Jump to content

TRANCE - தன் நினைவிழந்த நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

விக்கியில் இருந்த கதையின் இறுதி பகுதி மட்டும் இங்கு போடுறேன் .

இதற்கிடையில், போதகரின் பெரிய ரசிகரான தாமஸ் என்ற ஏழை ஒருவர் தனது மகளின் காய்ச்சலை பிரார்த்தனை மூலம் குணப்படுத்த முயற்சிக்கிறார். அவர் ஒரு அதிசய குணத்தை எதிர்பார்க்கிறார், ஆனால் இறுதியில் அவரது மகள் காய்ச்சலால் இறந்துவிடுகிறார். இது யோசுவாவை அழிக்கிறது. எல்லாம் போலியானது என்று அவர் தாமஸ் முன் ஒப்புக்கொள்கிறார். எண்ட்கேமாக ஜோசுவா மேத்யூஸ் மூலம் உண்மையை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார். சாலமன் மேத்யூஸைக் கொன்றான், ஆனாலும், யோசுவா கொடுத்த வீடியோவை ஒளிபரப்ப மேத்யூஸ் நிர்வகிக்கிறார். உண்மை விளம்பரப்படுத்தப்பட்டு, யோசுவா தனது மன ஆரோக்கியம் காரணமாக அவர் செய்த குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வீடியோ ஒளிபரப்பப்படும்போது பக்கவாதம் காரணமாக அவராச்சன் இறந்து விடுகிறார். தன்னை ஏமாற்றியதற்காக பழிவாங்குவதற்காக தாமஸ் சோலோமனையும் ஐசக்கையும் கொன்றுவிடுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Trance_(2020_film)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்து முடிந்தேன், ரதி சொன்னது மாதிரி நம் ஆட்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அல்லுலோய கூட்டம்

முழுப்படத்தையும் பார்க்க 

https://einthusan.tv/movie/watch/626r/?lang=malayalam

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா? மனிதனா?: முகநூல் கொண்டாடும் ‘ட்ரான்ஸ்’!

43.jpg

கிறிஸ்தவ மதத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்று கூறி பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மலையாள திரைப்படம் ‘ட்ரான்ஸ்’(TRANCE). இந்தத் திரைப்படம் தமிழ் முகநூல் வாசிகள் இடையே கவனமும், வரவேற்பும் பெற்றுள்ளது. அப்படி என்ன இருக்கிறது அந்தத் திரைப்படத்தில்?

ஒரு விதமான மெய்மறந்த நிலை அதாவது தன்னை சுற்றி நடக்கும் எதிலும் கவனம் செலுத்தாத நிலையை ‘ட்ரான்ஸ்’ என்பார்கள். பள்ளிப்பருவத்திலேயே தாயின் தற்கொலையால் தனித்து விடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பியுடன் கன்னியாகுமரியில் வாழ்ந்து வருகிறார் விஜு பிரசாத்(ஃபகத் ஃபாசில்). வாழ்க்கை முழுவதும் துயரம் நிறைந்ததாக இருந்தும் கூட தினமும் கண்ணாடி முன் நின்று “Today my life will be eventful, fruitful, wonderful, beautiful and successful” என்று தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டும் அவர், அந்தத் தன்னம்பிக்கையை பிறருக்கும் ஊட்டியளிக்கும் மோடிவேஷனல் ஸ்பீக்கராகப் பணியாற்றி வருகிறார்.

 

கடுமையான மன அழுத்தத்தால் தம்பியும் தற்கொலை செய்து கொள்ள விஜு தனித்து விடப்படுகிறார். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் எதற்கு என்றே தெரியாமல் மும்பைக்கு செல்கிறார். அவர், அங்கும் நிம்மதியும், தூக்கமும் இன்றி அலையும் அவருக்கு ஒரு வேலை கிடைக்கிறது. மோடிவேஷனல் ஸ்பீக்கராக விரும்பும் அவர் பிரார்த்தனையால் அதிசயங்கள் நிகழச்செய்யும் போலி பாஸ்டராக மாற்றப்படுகிறார். மக்களின் மத நம்பிக்கையை பணம் சம்பாதிக்கும் வழியாகப் பயன்படுத்தும் கெளதம் மேனனும், செம்பன் ஜோஸும் பயிற்சியும், பணமும் அளித்து பாஸ்டர் ஜோஷுவா கால்டனாக, விஜு பிரசாத்தை மாற்றுகிறார்.

