Jump to content

பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம்.

நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவால வருதெண்டு போட..

மஞ்சல் தண்ணில ஆம்பிளையள் முழுகுங்கோ கொரோனோவுக்கு எண்டு ஆரோ அடிச்சு விட விடிய எழும்பி முழுகின நியூஸ் யாழில வந்திச்சு இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னுக்கு..

சிவன்கோவில் சிலைகள் உடைந்து விட்டன என்று யாரோ பேஸ்புக்கில் அடித்துவிட அதுவும் பெரிதாக பரவி மறுப்பறிக்கை வேறு வந்ததாக நினைவு..

கொரோனோக்கு கைதட்டுறம் எண்டு தகரங்களை சட்டி பானயளை உடைச்சும் விளக்கு கொழுத்துறம் எண்டு பட்டாசு கொழுத்தி வீட்டையும் கொழுத்துதுகள் இந்தியாவில.. 

ஒரு ஆஞ்சநேயர் படத்த போட்டு இதை செயார் பண்ணு விடிய நல்ல சேதி வரும் எண்டால் லைக்கும் செயாரும் அள்ளுது பேஸ்புக்கில்..

தேரை பொக்லைன் மிசினால இழுக்குறாங்கள்..

தீர்த்தக்குளத்துக்கு முள்ளுக்கம்பி வேலி அடிக்குறாங்கள்.

வேற ஆக்கள் வருகினம் எண்டு கோயிலப்பூட்டி வச்சுருக்கிறாங்கள்.

யேசுவிடம் வா கொரோணா ஓடிவிடும் என்று ஒருபக்கத்தால் மூடர்கூட்டம் ஊர் ஊராக கொரோணா பரப்புது..

இவர்களை கொஞ்சப்பேர் என்று நாம் அவ்வளவு இலகுவில் சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது.. கொஞ்சம் இல்ல தமிழரில் பெரும்பான்மை ஆகிவிட்டார்கள் இவர்கள்தான்.. அறிவு உள்ள இனம் என்று நம்பிய இலங்கைத்தமிழர்களும் இப்போது இப்படி முழு சங்கியாக மாறிவிட்டார்கள்.. இவர்கள்தான் இன்று நாட்டு தலைவர்களையும் எம்பிக்களையும் ஊரிலும் இந்தியாவிலும் தெரிவு செய்யும் சக்தியாக இருக்கிறார்கள்.. அதுதான் அவர்களின் தலைவர்கள் நாட்டை ஆளமுடியுது.. 

இந்த நிலைமையில் ஊரில் இருக்கும் அடுத்த தலைமுறையும் இவர்களைதான் பின்பற்றபோகுது.. இந்த மூடத்தனங்கள்தான் சாதி மத வெறியை உருவாக்கும் தலைமுறைகளிடம். வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் தலைமுறை இதிலிருந்து மீண்டு விடும். ஆனால் ஈழத்தை நினைத்தால்..!? பேஸ்புக்கை திறந்தால் மதமூடத்தனங்களால் பைத்தியம் புடிக்குது.. நம் பிள்ளைகள் தப்பிவிட்டார்கள் என்று சுயநலமாக இருந்துவிட்டால் இவை மனதை சங்கடப்படுத்தாது என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம்.

நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவால வருதெண்டு போட..

மஞ்சல் தண்ணில ஆம்பிளையள் முழுகுங்கோ கொரோனோவுக்கு எண்டு ஆரோ அடிச்சு விட விடிய எழும்பி முழுகின நியூஸ் யாழில வந்திச்சு இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னுக்கு..

சிவன்கோவில் சிலைகள் உடைந்து விட்டன என்று யாரோ பேஸ்புக்கில் அடித்துவிட அதுவும் பெரிதாக பரவி மறுப்பறிக்கை வேறு வந்ததாக நினைவு..

கொரோனோக்கு கைதட்டுறம் எண்டு தகரங்களை சட்டி பானயளை உடைச்சும் விளக்கு கொழுத்துறம் எண்டு பட்டாசு கொழுத்தி வீட்டையும் கொழுத்துதுகள் இந்தியாவில.. 

