Jump to content

144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

2020-04-06@ 10:05:50

TamilNews_Apr_2020__118541896343232.jpg

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 12 ஆயிரத்து 764 வழக்குகள் பதிவு செய்து, 13 ஆயிரத்து 974 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 923 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவி பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை மொத்தம் 71 ஆயிரத்து 204 வழக்குகள் பதிவு செய்து 78 ஆயிரத்து 707 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 59 ஆயிரத்து 868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 21 லட்சத்து 26 ஆயிரத்து 044 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577060

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.