43a.jpg

விஜு, தனது பேச்சுத் திறமையுடன் மதத்தைப் பிணைத்து மக்கள் மனதில் இடம் பெறுகிறார். மதம் என்னும் போதையை மக்களுக்கு ஊட்டி அதன்வழி பெரும் கோடீஸ்வரர்களாக அவர்கள் மாறுகிறார்கள். பெயரும் புகழும் கிடைக்க ஒரு கட்டத்தில் தன்னை உருவாக்கியவர்கள் மீதே விஜு அதிகாரம் செலுத்தத் தொடங்குகிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது, அவரது போலித்தனம் வெளியே தெரிந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும் கேரளா மாதிரியான ஒரு மண்ணில் மதத்தையும், மத போதகர்களையும் விமர்சிக்கும் விதமான ஒரு படைப்பை தைரியமாக திரையில் கொண்டு வந்ததற்காகவே இந்தப்படம் அத்தனை கவனம் ஈர்த்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ மதத்தை கேள்வி கேட்பதாக இல்லாமல், மதத்தை வைத்து சம்பாதிப்பவர்களை மட்டும் தான் ட்ரான்ஸ் தோலுரிக்கிறது. மதத்தையும், கடவுளையும் கருவிகளாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்களுக்கு எதிரான துணிச்சலான படைப்பாக ட்ரான்ஸ் பாராட்டுகளைப் பெறுகிறது. ‘மனிதனை மனிதன் தான் காப்பாற்றுவான்’என்ற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இந்தப்படம் உள்ளது. ஃபகத் ஃபாசிலில் துவங்கி கெளதம் மேனன், நஸ்ரியா, வினாயகன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

 

கதை, திரைக்கதை மட்டுமின்றி மயக்கநிலைக்குக் கொண்டு செல்லும் வித்தியாசமான இசை, கலர் கிரேடிங் போன்றவைகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். வலிமையான கருத்துக்கள் மூலமாகவும், வித்தியாசமான கதை அம்சத்தாலும் பொதுத் தளத்தில் பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்த மலையாள சினிமாவில் முக்கிய படைப்பாக ட்ரான்ஸும் இடம்பெறுகிறது.

43b.jpg

மலையாள திரை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநரும், தென்னிந்தியாவைத் திரும்பிப்பார்க்க வைத்த ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘பிரேமம்’ போன்ற படங்களின் தயாரிப்பாளருமான அன்வர் ரஷீத், ஃபகத் பாசிலுடன் கைகோர்க்கிறார் என்றதுமே ‘ட்ரான்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தாங்கள் பார்த்து வியந்த இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தில் முக்கிய வேடத்தைக் கையாளுகிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது. இவை அனைத்திற்கும் மேல் வித்தியாசமான கதைக்களத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் ஃபகத், அவரது மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை மேலும் பொறுமை இழக்கச் செய்து விட்டது.

ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றும் ட்ரான்ஸ் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2019 மார்ச் மாதம் முதல் கடந்த காதலர் தினம் வரை பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளிவருவதில் பல சிக்கல்களை சந்தித்தது. படத்தின் 17 நிமிட காட்சிகளை நீக்கக் கூறி தணிக்கைக் குழு அறிவுறுத்தியும், அதற்கு இணங்காத அன்வர் ரஷீத் மும்பை ரிவைஸிங் கமிட்டியில் படத்தைக் காண்பித்து தான் விரும்பியபடியே முழு வடிவில் தன் படைப்பை வெளியிட்டார். பிப்ரவரி 20ஆம் தேதி கேரளாவில் வெளியான திரைப்படம், பிப்ரவரி 28 அன்று பிற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அமேசான் பிரைம் தளத்தில் படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களும் ட்ரான்ஸைக் கொண்டாடத் தொடங்கினர். குறிப்பாக முற்போக்கு சிந்தனை கொண்ட மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

மதத்தின் பெயரில் நடக்கும் வியாபாரத்தைப் பற்றி துணிச்சலாகப் பேசிய விதத்திலும், முன்னணி நடிகர்களை வைத்து சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டதாலும் ட்ரான்ஸ் தனித்துத் தெரிகிறது. அதனால் தான் குறைகள் இருந்தும் ட்ரான்ஸ் கொண்டாடப்படுகிறது.