ஒரு ஆஞ்சநேயர் படத்த போட்டு இதை செயார் பண்ணு விடிய நல்ல சேதி வரும் எண்டால் லைக்கும் செயாரும் அள்ளுது பேஸ்புக்கில்..

தேரை பொக்லைன் மிசினால இழுக்குறாங்கள்..

தீர்த்தக்குளத்துக்கு முள்ளுக்கம்பி வேலி அடிக்குறாங்கள்.

வேற ஆக்கள் வருகினம் எண்டு கோயிலப்பூட்டி வச்சுருக்கிறாங்கள்.

யேசுவிடம் வா கொரோணா ஓடிவிடும் என்று ஒருபக்கத்தால் மூடர்கூட்டம் ஊர் ஊராக கொரோணா பரப்புது..

இவர்களை கொஞ்சப்பேர் என்று நாம் அவ்வளவு இலகுவில் சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது.. கொஞ்சம் இல்ல தமிழரில் பெரும்பான்மை ஆகிவிட்டார்கள் இவர்கள்தான்.. அறிவு உள்ள இனம் என்று நம்பிய இலங்கைத்தமிழர்களும் இப்போது இப்படி முழு சங்கியாக மாறிவிட்டார்கள்.. இவர்கள்தான் இன்று நாட்டு தலைவர்களையும் எம்பிக்களையும் ஊரிலும் இந்தியாவிலும் தெரிவு செய்யும் சக்தியாக இருக்கிறார்கள்.. அதுதான் அவர்களின் தலைவர்கள் நாட்டை ஆளமுடியுது.. 

இந்த நிலைமையில் ஊரில் இருக்கும் அடுத்த தலைமுறையும் இவர்களைதான் பின்பற்றபோகுது.. இந்த மூடத்தனங்கள்தான் சாதி மத வெறியை உருவாக்கும் தலைமுறைகளிடம். வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் தலைமுறை இதிலிருந்து மீண்டு விடும். ஆனால் ஈழத்தை நினைத்தால்..!? பேஸ்புக்கை திறந்தால் மதமூடத்தனங்களால் பைத்தியம் புடிக்குது.. நம் பிள்ளைகள் தப்பிவிட்டார்கள் என்று சுயநலமாக இருந்துவிட்டால் இவை மனதை சங்கடப்படுத்தாது என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்ச மதம்மாறின கூட்டம் ஒண்டு சீனாவிலை தங்கள் போதகர் ஒருவர் தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது என்று சொல்லிக்கொண்டு திரியுது.

சிலவற்றை நான் வாசிக்காமல் கடந்துவிடுவது ஓணாண்டி. நீங்களும் வாசிக்காமல் விட்டால்  பயித்தியம் பிடிக்கவே பிடிக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பா. ஓணாண்டி

எனது அறிவுக்கெட்டிய வரையில், மூடத்தனங்களைக் களைய 

1) சுய சிந்தனை - காரண காரியங்களை தெரிந்து கொள்ளுதல்

2) பகுத்தறிவை பாவித்தல். கொப்பி அன் பேஸ்ற் என்றில்லாமல் ஏன் எதற்கு எப்படி என கேள்வியை நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரிடமும் கேட்போம் கேட்க வைப்போம். முக்கியமாக எங்கள் பிள்ளைகளிடம் இப் பழக்கத்தை ஊக்குவித்தல்.

3) மூடத்தனங்களிலிருந்து விலகுவதில் பெருமை கொள்ளுதல்

போன்றவற்றை எனது பிள்ளைகளுக்கு நான் பழக்கி வருகிறேன். 

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிஞ்ச மதம்மாறின கூட்டம் ஒண்டு சீனாவிலை தங்கள் போதகர் ஒருவர் தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது என்று சொல்லிக்கொண்டு திரியுது.

