Jump to content

கரோனா வைரஸ் குறும்படம்: அமிதாப், ரஜினி ஒப்பந்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,577 ஆக உயர்ந் துள்ளது. இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். 275 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாகும்.

 

https://www.hindutamil.in/news/cinema/bollywood/548102-rajini-amitabh-acting-in-a-short-film-on-coronavirus.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா விழிப்புணர்வு : குறும்படத்தில் ஒரே குடும்பமாய் பல மொழி நடிகர்கள்

 

Family, Amithabhbachan, Rajinikanth, Mammootty, Mohanlal, Chiranjeevi, Ranbirkapoor, Priyankachopra, Aliabhatt,

 

மும்பை : கொரோனா நோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் குறும்படத்தில் நடித்துள்ளனர்.

சீனாவில் இருந்து புறப்பட்ட கொடிய வைரஸ் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு திரையுலகினரும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இந்நிலையில் சோனி இந்தியா நிறுவனம் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

'பேமிலி' என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படமாக எடுக்கப்பட்டுள்ள இதை பிரசூன் பாண்டே இயக்கி உள்ளார். அமிதாப் பச்சன், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், ரன்பீர் கபூர், தில்ஜித் தோஸ்னா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். சமூக விலகலை எப்படி கடைபிடிப்பது, வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என இவர்கள் சொல்கிறார்கள்.
 


latest tamil news


 



4.35 நிமிடம் ஓடும் அந்த குறும்படத்தின் ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் தன் கூலிங் கிளாஸ் கண்ணாடியை காணோம் என வீட்டில் இருப்பவர்களிடம் கேட்கிறார். அதற்கு மேலே கூறிய நடிகர்கள் ஒவ்வொருவரும் தேடுவது போன்றும், பதில் அளிப்பதும் மாதிரியாக உள்ளது. ஒவ்வொரு மொழி நடிகர்களும் அவர்களின் மொழியில் பேசுகிறார்கள்.
தமிழில் ரஜினிகாந்த் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு ஸ்டைலாக இந்த கண்ணாடியா என வீசுகிறார். 'இதெல்லாம் சீட்டிங்' நான் ஒன்று கேட்டால் நீங்கள் வேறு மொழியில் பேசிக்கொள்கிறீர்க்ள் என சலித்துக்கொள்கிறார். கடைசியில் அந்த கண்ணாடி ஆலியா பட் தலையில் தான் இருக்கிறது. கடைசியாக அமிதாப்பிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இப்போது எதற்கு இந்த கண்ணாடி என பிரியங்கா கேட்க, நான் வௌியில் போக போவது இல்லை, தொலைந்து போகாமல் இருக்க தேட சொன்னேன் என்கிறார் அமிதாப். ரன்பீர், தில்ஜித் போன்றவர்கள் தலையில் அடித்து கொள்வது போன்று முடிகிறது.

வீடியோவின் முடிவில் அமிதாப் பேசும்போது, இந்த வீடியோ ஒவ்வொரு நடிகர்களின் வீட்டில் தனித்தனியாக எடுக்கப்பட்டது. நாங்கள் யாரும் வீட்டை விட்டு வௌியில் வரவில்லை. நீங்களும் வீட்டிலேயே இருங்கள், அது தான் உங்களுக்கு பாதுகாப்பு. கொரோனா வைரஸிலிருந்து நம்மை காக்க இது தான் வழி, அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இந்த குறும்படம் எடுக்க இன்னொரு காரணமும் உள்ளது. இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம். இப்போது இந்த ஊரடங்கால் அவர்கள் வருமானமின்றி உள்ளனர். டிவி சேனல் மற்றும் பிற ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு உதவ உள்ளோம். யாரும் பயப்படாதீர்கள், பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.


 

 

 

 

 

 

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2516806

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.