தயாரிப்பு, இயக்கம்: அன்வர் ரஷீத்

நடிப்பு: ஃபகத் பாசில், நஸ்ரியா, கெளதம் மேனன், வினாயகன்

திரைக்கதை: வின்சன்ட் வடக்கன்

ஒளிப்பதிவு: அமல் நீரத்

இசை: ஜாக்சன் விஜயன்

 

https://minnambalam.com/entertainment/2020/04/07/43/trance-malayalam-movie-review

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

Netflix அல்லது Prime இல் வெளியாகியுள்ளதா?

prime ல் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

prime ல் இருக்கு

பார்த்தவர்கள் அல்லுலோயா பக்கமே தலை வைத்து படுக்கமாட்டினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

பார்த்தவர்கள் அல்லுலோயா பக்கமே தலை வைத்து படுக்கமாட்டினம் .

படம் பார்க்க நேர்ந்தாலும் பொருள் விளங்க கூடிய அறிவும் இருந்தால்தான் 
அல்லேலூயா பக்கம் போக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் 

"ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா 
சுத்தியானந்தா என்று ஒரு கூட்டம் அலைமோதுகிறது என்றால் 
இனொரு கூட்டம்  திருப்பதியில் இருப்பவருக்குத்தான் சக்தி உண்டு 
சபரிமலை போனால்தான் எல்லாம் சரிவரும் என்று உழைத்த காசையும் அழித்து கொண்டு 
இன்னொரு கூட்டம் திரிகிறது.

"ட்ரான்ஸ்" இது வேறு வேறு வடிவில் எல்லா  மனிதரையும் ஆட்க்கொள்கிறது 
மதுவுக்கு அடிமையாதல்   மாதுவுக்கு அடிமையாதல் பணத்துக்கு அடிமையாதல் 
போதைவஸ்துக்கு அடிமையாதல் எல்லாம் ஒரு ட்ரான்ஸ் நிலையில்தான் சாத்தியமாகிறது 
மதத்துக்கு அடிமையாலும்  அவ்வாறுதான் இதை சைக்கோலஜி படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

உண்மையிலேயே கடவுள் என்று ஒருவன் இருந்தால் கூட 
இப்போதிருக்கும் எந்த மதமும் உங்களை கடவுளிடம் சேர்க்காது மாறாக உங்கள் உழைப்பை 
மத போதகர் அட்ச்சகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவ்வளவுதான் ... கடவுள் ஒருவன் இருந்தால் 
நீங்கள் கடவுளின் படைப்பு என்றால் ....... நீங்கள் கடவுளின் ஒரு பாதிதான். உங்களை விட புனிதமான ஒன்று 
உங்களை கடவுளிடம் சேர்க்க கூடிய வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. இதை தமிழர்கள் 3000 4000 வருடம் முன்பு சொல்லி இருக்கிறார்கள். 

அல்லேலூயா பக்கம் போகாத எல்லோரும் அறிவாளிகள் இல்லை 
உண்மையை பார்க்கப்போனால் அல்லேலூயா போய் மகிழ்ச்சியாக ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்  முன்பு ரவுடியாக  போதைவஸ்து மது அடிமையாக இருந்த பலர் அல்லேலூயா சென்று 
திருந்தி அடிமைநிலையில் இருந்து மீண்டு வாழ்கிறார்கள். அவர்கள் இன்னொரு ட்ரான்ஸ் நிலைக்கு ட்ரான்ஸ்பெர்  ஆகுகிறார்கள் என்றும் கொள்ளலாம். 