சிலவற்றை நான் வாசிக்காமல் கடந்துவிடுவது ஓணாண்டி. நீங்களும் வாசிக்காமல் விட்டால்  பயித்தியம் பிடிக்கவே பிடிக்காது

கொறோணா வைரசை உலகம் முழுவதும் பரப்பியதில் கிறீத்துவ மதக் குழுக்களுக்கு (Cult) முக்கிய பங்கிருக்கிறது. இலங்கையின் வட புலத்தில் இவர்களும் இந்தியாவில் முகமதியர்களும் முக்கியமானவர்கள். 

Common sense க்கு முன் மத நம்பிக்கைகளை வைக்கும் இவர்களைப் போன்றோரால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாதது 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புனைவுகள் வைரஸைவிட வேகமாகப் பரவும் காலத்தில் ஓணாண்டியார் இதில் சொன்னவையும் புனைவுகள் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கோ!

கொரோனாவுக்கு மருந்தில்லை! இதை முதலில் எல்லோரும் தெளிவாகப் தெரிந்துகொள்ளவேண்டும். உடலில் எதிர்ப்புசக்தி உருவாகி கொரோனாவை ஒழித்தால் மட்டும்தான் ஒருவர் பாதிப்பிலிருந்து தப்பலாம். 

அப்ப ஏன் ஹொஸ்பிரலுக்குப் போறாங்கள் எண்டு மோட்டுக்கேள்வி கேட்கக்கூடாது. ஹொஸ்பிடலில் ஒருவரின் உயிரை தாக்குப்பிடிக்கும் வேலைதான் நடக்கின்றது. சுவாசப்பை போன்ற முக்கியமான உடலுறுப்புக்களை எதிர்ப்புசக்தி உருவாகும் வரை தொடர்ந்தும் வேலைசெய்யப்பண்ணுவதுதான் டொக்கர்மாரின் வேலையாக இருக்கு. கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரி கூடுதலாகக் தாக்கும்போது சில முக்கிய உடலுறுப்புக்களையும் தாக்கி அவற்றை வேலைசெய்யாமல் பண்ணுவதால்தான் மரணம் சம்பவிக்கின்றது.

இதுகளை விளங்காமல் அங்க மருந்திருக்காம், ரசம் குடிச்சால் தப்பலாமாம், மஞ்சள் தெளிச்சால் வைரஸ் வராதாம் என்பதெல்லாம் எல்லோரையும் குழப்பும் வேலை. இதைத் தடுக்க உலக சுகாதார சபை சொல்லுவதையும், ஒவ்வொரு நாடுகள் சொல்லிவதையும் நம்பினால் போதும். 

ஆனால் ஆனானப்பட்ட பிரித்தானியாவிலேயே 5G கொரோனா வைரஸை பரப்புது என்று மண்டை கழண்டதுகள் Twitter இல் கீச்சிட்டு mobile mast ஐ உடைச்சிருக்கிறாங்கள். 

இதுக்குமேல சொல்ல ஒண்டுமில்லை. அடுப்பில கொத்தமல்லி அவியுது! அதைப் பார்க்கவேணும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

https://mobile.twitter.com/mayhempsingh/status/1246834912017010690

தள்ளி நில்லுங்க.. கொழுத்திட்டு நேர வந்திடப்போறாங்க.. லூசுப்பயலுக.

Link to comment
Share on other sites

Just now, பாலபத்ர ஓணாண்டி said:

https://mobile.twitter.com/mayhempsingh/status/1246834912017010690

தள்ளி நில்லுங்க.. கொழுத்திட்டு நேர வந்திடப்போறாங்க..

பாலபத்திர ஓணாண்டி நீங்கள் ஆதாரங்களை இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறாக முகநூல்களிலும் வட்ஸ்அப், வைபர் ஆகியவற்றில் நீங்கள் கூறிய மூடத்தனங்களை பரப்ப‍ப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. இப்போது கொரோணா பிரச்சனையில் அறிவு பூர்வமாக தீர்வு காண வக்கிலாது பார்ப்பன சங்கி ஊடகங்கள் இவ்வாறான  பித்தலாட்ட வீடியோக்களை பரவ விட்டுள்ளார்கள். அதை எம்மவர்களில் பலரும் நம்புகின்றனர். இவ்வாறு மூடத்தனங்களை பரப்பிய ஒரு இந்திய சங்கியிடம் நான் முகநூலில் விவாதம் புரிந்தேன். விவாத இறுதியில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை சம்பந்தமாக பேசப்பட்ட போது அந்த சங்கி கூறியது  அவன் நாட்டில் போய் நீங்க ரவுடிதனம் புரிந்தா உங்களை கொல்லாமல் விடுவான?  என்பது தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

