Jump to content

பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ARUNnathan said:

 

தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

சைவம் அருளிய தமிழா..🤭? என்னடா இது புது உருட்டா இருக்கு.😷 அப்படிபார்த்தால் சமணர்கள் சொல்லவேணும் சமணம் வளர்த்த தமிழ் என்று.. எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் சமணப்பள்ளிகள்வைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் மொழிஅறிவும் ஊட்டி தமிழையும் வளர்த்தவர்கள் சமணர்கள்..

ஏன் தமிழில் உள்ள ஜம்பெரும் காப்பியங்களில் ஒன்றைத்தவிர மீதி எல்லாம் சமணர்களால் எழுதப்பட்டதுதான்..

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்

காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம். 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.

சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிக்கக்கூடும் என்ர ஒரு கருத்தும் உள்ளது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சைவம் அருளிய தமிழா..🤭? என்னடா இது புது உருட்டா இருக்கு.😷 அப்படிபார்த்தால் சமணர்கள் சொல்லவேணும் சமணம் வளர்த்த தமிழ் என்று.. எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் சமணப்பள்ளிகள்வைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் மொழிஅறிவும் ஊட்டி தமிழையும் வளர்த்தவர்கள் சமணர்கள்..

ஏன் தமிழில் உள்ள ஜம்பெரும் காப்பியங்களில் ஒன்றைத்தவிர மீதி எல்லாம் சமணர்களால் எழுதப்பட்டதுதான்..

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்

காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம். 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.

சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிக்கக்கூடும் என்ர ஒரு கருத்தும் உள்ளது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

ஓணான்டியர் ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாயும் தந்தையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாதவூரான் said:

ஓணான்டியர் ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாயும் தந்தையும்

வாதவூரான் திருவள்ளுவர் பற்றிய சுயவாழ்க்கைதகவல்கள் செவிவழிக்கதைகளாக பல உலாவுகின்றன.அதனால்தான் நான் எழுதும்போது அப்படி ஒரு கருத்தும் நிலவுகிறது என்று எழுதினேன்.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன.

நான் பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகளையே தரவாக வைத்து திருவள்ளுவர்  பற்றி என்று எழுதினேன். அதுவும் முடிந்த முடிபாக அல்ல.

சீமானும் பண்டிதர் அயோத்திதாசர்வழியே நடப்பவர். எம்மையும் அவரையே படிக்க தூண்டுபவர் தன் உரைகள் தோறும்.

ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக பண்டிதரால் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்ற தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை என்றும் அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார்.. அவையாவன.👇

//முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.//(மூலம் திருவள்ளுவர் யார் ?, நூல் ஆசிரியர்: கௌதம சன்னா)

——•—

இனிவள்ளுவர் பெயர் பெற்றோர் போன்றவற்றிற்கு பண்டிதர் அயோத்திதாசர் சான்றாக வைப்ப்பது..👇

//“ மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். சிலாசாசன தியான பஞ்சரத்தினப்பா என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது. திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும், வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார்.பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்..//-(மூலம் திருவள்ளுவர் யார் ?, நூல் ஆசிரியர்: கௌதம சன்னா)

 

எது எப்படியோ “எப்பொருள் எவர் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் வழியில் திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசர் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கலாம். அதுதான் பகுத்தறிவு நமக்கு சொல்லித்தருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ARUNnathan said:

 

1) தமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் --

2) மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா?

லெனினை தெய்வமாகவும் லெனினியத்தை வேத நூலாகவும் , காரல் மார்க்சை தெய்வமாகவும் மார்க்சியம் வேத நூலாகவும் ,  கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தெய்வமாகவும் , சோசலிசம் அல்லது சமவுடைமை வேத நூலாகவும் , மா சே துங்கை தெய்வமாகவும் மார்க்சியத்தை வேத நூலாகவும் கொண்டு வழிபடுபவர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய தனிமணித வழிபாட்டுமதங்களுக்கு ஒரு வழிபாடு தேவைதானா? 

"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள் காற்றைக் கண்ணால் கண்டவன் யார்? கனவைக் கையிலே பிடித்தவன் யார்? அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்? "நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள்அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும்  என்பதனை "நாத்திக’ மத வாதிகளே உணர்ந்து கொள்ளுங்கள்

3) தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

1) தமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள்

நீங்கள் சொல்லுவது மெத்தச் சரிதாங். ஆனால் எப்படி அழிக்கத் துடிக்கின்றன என்று கூறுவதுதானே முறை ?😀

2) மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா?

எப்படி மரணத்தை வென்றார்கள் ? யார் இவர்கள் ?  விளக்கமாகக் கூற முடியுமா ? 🤔

சிலுவையில தொங்கினவருக்கு வழிபாடு தேவைதானா என்கின்ற கேள்வி எனக்கும் இருக்குத்தான். ஆனால் வழிபாடு தேவையா இல்லையா என்பதை அவரை வழிபடுபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.  நாங்கள் அதற்குரிய ஆட்கள் இல்லையல்லவா ? 🙂

3) தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே

இதனையும் ஒருக்கா தெளிவா  விளங்கப்படுதிவிட்டுப் போங்கோ புண்ணியமாப் போம்.. அதிலும் யார் யார் எப்படி எப்ப ஆக்கிரமிப்புச் சக்திகளா போனாங்கள் என்பதை குறிப்பா சொல்லிவிட்டுப் போங்கோ. நானும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுறன். 👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.