அல்லேலூயா போகாதவனும் இன்னொரு அலுக்கோசு மதத்துக்குத்தான் போக போகிறான் 
அல்லது ஏற்கனவே அங்கேயே இருந்து கொள்கிறான்.
ட்ரான்ஸ் நிலையில் இருந்து மனிதனை மீட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று 
புத்தர் நிலைக்கு நான் நீங்கள் கூட போக போவதில்லை ....... வாசிக்க நன்றாக இருக்கிறது 
நல்ல புத்தகம் என்றுவிட்டு கடந்துபோகிறோம் அவ்வளவுதான். 
இறுதி மரணம் என்பது உறுதியாக இருப்பதால் இந்த ட்ரான்ஸ் நிலைக்கு மனிதரை தள்ளுவது மிகவும் எளிது.
என்னுடைய உங்களுடைய பாட்டன் பூட்டிக்கு இருந்த சுதந்திர வாழ்க்கை 
எனக்கும் உங்களுக்கும் அமையப்போவதில்லை ......நாங்கள் முதலாளிகளின் அடிமையாக கிடக்கிறோம் 
அனால் வசதி பணம் என்று ஒரு மாய ட்ரான்ஸ் நிலைக்கு சென்று முதலாளித்துவ கடனாளியாகி உழைத்து கட்டிக்கொண்டு  இருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

படம் பார்க்க நேர்ந்தாலும் பொருள் விளங்க கூடிய அறிவும் இருந்தால்தான் 
அல்லேலூயா பக்கம் போக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் 

"ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா 
சுத்தியானந்தா என்று ஒரு கூட்டம் அலைமோதுகிறது என்றால் 
இனொரு கூட்டம்  திருப்பதியில் இருப்பவருக்குத்தான் சக்தி உண்டு 
சபரிமலை போனால்தான் எல்லாம் சரிவரும் என்று உழைத்த காசையும் அழித்து கொண்டு 
இன்னொரு கூட்டம் திரிகிறது.

"ட்ரான்ஸ்" இது வேறு வேறு வடிவில் எல்லா  மனிதரையும் ஆட்க்கொள்கிறது 
மதுவுக்கு அடிமையாதல்   மாதுவுக்கு அடிமையாதல் பணத்துக்கு அடிமையாதல் 
போதைவஸ்துக்கு அடிமையாதல் எல்லாம் ஒரு ட்ரான்ஸ் நிலையில்தான் சாத்தியமாகிறது 
மதத்துக்கு அடிமையாலும்  அவ்வாறுதான் இதை சைக்கோலஜி படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

உண்மையிலேயே கடவுள் என்று ஒருவன் இருந்தால் கூட 
இப்போதிருக்கும் எந்த மதமும் உங்களை கடவுளிடம் சேர்க்காது மாறாக உங்கள் உழைப்பை 
மத போதகர் அட்ச்சகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவ்வளவுதான் ... கடவுள் ஒருவன் இருந்தால் 
நீங்கள் கடவுளின் படைப்பு என்றால் ....... நீங்கள் கடவுளின் ஒரு பாதிதான். உங்களை விட புனிதமான ஒன்று 
உங்களை கடவுளிடம் சேர்க்க கூடிய வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. இதை தமிழர்கள் 3000 4000 வருடம் முன்பு சொல்லி இருக்கிறார்கள். 

அல்லேலூயா பக்கம் போகாத எல்லோரும் அறிவாளிகள் இல்லை 
உண்மையை பார்க்கப்போனால் அல்லேலூயா போய் மகிழ்ச்சியாக ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்  முன்பு ரவுடியாக  போதைவஸ்து மது அடிமையாக இருந்த பலர் அல்லேலூயா சென்று 
திருந்தி அடிமைநிலையில் இருந்து மீண்டு வாழ்கிறார்கள். அவர்கள் இன்னொரு ட்ரான்ஸ் நிலைக்கு ட்ரான்ஸ்பெர்  ஆகுகிறார்கள் என்றும் கொள்ளலாம். 

