Jump to content

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


 

 

 

 

 

 

We finally got some good news today.

The Chinese government helped facilitate a donation of 1,000 ventilators that will arrive in JFK today.

I thank the Chinese government, Jack Ma, Joe Tsai, the Jack Ma Foundation, the Tsai Foundation and Consul General Huang.

 
 
 
 

 


 


latest tamil news


 

 

நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது:
வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போதே நியூயார்க்கில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிப்பு அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும்.
இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1,000 வென்டிலேட்டர்களை அனுப்பி உதவியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவும் நிலையிலும், அமெரிக்காவிற்கு சீனா உதவியுள்ளது. இதற்காக, சீனாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


latest tamil news


 

 

 

 

முகக்கவச ஏற்றுமதிக்கு தடை


இந்நிலையில், அமெரிக்காவின் '3எம்' நிறுவனம் தயாரிக்கும், 'என்95' ரக முகக் கவசங்களைக் கனடா மற்றும் லத்தீன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
'இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது. இது அமெரிக்க செய்யும் 'பெரும் தவறு' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

 


 

latest tamil news


 


'உலக நாடுகள் அனைத்தும் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை அழித்தொழிக்க முடியும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதற்கு இணங்க, சீனா செயல்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2515670

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிதம் தெரியாத டொனால்ட் ரம்ப்....கிட்லரை விட மோசமான மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் வாழ்கின்றார்கள். இதற்குள் நான் பெரிது நீ சிறிது என்ற தம்பட்டம் வேறு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

ஏற்கனவே அவர்களின் chinese debt trap(கடன் கொடுத்து தமது பொறிக்குள் வீழ்த்துவது ) தந்திரம் முற்று முழுதாக பயனில்லை அல்லது பயன் கொடுக்கவில்லை  என்கிறார்கள் .

உலகு இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீளும் போது decouplingதான் எல்லா பொருளுக்கும் அவர்களை நம்பி இருப்பை தவிர்க்க முயட்சி எடுப்பார்கள் .

Link to comment
Share on other sites

அனைத்து விதமான மருத்துவ உபகரணங்ளையும் இனி கனடாவே தயாரிக்கும் என்றும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னொரு நாட்டில் இனித் தங்கியிருக்க போவதில்லை என்றும் ருடோ அறிவித்துள்ளார். ஒன்ராரியோ முதலமைச்சரும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமும் சலுகையும் அறிவித்துள்ளார்.

மிதமிஞ்சிய இயற்கை மற்றும் காடுகளின் வளமும்  நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சனத்தொகையும் கொண்ட நாம் / கனடா நிச்சயம் அமெரிக்காவின் இந்த துரோகத்தில் இருந்து மீண்டும் சுய சார்பு கொண்ட நாடாக மிளிர்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.