Jump to content

மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

europe-waiting-for-angela-merkel  
 

மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு சிகிச்சை தரும் டாக்டருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரியவந்ததால் தானும் தனித்திருக்க வேண்டிய நிலைக்கு மெர்க்கெல் ஆளானது ஐரோப்பியத் தலைவர்களை வெகுவாகவே கவலையடையச் செய்திருக்கிறது. எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முடிந்த உதவிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் மெர்க்கெல்.

வனங்களை எப்படிக் காக்கிறார்கள்?

கரோனா காரணமாக நாடே முடங்கிவிட்ட நிலையில் காடுகளுக்கு என்ன காவல் என்று பலரும் நினைக்கலாம். இப்போதுதான் காவல் அவசியமாகிறது. வேட்டையாடிகள், விலங்கு வியாபாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், வன வளங்களைத் திருட நினைப்போர், காடுகளில் பொழுதுபோக்க நினைப்போர் ஆகியோரைத் தடுப்பது கூடுதல் பொறுப்பாகிறது. இந்திய வனத் துறையில் முழு நேரப் பணியில் உள்ளவர்களுடன் அன்றாடக் கூலிக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளப்படுகிறவர்களும் உண்டு. சமூக இடைவெளி காரணமாக அவர்களில் பலர் வேலைக்கு வர மாட்டார்கள். எஞ்சிய வன ஊழியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அவரவர் இடங்களுக்கே சென்று வழங்குவது சவாலான வேலை. செயற்கைக்கோள்கள், ஆங்காங்கே காடுகளில் பொருத்தப்படும் கேமராக்கள், ஊழியர்களுக்குத் தரப்படும் தகவல் தொடர்புச் சாதனங்களின் உதவியுடன்தான் கண்காணிக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் சுமார் 21.67% காடுகள். இதில் அரிய விலங்குகளுக்குக் காப்புக்காடுகள் உண்டு. நகரங்களின் எந்த வசதிகளும் இல்லாத, பெரும் சவாலான சூழலிலேயே வனத் துறையினர் காடுகளைக் காவல்காக்கின்றனர்.

ஆப்பிரிக்காவின் நடமாடும் பரிசோதனை நிலையங்கள்

கரோனாவால் அமெரிக்காவே திண்டாடும்போது ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது. கடுமையாகப் போராடுகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ‘தொற்றுநோய்க்கு அதிகம் பேர் பலியாகிவிடக் கூடாது’ என்ற அக்கறையோடு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் கவனிக்கின்றன. அன்றாடம் 30,000 பேரைப் பரிசோதிக்க மட்டுமே வசதியுள்ள நிலையில், 67 நடமாடும் சோதனை நிலையங்கள் வழியே பரவலான பரிசோதனைக்கு அரசு முனைவது நல்ல முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

https://www.hindutamil.in/news/opinion/columns/548091-europe-waiting-for-angela-merkel.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற நாடுகளை விட ஜெர்மன் கொர்னோவை  கண்டு பயப்பிடுவது போல் இல்லையே மருந்து  இருக்குதோ ? அல்லது மக்கள் சொல்வழி கேட்க்கினமோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

மற்ற நாடுகளை விட ஜெர்மன் கொர்னோவை  கண்டு பயப்பிடுவது போல் இல்லையே மருந்து  இருக்குதோ ? அல்லது மக்கள் சொல்வழி கேட்க்கினமோ .

மக்கள் சொல்வழி கேட்கின்றார்கள். ஊடகங்கள் மக்களை பயமுறுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவுறுத்துகின்றார்கள். எல்லோரும் வைத்தியராக மாறி ஆலோசனைகள் சொல்லவில்லை. ஒரேயொரு மருத்தவ ஆய்வகம் மட்டும் தினசரி கோரோனா பற்றிய நாட்டு நிலவரங்களை அறிக்கையாக சொல்கின்றது. எனது குடும்ப வைத்தியரிடம் கொரோனா பற்றி விசாரித்தேன்.சிரித்து விட்டு  இது பற்றி ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம் எனவும் இருமினாலும் பயப்பிட வேண்டாம் எனவும் சொல்லி தனது கைத்தொலைபேசி இலக்கத்தை தந்துள்ளார்.
நானறிந்த வரையில் யாரும் கொரோனாவிற்கு பயப்பிட்டதாக தெரியவில்லை.
நானும் தினசரி 4மணித்தியாலங்கள் வேலைக்கு சென்றுதான் வருகின்றேன்.

இன்னுமொன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையை சென்ற கிழமை மூடிவிட்டார்கள்.நோயாளர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையாம்.இது உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மக்கள் சொல்வழி கேட்கின்றார்கள்.

எனக்கு வந்த டவுட்டுக்கு ஜெர்மனியில் இருக்கும் தெரிந்தவர்களிடம் போன் எடுத்து கேட்க்க நீங்கள்  உட்பட கிளிப்பிள்ளை சொல்வது போல் பதில் வருகிறது .பார்ப்பம் என்ன நடக்குது என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.