அல்லேலூயா போகாதவனும் இன்னொரு அலுக்கோசு மதத்துக்குத்தான் போக போகிறான் 
அல்லது ஏற்கனவே அங்கேயே இருந்து கொள்கிறான்.
ட்ரான்ஸ் நிலையில் இருந்து மனிதனை மீட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று 
புத்தர் நிலைக்கு நான் நீங்கள் கூட போக போவதில்லை ....... வாசிக்க நன்றாக இருக்கிறது 
நல்ல புத்தகம் என்றுவிட்டு கடந்துபோகிறோம் அவ்வளவுதான். 
இறுதி மரணம் என்பது உறுதியாக இருப்பதால் இந்த ட்ரான்ஸ் நிலைக்கு மனிதரை தள்ளுவது மிகவும் எளிது.
என்னுடைய உங்களுடைய பாட்டன் பூட்டிக்கு இருந்த சுதந்திர வாழ்க்கை 
எனக்கும் உங்களுக்கும் அமையப்போவதில்லை ......நாங்கள் முதலாளிகளின் அடிமையாக கிடக்கிறோம் 
அனால் வசதி பணம் என்று ஒரு மாய ட்ரான்ஸ் நிலைக்கு சென்று முதலாளித்துவ கடனாளியாகி உழைத்து கட்டிக்கொண்டு  இருக்கிறோம். 

இனிமேல் பெருமாள் இந்தப் பக்கமே(Trance) பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2020 at 12:22, ரதி said:

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

 

இணைப்புக்கு நன்றி ரதியாக்க இதை பற்றி ஏற்கனவே எங்கோ வாசித்தேன் 
இங்கு யாழில் என்றுதான் ஞாபகம் பின்பு மறந்துவிட்டேன்.

வீட்டில் அடைபட்டு இருப்பதால் கொஞ்ச படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது 
நல்ல படங்கள் பார்க்க வேண்டும் ......நான் பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பதில்லை 
இப்படி யாராவது இணைத்ததால் நல்ல படம் என்றால் பார்ப்பேன். 

மலையாள படம் வைரஸ் நல்ல படம் பாருங்கள் 
நிப்பா வைரஸ் பரவலை பற்றிய உண்மை கதை 

"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"
நண்பர் ஒருவர் சொல்லி நேற்று பார்த்தேன் வித்தியாசமான திரைக்கதை 
நெட் பிலீக்ஸ் இல் உண்டு 

நண்பர்களே நீங்களும் ஏதும் நல்ல படம் டாக்குமெண்டரி பார்த்திருந்தால் அறிய தாருங்கள்.  

Link to comment
Share on other sites

அல்லுலோயா கூட்டத்தை துகில் உரித்து காட்டும் நல்ல மலையாள படம் , ஆனால் வாணிப ரீதியாக எதிர் பார்த்தளவு வெற்றி பெறவில்லை.
 அல்லுலோயா கூட்டம் மாத்திரம் ஊரை ஏமாற்ர  மாதிரி இங்கை சிலர் குத்தி முறியினம்.
இவர்களுக்கும், காவிக் கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இணைப்புக்கு நன்றி ரதியாக்க இதை பற்றி ஏற்கனவே எங்கோ வாசித்தேன் 
இங்கு யாழில் என்றுதான் ஞாபகம் பின்பு மறந்துவிட்டேன்.

வீட்டில் அடைபட்டு இருப்பதால் கொஞ்ச படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது 
நல்ல படங்கள் பார்க்க வேண்டும் ......நான் பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பதில்லை 
இப்படி யாராவது இணைத்ததால் நல்ல படம் என்றால் பார்ப்பேன். 

மலையாள படம் வைரஸ் நல்ல படம் பாருங்கள் 
நிப்பா வைரஸ் பரவலை பற்றிய உண்மை கதை 

"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"
நண்பர் ஒருவர் சொல்லி நேற்று பார்த்தேன் வித்தியாசமான திரைக்கதை 
நெட் பிலீக்ஸ் இல் உண்டு 

நண்பர்களே நீங்களும் ஏதும் நல்ல படம் டாக்குமெண்டரி பார்த்திருந்தால் அறிய தாருங்கள்.  

வைரஸ் &கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இரண்டும் நல்ல படங்கள். 

