Jump to content

கொரோனாவும் சித்த வைத்தியமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் சித்த வைத்தியமும் – பகுதி 1 

கொரோனா தொடர்பாக தமிழ் மக்களிடையே இன்று பரவலாக விவாதிக்கப்படும் இன்னொரு பேசுபொருள்தான் சித்த வைத்தியம் ஆகும்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய வைத்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொன்மை கொண்டதாகவும் இன்றும் பலராலும் பின்பற்றப்படும் வைத்திய முறையே சுதேச வைத்திய முறை ஆகும். 

300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகவே மக்களின் நோய் தீர்த்து வந்தது அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய சுதேச வைத்தியமே. இதனை ஆங்கிலத்தில் Traditional medicine அல்லது Indigenous medicine என்று கூறுவார். ஒவ்வொரு நாட்டிலும் அவற்றுக்கு தனித்துவமான பெயர்கள் உள்ளன.

இந்தியாவில் இரண்டு பாரம்பரிய வைத்திய முறைகளை நீண்டகாலமாக பிரபலமாக இருந்தன. வடக்கே ஆயுர்வேதம், தெற்கே சித்த வைத்தியம். 

தென்னிந்தியாவிற்கு அதுவும், தமிழர்களுக்கான தனித்துவமான மருத்துவ முறைதான் சித்த மருத்துவம் ஆகும். தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் செய்யுள்களில் இலைமறைகாயாகச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு மருத்துவக் குறிப்புகளே சித்த மருத்துவத்தின் தொன்மையை உணர்த்தப் போதுமானவை என்றே நம்புகிறேன். சித்த வைத்திய முறையில் அந்நாட்களில் அறுவைச் சிகிச்சைகளும் செய்ததற்கான (சித்தர் பாடல்) ஆதாரங்களும் காணப்படுகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் சில ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் ஏனைய சித்தமருத்துவ மருந்துகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கலாம்.

சித்த மருத்துவம் இயற்கை மருத்துவ முறையைச் சார்ந்தது. அதனாலேயே பக்கவிளைவுகள் அற்றது என்று கூறலாம். நோய் வரும்போது சிகிச்சை தருவது ஒருபுறம் இருக்க மறுபுறம் உணவே எமக்கு மருந்தென்பதை எமது பாரம்பரிய வைத்தியம் வலியுறுத்துகிறது. அதாவது எமது உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்தின் முதல்படி. அடுத்தபடிதான் சிகிச்சைக்கான மருந்து கொடுப்பது.

பருவகால மாற்றங்களின்போது ஏற்படும் சாதாரண சளித்தொல்லையிலிருந்து மனிதர்களை வதைத்து எடுக்கும் நாள்ப்பட்ட வியாதிகள்வரை சித்த மருத்துவம் மற்றும் ஏனைய சுதேச வைத்திய முறைகளில் தீர்வுகள் கூறப்படுள்ளன. 

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை வாதம், பித்தம், கபம் என்று மூன்று வகைகளாக சித்த வைத்தியம் வகைப்படுத்துகிறது. 

நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய்  போன்றன வாத நோய்கள் என்று கூறப்படுகின்றது. 
உணவு செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை போன்றன பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளென கூறப்படுகிறது. 

மூக்கடைப்பு, தடிமன், இருமல், காசநோய்,  ஆஸ்துமா  போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் கபம் என்ற வகைக்குள் அடங்கும். 

உண்மையில் சித்த மருத்துவ முறையை ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை முறை (Holistic Approach) என்றே கூறலாம். அதன் அர்த்தம், சித்த மருத்துவ சிகிச்சையின்போது உட்கொள்ளும் மருந்தும் முக்கியம் அத்துடன் அக்காலப் பகுதியில் உட்கொள்ளும் உணவும் முக்கியம். இதனை பத்தியமிருத்தல் என்று சொல்லுவார்கள்.  

இது தவிர தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பல மூலிகைப் பொருட்கள் இரண்டறக் கலந்துள்ளன. இவற்றுக்கு அடிப்படையாக சித்த மருத்துவ வழிகாட்டல்களே காராணமாக இருத்தல் வேண்டும்.