...விவாத இறுதியில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை சம்பந்தமாக பேசப்பட்ட போது அந்த சங்கி கூறியது  அவன் நாட்டில் போய் நீங்க ரவுடிதனம் புரிந்தா உங்களை கொல்லாமல் விடுவான?  என்பது தான்...

இந்த மாதிரி 'அரைவேக்காடுகள்' தமிழகத்தில் இன்னமும் பலருண்டு..! அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் நமக்கு ஆத்திரத்தில் பைத்தியமே பிடித்துவிடும்.

சில நாட்களுக்கு முன் தில்லி மாநாடு முடிவில் கொரானா தொற்றியதை பற்றி நான் பேசும்பொழுது பிற தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்த அவர் இப்படி குறிப்பிட்டார்.

"தமிழ் ஜிகாதிகள், ராஜீவை அழித்தது போல, இப்போ முசுலீம் ஜிகாதிகள் இந்துக்களை அழிக்க கொரானாவை காவித் திரிகிறார்கள்..!"

எங்கே சொல்லியழ..?

இத்தனைக்கும் அவர், உயர்பதவியிலிருக்கும் மூத்த பொறியாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரோ தாங்கள் பிரபல்யமாக கிளப்பி விட்ட வதந்தி ....அந்த கோயில் ஐயர்  தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்லி உள்ளார் ...கோயில் நிர்வாகமும் மறுத்திருந்தது ....இது நேற்றே மு.பு உலாவத் தொடங்கி பொய் என்பதால் புஸ் என்று அடங்கி விட்டது .

இன்று காவி வந்ததன் நோக்கம் புரிகிறது 

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

இது யாரோ தாங்கள் பிரபல்யமாக கிளப்பி விட்ட வதந்தி ....அந்த கோயில் ஐயர்  தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்லி உள்ளார் ...கோயில் நிர்வாகமும் மறுத்திருந்தது ....இது நேற்றே மு.பு உலாவத் தொடங்கி பொய் என்பதால் புஸ் என்று அடங்கி விட்டது .

இன்று காவி வந்ததன் நோக்கம் புரிகிறது 

புரியாத எங்களுக்காக, உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் புரியவைப்பீர்களா?

Link to comment
Share on other sites

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு : பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

புரியாத எங்களுக்காக, உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் புரியவைப்பீர்களா?

ஐயரின் கனவில் அம்மன் வந்த செய்தி ,ஆண்கள் மஞ்சள் போட்டு குளித்த செய்தி எல்லாம் யாரோ சும்மா பம்பலுக்காய் கிளப்பி விட்ட செய்திகள்...அதை பார்த்து ஒருத்தரும் விளக்கு ஏத்தவுமில்லை ,மஞ்சள் போட்டு குளிக்கவுமில்லை 

நேற்று வந்த செய்தியை இன்னு காவி வந்ததன் நோக்கம் மதம் தொடர்பான திரிகளை அணைக்க விடாது தொடரணும் என்பதற்காக அல்லது உன் மதத்திலும் இப்படியான முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காய் இருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு : பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதுதான் சாலப் பொருந்தும் 😂

Link to comment
Share on other sites

15 minutes ago, ரதி said:

ஐயரின் கனவில் அம்மன் வந்த செய்தி ,ஆண்கள் மஞ்சள் போட்டு குளித்த செய்தி எல்லாம் யாரோ சும்மா பம்பலுக்காய் கிளப்பி விட்ட செய்திகள்...அதை பார்த்து ஒருத்தரும் விளக்கு ஏத்தவுமில்லை ,மஞ்சள் போட்டு குளிக்கவுமில்லை 

