில் சில பங்குதாரர்கள். 

புலம்பெயர் தேசங்களில் பதுக்கல் இருந்தாலும், அவை நீடிப்பது இல்லை. அதேவேளை, சில அத்தியாவசிய உணவு பொருட்களை அரசு உற்பத்தியாளர்களுக்கு விலை உறுதியை வழங்கி உற்பத்தியாளர்களை வங்குரோத்து நிலைக்கு போகாமல் உதவுகின்றது.  

1 hour ago, கிருபன் said:

இதுவிடயத்தில் கொரோனா அவர்களுக்கு விழுந்த ஒரு லொத்தர். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் படையினரிடம் கையளித்ததன் மூலம் இறுதியிலும் இறுதியாக கொரோனாவை வெற்றி கொள்ளும் பொழுது அந்த புகழ் அனைத்தும் படைத்தரப்புக்கே சேரும். இதன் மூலம் படைத்தரப்புக்கு வெள்ளை அடிக்கலாம்.

கொவிட் 19 இனை வெற்றி கொள்ளல் என்பது ஒரு இலகுவான விடயமாக இருக்கப்போவதில்லை. எனவே, கணிசமான அளவு எதிர்ப்பையும் இராணுவ கட்டமைப்பு சந்திக்கலாம். 

அவ்வாறே இலகுவாக வெற்றி  பெற்றாலும், வரும் பொருளாதார நெருக்கடிகள் மக்கள் மத்தியில் அரசு மீது நெருக்கடிகளை உருவாக்கும். குறிப்பாக, விலைவாசி மக்களின் வாழ்வாதாரத்திற்கு சவாலாக  இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.