சீன நாட்டவர்கள் ஏற்கனேவே தமது நாட்டில் COVID-19 தொற்றினை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். அங்கு அரசாங்கமே பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதாக மேற்கத்தைய பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. 

சீனர்கள் பொதுவாக பாரம்பரிய முறைகளை பெரிதும் நம்புவர்கள். அதேநேரத்தில் அங்குள்ள ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பொதுவாகவே பாரம்பரிய உணவுமுறைகளையும் பின்பற்றுபவர்கள்.

ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் 170 உறுப்பு நாடுகளின் உதவியுடன் 1999ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை மூன்று கட்டங்களாக செய்யப்பட்ட ஆய்வின்பின்னர் கடந்தவருடம் உலகில் பலநாடுகளில் மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை தனது WHO Global Report on Traditional and Complementary Report 2019 இல் கூறியுள்ளது.

இன்று COVID-19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளவர்களும் பாரம்பரிய முறையிலான வைத்திய முறைகளில் அதிக ஆர்வம் காட்டுவதை அறியக் கூடியதாக உள்ளது. 

இந்திய அரசும் அண்மையில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாரம்பரிய வைத்தியத் துறை நிபுணர்களை அழைத்து COVID-19 நோய்க்குத் தீர்வை ஆராய்ந்ததும் குறிப்பிடத்தக்கது. 

பகுதி 2 இல் தொடரும்........!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் சித்த வைத்தியமும்  - பகுதி 2

இனி கொரோனாவிற்கு வருவோம். இதுவரை பலரும் தமக்குத் தெரிந்த வகையில் இந்த நோய்க்குப் பல பரிகாரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சித்த வைத்தியம் கொரோனாவுக்கான பதிலை தன்னுள் கொண்டுள்ளதா? இல்லையா? என்பது எங்களில் பலருக்கும் உள்ளதொரு கேள்வி. 

பதில் “ஆம்” என்றால், சுதேச வைத்தியம் எந்த சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வி, குழப்பம் எங்களில் பலருக்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சித்த வைத்தியத்தில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னர் சித்த வைத்தியம் பொதுவாக நோய்களுக்கு எவ்வாறான தீர்வுகளைத் தருகிறது எனப் பார்க்கலாம். 

சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் முறையாகும். நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி,  உணவியல் நெறிமுறை,  வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு,  வாழும் பிரதேசத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை சொல்வதே சித்த மருத்துவம் ஆகும்.

நோய்கள் தொடர்பாக சித்த வைத்தியம்  இரண்டு வகையான தீர்வுகளைத் தருகின்றன. ஏனைய பல பாரம்பரிய வைத்திய முறைகளும் சொல்வது இதைத்தான்.
1. முற்காத்தல் (Prevention)  - எமது உடலை வலுவூட்டும் உணவுகளையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறையையும் சொல்கிறது.
முற்காத்தல் என்ற விடயத்தில் பாரம்பரிய வைத்தியம் ஆங்கில மருத்துவம் போல தடுப்பு மருந்து தருவதில்லை. மாறாக எமது உடலை வலிமையாக்கும் வழிமுறைகளையே சொல்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னதுபோல எமது உடலை உறுதிப்படுத்தக் கூடிய, எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை நமது நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வதும் அவற்றுடன் ஆரோக்கியமான குடிபானங்களைச் சேர்த்துக் கொள்வதும்  நோய் முற்காப்பு முறையின் அடிப்படையாகும். சித்த மருத்துவம் அதிகம் வலியுறுத்துவது பிணியணுகாவிதி எனும் இந்த நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே. 

2. குணப்படுத்தல் (Cure) – நோய் வந்த பின்னாலே உடலுக்கு வலுவூட்டி நோய்க்காரணியை வலுவிழக்கச் செய்வதும் நோய் காரணமாக உடலில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உடலை மீட்டெடுப்பதும்.

நோய் தொற்றிவிட்டதென்றால் அதன்பின்னர் அந்த நோய்த் தொற்றுக்கான கிருமிகளை அழிப்பதற்கும் தொற்றினால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைப்பதற்கும் நோயினால் பலவீனமடைந்த எமது உடற் செயற்பாடுகளை மீளப் பலப்படுத்துவதற்கும் சித்த மருத்துவத்தில் மருந்து கொடுக்கப்படுகிறது. 

