Jump to content

கொரோனாவுக்கு 7 தடுப்பூசி கண்டுபிடிக்க பில் கேட்ஸ் நிதியுதவி


Recommended Posts

கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்ற அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர நிதி வழங்கப்படும் என்றார்.

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/105981/கொரோனாவுக்கு-7-தடுப்பூசிகண்டுபிடிக்க-பில்-கேட்ஸ்நிதியுதவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bill-Gates.jpg

கொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி!

உலக நாடுகளில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டொலர் நிதியை வழங்கவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டொலரை வழங்கும் எனத்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்றுகூறிய அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர்வதற்கு நிதி வழங்கப்படும் என்றார்.

மேலும், கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவை-அழிக்க-7-தடுப்பூ/

Link to comment
Share on other sites

வரவும் நாடுகளிலேயே அதிக உயிர் இழப்பு ஏற்படும் - பில் கேட்ஸ் , மற்றும் உலக பொருளாதார இழப்பும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி செப்டம்பருக்குள் தயாராகி விடும்- ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
பதிவு: ஏப்ரல் 13,  2020 14:39 PM
லண்டன்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தீவிரம்  இன்று வரை குறைந்த பாடில்லை. இதன் காரணமாக நாட்டில் அடுத்த மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


இங்கிலாந்தில்  கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 10,612 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 737-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் எளிதாக பரவுவதால், இதற்கான தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதற்கான வேலைகளும் பல்வேறு நாடுகளில் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அதன் கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சி குழுவில் இருக்கும் விஞ்ஞானி  சாரா கில்பர்ட் கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களின் குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும், அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் மனிதர்கள் மீது நடத்தவுள்ளோம்.

இந்த வகை தடுப்பூசி நாங்கள் செய்த பிற ஆராய்ச்சிகளை  அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவரிடம் நிச்சயமாக செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடுமா என்று கேட்டதற்கு, ஆம், ஆனால் அதற்கு நாங்கள் இன்னும் சில தூரம் செல்ல வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்தால் நிச்சயமாக இது சாத்தியமாகும், இது என்னுடைய தனிப்பட்ட பார்வை என்று கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/13143914/A-coronavirus-vaccine-could-be-ready-by-September.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.