Jump to content

யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு

Report us Vethu 5 hours ago

கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/security/01/242722?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இன்னும் 200 ஆ இப்பவே கண்ண கட்டுதே அப்ப வடமாகாணம் வழமைக்கு திரும்ப சான்சே இல்ல

Link to comment
Share on other sites

15 hours ago, பெருமாள் said:

இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருட்டுக் கூட்டம் எப்ப வெளிவருமோ அல்லது பிடிபடுமோ தெரியல்ல?

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடப்பாவிகளா இன்னும் 200 ஆ இப்பவே கண்ண கட்டுதே அப்ப வடமாகாணம் வழமைக்கு திரும்ப சான்சே இல்ல

ம்ம்ம். அதான் நடக்கும்!
இந்த கோஷ்டியோட இனி கொஞ்ச நாளைக்கு யாரும் பழகாமல் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

அடிப்படையிலிருந்து வந்த கிறிஸ்தவன் கூட இவங்களை வெறுக்கிறான்  ஏனென்றால் அவங்களை கூட சாத்தான் என்று சொல்கிறார்களாமே  என்று என்னுடன் பழகும் ஓர் ஆசிரியர் சொல்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

கலைத்துக் கலைத்து அடி போடுவாங்கள்  என்பது  தவறுதலாக அடி போடுங்கள் என வந்துவிட்டதோ ? 🤔

12 hours ago, Rajesh said:

திருட்டுக் கூட்டம் எப்ப வெளிவருமோ அல்லது பிடிபடுமோ தெரியல்ல?

ம்ம்ம். அதான் நடக்கும்!
இந்த கோஷ்டியோட இனி கொஞ்ச நாளைக்கு யாரும் பழகாமல் இருக்க வேண்டும்.

உங்களிடம் எதைத் திருடினார்கள் ?  😜

வெட்கத்தையோ ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்துஎத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். சிலரிடம்  கொரோனா தொற்று இருந்திருக்கிறது. சிலருக்கு இங்கு வந்த பின் தொற்றி இருக்கிறது. சிலருக்கு இவர்களிடம் இருந்து தொற்றி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் இறந்திருக்கிறார். அல்லது அவருடன் பழகியவர் இறந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டக்கூடாது. கொரோனாவின் தாக்கம் இப்போ எல்லோருக்கும் தெரியும். அந்த நிலையில் தொற்று உள்ள ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து  வெளிநாட்டில் இருந்து வந்திருப்பாரா? தென்பகுதியில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள். நீர்கொழும்பில் இறந்தவர் ஒரு இஸ்லாமியர். அவர் இந்த ஜெபக்கூட்டத்துக்கு போனவரா? நீங்கள் சொல்லும் போதகர் சுவிஸ் போனபின் அல்லது போகும்போது தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம். அவர் இறக்கவில்லை. அவரால் பரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட யாரும்  இதுவரை இறக்கவில்லை. சந்தோசப்படுவோம். ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறோம்.  பராமரிக்கப்படும் இடங்களிலே இவர்களுக்கு  தொற்று ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. சரி. இப்படியான தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

வெளிநாட்டில் இருந்துஎத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். சிலரிடம்  கொரோனா தொற்று இருந்திருக்கிறது. சிலருக்கு இங்கு வந்த பின் தொற்றி இருக்கிறது. சிலருக்கு இவர்களிடம் இருந்து தொற்றி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் இறந்திருக்கிறார். அல்லது அவருடன் பழகியவர் இறந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டக்கூடாது. கொரோனாவின் தாக்கம் இப்போ எல்லோருக்கும் தெரியும். அந்த நிலையில் தொற்று உள்ள ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து  வெளிநாட்டில் இருந்து வந்திருப்பாரா? தென்பகுதியில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள். நீர்கொழும்பில் இறந்தவர் ஒரு இஸ்லாமியர். அவர் இந்த ஜெபக்கூட்டத்துக்கு போனவரா? நீங்கள் சொல்லும் போதகர் சுவிஸ் போனபின் அல்லது போகும்போது தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம். அவர் இறக்கவில்லை. அவரால் பரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட யாரும்  இதுவரை இறக்கவில்லை. சந்தோசப்படுவோம். ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறோம்.  பராமரிக்கப்படும் இடங்களிலே இவர்களுக்கு  தொற்று ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. சரி. இப்படியான தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

போதகர் மத போதனை செய்ததல்ல பிரச்சனை. மிகவும் இக்கட்டான கால கட்டத்தில் கூட்டம் கூட்டியதுதான் பிரச்சனை. 

ஆனால் தற்போது கூட்டம் கூடியது மறக்கப்பட்டு மத போதனை முன்னிலைப் படுத்தப்படும் போக்கு  தெரிகிறது.