நேற்று வந்த செய்தியை இன்னு காவி வந்ததன் நோக்கம் மதம் தொடர்பான திரிகளை அணைக்க விடாது தொடரணும் என்பதற்காக அல்லது உன் மதத்திலும் இப்படியான முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காய் இருக்கும்  

நன்றி ரதி. உங்கள் மனதில் உள்ளதை துணிச்சலாகவும், இனிமையான பேச்சுத் தமிழிலும் நீங்கள் எழுதி வருவதால் எங்கள் மத்தியில் உங்கள் மீது பேரபிமானம் இருக்கிறது. 

இந்த திரியை ஆரம்பித்த பாலபத்ர ஓணாண்டி, தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் பற்றிய சொந்த அனுபவத்தை உண்மையாக எழுதியிருப்பதாகவே எனக்கு தெரிகிறது. மேலும் மூடநம்பிக்கைகள், அளவுக்கு அதிகமான சமயநம்பிக்கைகள் பற்றிய அவரது கவலையும் நியாயமானதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

கீழே உள்ள தரவுகளின் மூலம்:
https://www.pewforum.org/religious-landscape-study/

70 வீதம் அமெரிக்கர்கள் தம்மை கிறீஸ்தவர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். 

22.8 வீதம் எந்த மதத்தையும் சாராதவர்கள். இவர்களில்:

        15.8 வீதம் எம் மதமும் சம்மதமான ரகம் ( என்னை போல - கைலாசாவாசிகள்😇)

           3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

           4.0 வீதமானவர்கள் மதங்களை பற்றி அக்கறைப்படாதவர்கள்.

 

தமிழர் மத்தியிலும் இப்படி புள்ளிவிபரம் எடுத்து பார்க்கலாமே?

Religions

Explore religious groups in the U.S. by tradition, family and denomination

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ampanai said:

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு :பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

 

 

மனித இனம் காலத்துக்கு காலம் பரிணாம வளர்ச்சியில் சிந்தனை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்..

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு 

என்கிறார் வள்ளுவர்..

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் பிறந்த திருவள்ளுவரால் இதை சிந்திக்க முடிந்திருக்கிறது..

 

அவருக்கு பிறகு பரிணாம வளர்ச்சியில் நீண்டபெரிய இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உள்ள நாம் என்ன எழுதுகிறோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மனித இனம் காலத்துக்கு காலம் பரிணாம வளர்ச்சியில் சிந்தனை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்..

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு 

என்கிறார் வள்ளுவர்..

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் பிறந்த திருவள்ளுவரால் இதை சிந்திக்க முடிந்திருக்கிறது..

 

அவருக்கு பிறகு பரிணாம வளர்ச்சியில் நீண்டபெரிய இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உள்ள நாம் என்ன எழுதுகிறோம்

 

அம்பனை பகிடியாக எழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அம்பனை பகிடியாக எழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இல்லை கப்டன்.. நான் பேஸ்புக் வட்ஸப்பில் நம்ம தீவிர சங்கி அல்லேலூயா பாய் கூட்டம்   எழுதி பகிரும் மூடத்தனங்களை சொன்னேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி 'அரைவேக்காடுகள்' தமிழகத்தில் இன்னமும் பலருண்டு..! அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் நமக்கு ஆத்திரத்தில் பைத்தியமே பிடித்துவிடும்.

சில நாட்களுக்கு முன் தில்லி மாநாடு முடிவில் கொரானா தொற்றியதை பற்றி நான் பேசும்பொழுது பிற தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்த அவர் இப்படி குறிப்பிட்டார்.

"தமிழ் ஜிகாதிகள், ராஜீவை அழித்தது போல, இப்போ முசுலீம் ஜிகாதிகள் இந்துக்களை அழிக்க கொரானாவை காவித் திரிகிறார்கள்..!"

எங்கே சொல்லியழ..?

இத்தனைக்கும் அவர், உயர்பதவியிலிருக்கும் மூத்த பொறியாளர்.

