Jump to content

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய குழு அமைக்க நடவடிக்கை - அலி சப்ரி


Recommended Posts

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் சடலங்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதியின் சட்ட ஆலாேசகருமான அலி சம்பரி தெரிவித்தார்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்காமல், நல்லடக்கம் செய்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய திணைக்களம் மற்றும் சிவில் அமைப்பினர் இணைந்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோருடன் கலந்துரையாடினோம். 

அதன் பயனாக உலக சுகாதார அமைப்பின் பிரகடனத்தின் பிரகாரம் கொராேனா நோய்க்கு பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் முடியும் என்ற அடிப்படையில் முஸ்லிம் ஒருவர் இறந்தால் அவரின் உடலை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

என்றாலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டு முதலாவதாக இறந்த முஸ்லிம் நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். அவரின் சடலத்தை நீர்கொழும்பில் நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கத்தின் நிபந்தனைக்கமைய அங்கு குழி தோண்டப்பட்டபோது, நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த சடலத்தை அந்த இடத்தில் புதைப்பதால் எதிர்காலத்தில் நீரில் நோய் கிருமிகளின் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், சடலத்தை புதைக்காமல் எரிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஏனெனில் நீரில் நோய் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டால் அது சமூகங்களுக்கிடையிலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து கொராேனா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை புதைக்காமல் எரிப்பதென்ற தீர்மானம் கடந்த 31ஆம் திகதி எடுக்கப்பட்டது.

தற்போதும் அந்த சட்டமே நடைமுறையில் இருக்கின்றது. என்றாலும் இந்த விடயத்தை அரசியலாக்காமல் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தற்போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் குறித்த நோயினால் மரணிப்பவர்களின் உடலை எரிக்கவும் புதைக்கவும் முடியும் என தெரிவித்து எழுத்து மூலம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு அறிவித்திருக்கின்றது.

எனவே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என நாங்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளோம். அத்துடன் இதுதொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் கோரியிருக்கின்றோம். இந்த குழுவில் முஸ்லிம் வைத்தியர்களும் உள்ளடங்குவார்கள்.

அத்துடன் சடலத்தை எரிப்பதா, புதைப்பதா என நாங்கள் விவாதிப்பதைவிட எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நோய்க்கு ஆளாகாமல் இருக்க நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். 

இன்று நாட்டில் முடக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் அனைத்தும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களாகும். அதனால் கொராேனா நோயினை சாதாரணமாக கருதாமல் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/79367

Link to comment
Share on other sites

10 minutes ago, ampanai said:

அத்துடன் சடலத்தை எரிப்பதா, புதைப்பதா என நாங்கள் விவாதிப்பதைவிட எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நோய்க்கு ஆளாகாமல் இருக்க நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். 

ஒரு வசனத்தில் மிக சரியான கருத்தை தெரிவித்துள்ளார். 

ஆனால், நடக்குமா?  பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

இந்த குழுவில் முஸ்லிம் வைத்தியர்களும் உள்ளடங்குவார்கள்.

எதுக்கெடுத்தாலும் முசுலீம் முசுலீம் என்டுறதால நாங்களும் முசுலீம் கொலையாளி, முசுலீம் கள்ளன், முசுலீம் .... அப்பிடிதான் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.