உண்மையில் போதகரின் ஒன்றுகூடல் நடந்திராவிடின் வடபுலத்தில் கொறோனாவின் தாக்கம் பூச்சியமாக இருந்திருக்க சந்தர்ப்பம் அதிகம். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் முதலிலேயிருந்தாtw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

எங்களுக்குஎல்லாம்  மறதி கூடி போச்சு உதயனில் கொரோனோவில்  இருந்து விடுதலை என்று போட்டுத்தானே விளம்பரமே வந்தது ?

அதுக்கு முதலே கூட்டம்கள் ஒன்று கூடல்கள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்று அறிவித்து உள்ள நிலையில் அதாவது எல்லாம் தெரிந்தும் வீம்புக்கு கூட்டம்  கூட்டி நோயை  பரப்பி உள்ளீர்கள் மிக முக்கியம்  போதகருக்கு  உடம்பு சுகமில்லை என்று தெரிந்தும் இருக்கிறது .இந்த கேவலத்தில் கொர்னோவில்  இருந்து விடுதலை என்று விளம்பரம் வேறை , நடந்தது  ஒரு மோசமான செயல் காகம் இருக்க பணம் பழம்  விழுந்துவிட்டது இப்ப சொல்லி மழுப்ப  வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

எங்களுக்குஎல்லாம்  மறதி கூடி போச்சு உதயனில் கொரோனோவில்  இருந்து விடுதலை என்று போட்டுத்தானே விளம்பரமே வந்தது ?

அதுக்கு முதலே கூட்டம்கள் ஒன்று கூடல்கள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்று அறிவித்து உள்ள நிலையில் அதாவது எல்லாம் தெரிந்தும் வீம்புக்கு கூட்டம்  கூட்டி நோயை  பரப்பி உள்ளீர்கள் மிக முக்கியம்  போதகருக்கு  உடம்பு சுகமில்லை என்று தெரிந்தும் இருக்கிறது .இந்த கேவலத்தில் கொர்னோவில்  இருந்து விடுதலை என்று விளம்பரம் வேறை , நடந்தது  ஒரு மோசமான செயல் காகம் இருக்க பணம் பழம்  விழுந்துவிட்டது இப்ப சொல்லி மழுப்ப  வேண்டாம் .

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை தனிமைப்படுத்தல் இல்லாமல் விட்டவர்கள் நோயின் தீவிரத்தை அறியாதவர்களா? அறிவித்தல் போட்டவர்களை மீறி இந்தக்கூட்டம் நடந்திருக்கிறது.அப்போ அறிவித்தல் போட்டதன் காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்ட்டவர்கள் கூட்டத்தை தடுக்கவில்லை? இத்தனையையும் மீறி ஒரு கூட்டம் விரும்பி பங்குபற்றி இருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அது அவர்களை கைவிடாமல் இருக்கோணும். அதுமட்டுமில்லை பயமில்லாமல்  இன்னும் மறைந்து இருக்கிறார்கள். புதுமை ஏதும் நடந்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை தனிமைப்படுத்தல் இல்லாமல் விட்டவர்கள் நோயின் தீவிரத்தை அறியாதவர்களா? அறிவித்தல் போட்டவர்களை மீறி இந்தக்கூட்டம் நடந்திருக்கிறது.அப்போ அறிவித்தல் போட்டதன் காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்ட்டவர்கள் கூட்டத்தை தடுக்கவில்லை? இத்தனையையும் மீறி ஒரு கூட்டம் விரும்பி பங்குபற்றி இருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அது அவர்களை கைவிடாமல் இருக்கோணும். அதுமட்டுமில்லை பயமில்லாமல்  இன்னும் மறைந்து இருக்கிறார்கள். புதுமை ஏதும் நடந்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். 

கீழே உள்ள இணைப்பை எனக்கு விளங்கப்படுத்துங்க பாஸ் 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது தான்: விளம்பரம் செய்து கூட்டம் நடந்திருக்கிறது. தடுக்க வக்கில்லாத சட்டம் சமூக உணர்வு இல்லாத சமுதாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

தடுக்க வக்கில்லாத சட்டம் சமூக உணர்வு இல்லாத சமுதாயம்

சட்டம் எல்லாம் சொறிலங்காவின் சட்டம் எப்பவும் தமிழருக்கு எதிரான ஒன்று அது பற்றி நிறைய விளக்க தேவையில்லை .

எங்கடை  மக்களை குறை  கூறுவதை ஏற்க  முடியாத ஒன்று நீண்ட நெடிய போரின் பின் அவர்களுக்கு மன  தைரியம் ஊட்டும் உளவியலை நாங்கள் யாருமே மேட்கொள்ளவில்லை எங்களின்  பிழை அது மூன்று நேர உணவை குடுக்க தெரிந்த எங்களுக்கு அவர்களின் மனவியலை  சிந்திக்க மறந்து விட்டம் .அதன் பிழை இன்று இவ்வளவு சிக்கலில் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.