விவாத‌த்தில் வெல்ல‌ முடியா விட்டால் , தூச‌ன‌த்தில் பேசுங்க‌ள் /

அழிவை துய‌ரை ச‌ந்திச்ச‌து நாங்க‌ள் , நீங்க‌ள் மேல‌ சொன்ன‌ அரைவைக் காடுக‌ள் கூட‌ எழுதினா அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ரும் /  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலி த‌ன‌ம் ஜ‌யா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

கீழே உள்ள தரவுகளின் மூலம்:
https://www.pewforum.org/religious-landscape-study/

70 வீதம் அமெரிக்கர்கள் தம்மை கிறீஸ்தவர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். 

22.8 வீதம் எந்த மதத்தையும் சாராதவர்கள். இவர்களில்:

        15.8 வீதம் எம் மதமும் சம்மதமான ரகம் ( என்னை போல - கைலாசாவாசிகள்😇)

           3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

           4.0 வீதமானவர்கள் மதங்களை பற்றி அக்கறைப்படாதவர்கள்.

 

தமிழர் மத்தியிலும் இப்படி புள்ளிவிபரம் எடுத்து பார்க்கலாமே?

Religions

Explore religious groups in the U.S. by tradition, family and denomination

 

கற்பகம் அதை ஏன் மினக்கெட்டு எடுப்பான்.. ரெண்டு நாட்டு மக்களும் தெரிவு செய்யும் அரசியல்வாதிகளை பார்க்கவே தெரியுதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

விவாத‌த்தில் வெல்ல‌ முடியா விட்டால் , தூச‌ன‌த்தில் பேசுங்க‌ள் /

அழிவை துய‌ரை ச‌ந்திச்ச‌து நாங்க‌ள் , நீங்க‌ள் மேல‌ சொன்ன‌ அரைவைக் காடுக‌ள் கூட‌ எழுதினா அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ரும் /  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலி த‌ன‌ம் ஜ‌யா 

தம்பி முதல் சொன்னது தப்புடா செல்லம்.. கடைசியா சொன்னது சரி. சீமான் முன்வைக்கும் தத்துவங்கள் கொள்கைகள் நாட்டுக்கு மிக நல்லவை.. பகுத்தறிவோடு கூடியவை.. ஆனால் அவற்றை ஆழ்ந்து சிந்தித்து உள்வாங்காமல் அவசரக்குடுக்கையாக கோபத்தில் நம் தம்பிகள் தூசணத்தில் எழுதுவது கொம்மாள கோத்த எண்டு திட்டுவது பெண்கள் மற்றும் பெரியவர்களை எம்மிடம் இருந்து தூர விலகப்பண்னிவிடும். நாம் தமிழர் கூட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளும் வீதம் குறைவு. அது ஏன் என்பதை நாம் சிந்திக்கணும்..

இந்த நாட்டில் ஒரு தூய அரசியல் தேவை,காசு கொடுத்தால்தான் வாக்களிப்பீர்கள் என்றால் எங்களுக்கு அந்த வாக்கே வேண்டாம் என்று சொல்லவே ஒரு தனி தைரியம் வேண்டும்.. இத்தனை நற்பண்புகள் கொண்ட நாம் தமிழர் கட்சியில் இன்னமும் நம்ம பசங்கள் பலருக்கு மற்றவர்களிடம் பேசுவது பற்றி சொல்லித்தர வேண்டி இருக்கிறது.. புரிந்து , உணர்ந்து நாமே மாறவேண்டும் . . இல்லையென்றால் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் .

கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நம் கையில் தான் உள்ளது . நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும் கருத்துக்களும் எழுத்துக்களும் மிக கூர்மையானது அதை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது நம் மீதே பாதிப்பை ஏற்படுத்தும்..

 

பி:கு - நான் ஒரு தீவிர நாம் தமிழர் கட்சி ஆதரவாளன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லை கப்டன்.. நான் பேஸ்புக் வட்ஸப்பில் நம்ம தீவிர சங்கி அல்லேலூயா பாய் கூட்டம்   எழுதி பகிரும் மூடத்தனங்களை சொன்னேன்..