உன் சமையல் அறையில் நல்ல படம் (  எனக்கு மலையாள Salt N Pepper பிடித்திருச்சு)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகத் பாசிலை தமிழ் சினிமா இன்னமும் சரியாக உபயோகப்படுத்தவில்லை. நடிப்புச்சாத்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இனிமேல் பெருமாள் இந்தப் பக்கமே(Trance) பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார். 😂

மிக சிறந்தவரே உங்கள் கருத்துக்களை பலவிடங்களில்  பார்ப்பது உண்டு மிக சிறப்பாகா கருத்தாடுவதில் வல்லவர் முதன் முதலாய் உங்களிடம் இருந்து தனிமனித தாக்குதல் அதுவும் என்னை நோக்கி அப்படியென்றால் மிகுதி விளங்குபவர்களுக்கு விளங்கும் .🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

மிக சிறந்தவரே உங்கள் கருத்துக்களை பலவிடங்களில்  பார்ப்பது உண்டு மிக சிறப்பாகா கருத்தாடுவதில் வல்லவர் முதன் முதலாய் உங்களிடம் இருந்து தனிமனித தாக்குதல் அதுவும் என்னை நோக்கி அப்படியென்றால் மிகுதி விளங்குபவர்களுக்கு விளங்கும் .🙂

மன்னிக்க வேண்டும் பெருமாள்.

இதனை நகைச்சுவையாகவே குறிப்பிட்டிருந்தேன். குரையிருப்பின் பொறுத்தருள்க.👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வைரஸ் &கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இரண்டும் நல்ல படங்கள். 

உன் சமையல் அறையில் நல்ல படம் (  எனக்கு மலையாள Salt N Pepper பிடித்திருச்சு)

 

நன்றி உடையார் 
   Salt & Pepper   படத்தில் இருக்கும்பாடு என்று எனக்கு மிகவும் பிடித்த பாட்டு விரும்பி கேட்பதுண்டு 
அது சில வருடங்கள் ஆகிறது. நல்ல படம் என்னால் பார்க்கலாம். 

உடையார் என்ன மலையாள பக்கம் அதிகமாக மினெக்கெடுகிறீர்கள்?
கலை ரசிப்பு தான் காரணமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

மன்னிக்க வேண்டும் பெருமாள்.

இதனை நகைச்சுவையாகவே குறிப்பிட்டிருந்தேன். குரையிருப்பின் பொறுத்தருள்க.👏

மிகசிறந்தவரே இப்படியான திரிகளை விட்டு நீங்கள் எழுதும்  கருத்துக்கள் சிறப்பானவை இனி இந்த திரியில் உங்களுடன் தர்க்கிக்க விரும்பவில்லை .மன்னிக்கவும் மனதை புண் படுத்தியத்துக்கு .

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

"ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா 
சுத்தியானந்தா

மருதர், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி எம் குருநாதர் நித்தியானந்தாவை நிந்திப்பீர்கள்? கைலாசா வந்தீர்களா? நித்தியானந்தம் பெற்றீர்களா? அல்லது சுவாமிகளின் சிஷ்யைகளிடம் யோகாசனம் பயின்றீர்களா?இவை எதுவுமே செய்தறியாமல் சுவாமிகளை நிந்திக்கலாமா? ஜெய் நித்தியானந்தம்!💞💃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

மிகசிறந்தவரே இப்படியான திரிகளை விட்டு நீங்கள் எழுதும்  கருத்துக்கள் சிறப்பானவை இனி இந்த திரியில் உங்களுடன் தர்க்கிக்க விரும்பவில்லை .மன்னிக்கவும் மனதை புண் படுத்தியத்துக்கு .

நிச்சயமாக நீங்கள் என்னைப் புண்படுத்தவில்லை. ஆதலால் மன்னிப்புகேட்பதும்  தேவையற்றது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Maruthankerny said:

நன்றி உடையார் 
   Salt & Pepper   படத்தில் இருக்கும்பாடு என்று எனக்கு மிகவும் பிடித்த பாட்டு விரும்பி கேட்பதுண்டு 
அது சில வருடங்கள் ஆகிறது. நல்ல படம் என்னால் பார்க்கலாம். 

உடையார் என்ன மலையாள பக்கம் அதிகமாக மினெக்கெடுகிறீர்கள்?
கலை ரசிப்பு தான் காரணமா? 