இதன்போது  எந்தெந்த மூலிகைப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சித்த வைத்தியம் தெளிவாகவே கூறுகிறது.  அதேபோல எல்லோருக்கும் எல்லா மூலிகை பொருட்களும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்லமுடியாது. 

எனவே சித்த வைத்தியமாக இருந்தாலும் அனுபவமுள்ள வைத்தியரின் ஆலோசனைப்படி மட்டுமே இவற்றை உட்கொள்ள வேண்டும். 
எமது முன்னோர்கள் “விருந்தும் மருந்தும் மூன்று வேளை” என்றும் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்றும் சொன்னது காரணத்தோடுதான்.

இதே விதியைத்தான் கொரோனாவிலிருந்து தப்புவதற்கு அல்லது நோய் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய உபாதையிலிருந்து மீள்வதற்கு இயற்கைப் பொருட்களையோ மூலிகைப் பொருட்களையோ மருந்தாகப்  பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். 

இயற்கை மருந்தானாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது ஆங்கில முறை மருந்துகள் ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய அல்லது நிரந்தர பக்கவிளைவுகளை  ஏற்படுத்தாதபோதும் இயற்கை மருந்தும் தற்காலிகமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

சித்த வைத்தியம் குணப்படுத்துதலை விடவும், எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முற்காப்பு முறைகளையே அதிகம் வலியுறுத்துகிறது. எம் முன்னோர்களும் அந்த வழியிலேயே தமது உணவுமுறைகளை அமைத்துக் கொண்டனர் என்பது கண்கூடு.

இதைவிட முக்கியமான ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை. இது சித்த வைத்தியத்திற்கு மட்டுமல்ல ஆங்கில வைத்தியத்திற்கும் பொதுவான விதிதான். 

இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே கண்டும் கேட்டும் இருப்பீர்கள். நீங்கள் இந்த மருந்துக்கு எனது நோய் குணமாகும் என்று நம்பினால்தான் நோய் விரைவில் குணமாகும்.

இனி முக்கியமான கேள்விக்கு வருவோம். COVID-19க்கான மருந்து இருக்கிறதா? இதுவரைக்கும் அலோபதி வைத்தியமுறையில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கோ நோய் வந்தபின் குணப்படுத்துவற்கோ இன்னமும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.  கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மருந்து பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏனைய பிற தடைகளைத் தாண்டி எமது கைக்கு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும். 

பராம்பரிய வைத்திய முறைகளில் இன்னமும் இதுதான் மிகச் சரியான மருந்தென்று உறுத்திப்படுத்தாத போதிலும்  தங்களிடம் உள்ள சில மூலிகை மருந்துகள் தீர்வாக அமையும் என்று பல சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். சீனர்களும் தங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு உதவியதாக சொல்லுகிறார்கள். இதனைப் பகுதி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தோம்.

ஏற்கனவே சித்த மருத்துவம் கபம் தொடர்பான வியாதிகளுக்கு பல பொதுவான மருந்துகளைச் சிபார்சு செய்துள்ளது. இதுவும் சுவாசப் பிரச்சனை தொடர்பான வியாதி என்பதால் கப நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் COVID-19 இன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் விரைவில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவக்கூடும். 

ஆங்கில மருத்துவம் போன்றில்லாது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத வைத்தியமுறை என்பதால் சித்த மருத்துவத்தை பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் சில மூலிகைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தினால் நச்சாகவும் மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நோய் விரைவாகப் பரவுமானால் அனைவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியாத நிலையொன்றும் ஏற்படலாம். இது பல வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும். 

வளர்ந்த நாடுகளே வைத்தியசாலை வசதிப் பற்றாக்குறையினால் மூச்சுத் திணறி நிற்கின்றன.  இந்த சூழ்நிலையில் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கும் தன்மையுள்ள சித்த வைத்தியமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே!  

எமது பாரம்பரிய வைத்தியமுறைகளில் உள்ள பரிகாரங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடாமல் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. அதே நேரம் முடிந்தவரை பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுமுறைகளை மீளவும் பின்பற்ற முயற்சிப்போம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.