Jump to content

சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 4¼ லட்சம் பேர் - மெத்தனத்தால் விளைந்த பாதிப்பு பற்றி அதிர்ச்சி தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியவுடன் அங்கிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களை சரியாக பரிசோதிக்காததால் அமெரிக்காவில் நோய் பரவியது தெரிய வந்துள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 4¼ லட்சம் பேர் - மெத்தனத்தால் விளைந்த பாதிப்பு பற்றி அதிர்ச்சி தகவல்கள்
கோப்புபடம்
 
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 


சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில்தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா சொன்னது. அதன்பிறகும் ஜனவரி மாதம், முதல் 2 வாரங்களுக்கு சீனாவில் இருந்து வருபவர்களை அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதிக்கவில்லை. அதற்குள் சீனாவில் இருந்து, குறிப்பாக உகான் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்து விட்டனர்.

ஜனவரி மாத மத்தியில்தான், விமான நிலையங்களில் அமெரிக்க அதிகாரிகள் பரிசோதனை செய்ய தொடங்கினர். அதிலும், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களில் மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கும் கூட உகானில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பயண தடை விதித்தார். அவர் தடை விதிப்பதற்குள், சீனாவில் இருந்து 1,300-க்கு மேற்பட்ட நேரடி விமானங்களில் 17 அமெரிக்க நகரங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் வந்து விட்டனர். அவர்களில், பயண தடை அறிவித்த பிறகு 2 மாதங்களில் வந்த 40 ஆயிரம் பேரும் அடங்குவர். வந்தவர்களில், அமெரிக்கர்கள் மட்டுமின்றி வேறு நாட்டினரும் கணிசமாக உள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களும் அமெரிக்க அரசிடம் இல்லை. அவர்களை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சீனாவில் இருந்து வேறு நாடுகள் வழியாக அமெரிக்கா வந்தவர்களை பற்றிய எந்த கணக்கும் அமெரிக்க அரசிடம் இல்லை.

பயணத்தடைக்கு பிறகும், அமெரிக்கர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, பீஜிங் நகரில் இருந்து கடந்த வாரம் வரை விமானங்கள் வந்து கொண்டிருந்தன. அப்படி வந்த 279 விமானங்களில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் ஏனோ தானோ என்று பரிசோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அரசின் இந்த மெத்தனமே, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணம் ஆகும். கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாலும், தாமதமாக அமல்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/04/06021513/1394283/As-coronavirus-spread-430000-people-arrived-in-US.vpf

 

Link to comment
Share on other sites

35 minutes ago, உடையார் said:

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில்தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா சொன்னது. அதன்பிறகும் ஜனவரி மாதம், முதல் 2 வாரங்களுக்கு சீனாவில் இருந்து வருபவர்களை அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதிக்கவில்லை. அதற்குள் சீனாவில் இருந்து, குறிப்பாக உகான் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்து விட்டனர்.

சீனாவிலேயே இவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கும் நன்றாக இருந்திருக்கும். 

அவர்களை சுற்றி இருக்கும் மக்களுக்கும் சுகமாக இருந்திருக்கும். 

அமெரிக்காவை நம்பி ஏமாந்து விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, உடையார் said:

உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.

எல்லாம்... ட்ரம்பின், வாய்க் கொழுப்புதான். 
எல்லாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும், அமேரிக்கா... 
இதில் எப்படி அவதானமில்லாமல் இருந்தது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.