கலையை மட்டும்தான் ரசிக்கின்றேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

மருதர், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி எம் குருநாதர் நித்தியானந்தாவை நிந்திப்பீர்கள்? கைலாசா வந்தீர்களா? நித்தியானந்தம் பெற்றீர்களா? அல்லது சுவாமிகளின் சிஷ்யைகளிடம் யோகாசனம் பயின்றீர்களா?இவை எதுவுமே செய்தறியாமல் சுவாமிகளை நிந்திக்கலாமா? ஜெய் நித்தியானந்தம்!💞💃

இவற்றை மேலோட்ட்மாக நான் எழுதுகிறேனே தவிர ...
தனிப்பட உண்மையில் எனக்கு நித்தியானந்தா  சாயிபாபா அல்லேலூயா ஜெஹோவா போன்றவற்றில் 
மிகுந்த ஈடுபாடு உண்டு. இவற்றில் நாம் சொந்த அறிவை இழந்து முட்டல்களாக ஆகுவதுதான் தப்பு 
எங்களை போன்ற சாதாரண மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி நாம்தான் அவர்களை மேலும் மேலும் 
தப்பு செய்ய தூண்டுகிறோம். ஆயிரகணக்கான மூடர்கள் அவர்களை கடவுள் என்று நம்பும்போது ... ஏதாவது 
பிராட்டுதனம் செய்து கடவுளை போல நடிக்க வேண்டிய தேவை அவர்களுக்கும் வருகிறது. 

திருமணம் ஆகி பிள்ளைகளுடன் இருக்கும் 40-50 வயது பெண்களுக்கு எல்லாம் 
நித்தியானந்தாவின் மடம் அல்லேலூயா போன்றவை மிகுந்த ஆறுதல் கொடுக்கும் என்றுதான் 
நான் எண்ணுகிறேன். இந்தவயதில் அவர்களுக்கு நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும் தவிர உடல் ரீதியாக பல 
மாறுதல்கள் இருக்கும் ........ அந்த நேரத்தில் இப்படியான இடங்களுக்கு சென்று பஜனைகள் பாடி 
அமைதியாக இருந்துவிட்டு வந்தால் மன ரீதியாகவும் உடல் ரீதியாவும் ஒரு அமைதி கிடைக்கும் என்றுதான் நம்புகிறேன். 

முன்பு 99-2000 ஆண்டில் ஒரு இரண்டு வருடம் நான் மாமிசம் சாப்பிடுவது மது அருந்துவது எல்லாம் நிறுத்திவிட்டு பகவத்கீதை வாசித்துக்கொண்டு இருந்தேன் எனது வீட்டுக்கு அருகில் ஒரு ஹரே கிருஸ்ணா கோவில் இருந்தது  அங்கு அடிக்கடி செல்வேன் பஜனை பாடுவேன் மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும் 
உடலும் மிகவும் சுறுசுறுப்பு பெறுவதை உணர்ந்தேன் .... காமம் பற்றிய எண்ணங்கள் சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக  குறைய தொடங்கும் அது பெண்களுடன் நட்ப்பு ரீதியான உறவை பேண வழிவகுக்கும். 
பின்பு போதிய வருமானம் இல்லை என்று அந்த கோவிலை மூடி விட்டார்கள் ... பின்பு நானும் கொஞ்சம் கொஞ்சமாக  முருங்கை மரத்தில் ஏற தொடங்கிவிட்ட்டேன். அப்படி ஜெகோவாவின் சாட்ச்சிகளுடனும் சில காலம் கழித்து இருக்கிறேன்  என்னை ஜானஸ்தானம் எடுக்க தூண்டுவார்கள் ... நான் ஜேசுவின் பிள்ளை பிறக்கும்  முன்பே நான் ஜானஸ்தானம் எடுத்துவிட்ட்டேன் என்று கூறுவேன் .. அவர்கள் உன்னுடைய போக்கு சந்தேகமாக இருக்கிறது என்பார்கள். நான் உங்களுடைய போக்குதான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்பேன்  உங்களுக்கு கத்தர் மீது போதிய நம்பிக்கை இல்லை அவர்தான் எங்களை எல்லாம் படைத்தார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருப்பதால்தான்  இப்படியான சடங்குகளில் அதிக கவனம் செலுத்த்துகிறீர்கள்  ......நான் ஜெசுவிடம் கவனம் செலுத்துவதால் இவை எனக்கு தேவை இல்லை என்பேன். 