மேற்கு நாட்டவன் தனது கண்டுபிடிப்புக்களைமனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பாவிக்கும்போது  நீங்கள் குறிப்பிட்ட கூட்டங்கள் அந்த அறிவியற் கண்டுபிடிப்புக்களை தனது மூட நம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களை பரப்புவதற்கும் பாவிக்கின்றனர். ☹️
 

இந்தத் திருட்டுக் கூட்டங்களுக்கு அறிவியல் வளர்ச்சியில் தாங்கள் உரிமை கோருவதற்கு ஏதுமில்லை என்கின்ற தாள்வுமனப்பான்மையால்  நானும் ரெளடிதான் ஸ்ரைலில் இந்த பிற்போக்குத்தனங்களை முன்னிலைப் படுத்துகின்றனர். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

நாத்தீகவாதிகளுக்கு மதங்களை சேர்ந்தவர்கள் என்று தமிழில் ஒரு பொழிப்புரை தந்துள்ளீர்கள்.அமெரிக்காவில் மதங்களை சேர்ந்தவர்களையும் நாத்திகர்கள் என்று அழைக்கிறார்களா?

Link to comment
Share on other sites

On 6/4/2020 at 03:41, விளங்க நினைப்பவன் said:

நாத்தீகவாதிகளுக்கு மதங்களை சேர்ந்தவர்கள் என்று தமிழில் ஒரு பொழிப்புரை தந்துள்ளீர்கள்.அமெரிக்காவில் மதங்களை சேர்ந்தவர்களையும் நாத்திகர்கள் என்று அழைக்கிறார்களா?

நன்கு அவதானித்து இருக்கிறீர்கள். சில அமெரிக்கர்கள் (நான் உட்பட) மட்டுமல்ல, வேறு நாட்டவர் சிலரும் நாத்திகவாதத்தை ஒரு மதமாக பார்க்கிறோம். இந்த தமிழாக்கத்தின் அடிப்படையான ஆங்கில மூலத்தை கவனமாக படியுங்கள்:

சமய நம்பிக்கை அற்றவர்களில் மூன்று விதமானவர்கள் உள்ளதை கவனியுங்கள்.

இவர்களில், Agnostic என்பவர்களே சமயங்களை பற்றி அக்கறை படாதவர்கள்.

Atheist என்பவர்கள், ஏனைய மதவாதிகளை போல, மதம் இல்லை என்ற கோட்பாட்டை மதவாதிகளுக்கு இணையான ஆக்கிரோசத்துடன் முன்னெடுத்து செல்பவர்கள். மதவாதிகளை போலவே இவர்களது சில கருத்தகள் அறிவியலுக்கு மாறானவை. இவர்களில் சிலர் ஆபத்தானவர்களும் கூட. கொம்யூனிச புரட்சிகளின் போது மத நம்பிக்கை கொண்ட பாமரரையும் மோசமாக அழித்தொழித்தவர்கள் இவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது  உண்மை. கொம்யூனிசகாரர்களும் நாத்திகர்கள் தான்.இந்தியாவில் கொம்யூனிச கட்சியினர் முஸ்லிம் மதஆதரவாக இருக்கும் முரண்பாட்டை  காணலாம்.
தங்களுக்கு பிடித்த சனநாய கட்சிகளை சுதந்திரமாக ஆதரிக்கும் சனநாய முறையை விரும்பும் இறைவன் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
சனநாயகத்திற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இறைவன் கட்டளைபடி நடப்பதானால் மத ஆட்சியை அல்லவா நடைமுறைபடுத்த வேண்டும் 😂

 

*மதவாதிகளை போலவே இவர்களது சில கருத்தகள் அறிவியலுக்கு மாறானவை. இவர்களில் சிலர் ஆபத்தானவர்களும் கூட. கொம்யூனிச புரட்சிகளின் போது மத நம்பிக்கை கொண்ட பாமரரையும் மோசமாக அழித்தொழித்தவர்கள் இவர்களே. *

கற்பகதரு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.