பாடுவதும் ஆடுவதும் மனதுக்கு மிகவும் தேவையான ஒன்று 
எங்களுடைய பெண்கள் பாவம் இது எதுவுமே இல்லாமல் போலி காலச்சாரம் எனும் 
மாயைக்குள் கட்டுண்டு ஆண்களுக்கும்  பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதிலேயே முழு ஆயுளையும் 
கழிக்கிறார்கள் ..... ஆதலால் உண்மையிலே எமது பெண்கள் இப்படி நித்தியானந்தா ஜக்கி போன்றவர்களின் மடங்களுக்கு சென்று  ஆறுதலடைய வேண்டு அவர்கள் அவர்களாக ... அவர்களுக்கு என்றும் கொஞ்சம் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

இங்கு அமெரிக்காவில் அழிந்துபோன ஓசோவின் ஆச்சிரமங்கள் 
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட தொடங்குகிறது  
போர்லாண்டிலும்   டெக்ஸாஸில்  சொல்ல கூடிய அளவில் ஓரளவு இயங்குகிறது 
அவர்களுடன் தொடர்பை பேணிக்கொண்டு இருக்கிறேன் .. இந்த கோடை விடுமுறைக்கு 
போர்ட்லான்ட் செல்வது என்று இருந்தேன் இந்த கொரோனா வைரஸால் போக முடியாது என்று எண்ணுகிறேன் 
நீங்களும் தேடி பாருங்கள் ஒரு வித்தியாசமான பயணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2020 at 12:22, ரதி said:

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

 

இந்த படத்தை பார்த்து முடித்தேன் 
இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும் 

இங்கு நீங்கள் குறிப்பிடுவதுபோல அல்லேலூயாவை அவர் சாடவில்லை 
படத்தின் பெயருடன்தான் தனது திரைக்கதையை நகர்த்துகிறார் 

"ட்ரான்ஸ்" நிலை என்பதுதான் மனிதனை வாழவும் வீழவும் வைக்கிறது 
உலகில் உள்ள மத அடிமைத்தனம்  பண அடிமைத்தனம்  ட்ராக்ஸ் அடிமைத்தனம் என்று கொண்டு வந்து  
பெண் அடிமைத்தனதில் கொண்டுவந்து கதையை முடிக்கிறார்.
இது ஒரு சைக்கோலஜி ரீதியான கருவை கொண்ட கதை. மனிதன் வாழ்க்கையில் ஓரிடத்தில் வீழ நேர்ந்தால் 
இவ்வாறான ஒரு ட்ரான்ஸ் நிலைதான் அவனுக்கு கூடுதலாக மீண்டும் எழுந்துநிற்க கை கொடுக்கிறது.
அதுவே வாழ்க்கையின் மொத்தமும் வீழ வழிவகுப்பதை "தன்னிலை மறந்த நிலை" உணர்விப்பதில்லை 

இங்கு பலருக்கும் இருக்கும் ஆதங்கம்போல இந்த படத்தைப்போல 
அல்லலூயாவின் உண்மையான பித்ததாலாட்ட்ங்களை கருவாக கொண்டு 
ஒரு சினிமா படத்தை உருவாக்கி மக்களை விழிப்படைய செய்யமுடியும் 
இன்னொருவர் செய்வார் என்று பார்த்துக்கொண்டு இருக்காமல் .. வெளிநாடுகளில் இருக்கும் 
கோவில் கதவுகளை தட்டியே அதற்க்கான செலவை பெற்றுக்கொண்டு தமிழகத்தில் இருக்கும் ஒரு சிறப்பான  
இயக்குனரை நாடி அதை செய்யமுடியும். குறைந்தபட்ஷம் இது ஒரு ஏமாற்று வேலை என்பதையாவது 
மக்களுக்கு புரியவைக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிற்பிகளும் ஓவியர்களும் பெண்ணை நிர்வாணமாகவே சிலையும் ஓவியமும் வடிக்கிறார்கள்?
அடையாளங்களை அகற்றினால்தான் ஒரு "பெண்"ணை காணமுடியும் 

அதுபோல தன்னிலை மறந்தால் .........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டவுன் லோட் பண்ணியாச்சு இனிதான் பார்க்கணும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.