Jump to content

பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..!

இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.

Ananthi-Sasitharan.jpg

இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது.

நோயாளர்கள் நாளுக்குநாள் புதிது புதிதாக இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடுப்புமருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத இச்சூழலில் இவ்வதிகரிப்பென்பது மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது இயல்பானதே.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைமிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாக நீண்டு செல்லும் ஊரடங்குச் சட்டம் மூலமாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக இருப்பதும் இந்நோய்த் தாக்கத்திற்கு ஓர் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் மக்களின் உணவுத் தேவைகளை அரசின் திட்டமிட்ட பொறிமுறைகள் மூலமாகவே பூர்த்திசெய்ய முடியும்.

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

மேலும் பொதுவெளியில் மக்களை சந்தித்து உதவுவது மேலும் நோய் பரவக் காரணமாக அமைந்துவிடும். ஊரடங்கு வேளையில் தன்னார்வலர்களும் உதவுவது சவாலானவிடயமே.

பொலிஸ் ஊரடங்கை இராணுவத்தினை வைத்து நடைமுறைப்படுத்தும் அரசும் அதன் திணைக்களங்களும் மாவட்ட உணவு சேமிப்பு தளத்திலிருந்தோ அல்லது வேறெங்கிருந்தோ உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். அரசின் பேரிடர் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உணவுவழங்கல் அமைச்சு,  என்பன துரிதமாக பணியில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் இன்று வரை இவர்கள் தமிழர் பிரதேசங்களில் மனித நேயப் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகையான ரூபா 10000 கூட சரிவர வழங்கப்படவில்லை. இதில் 5000 ரூபாவிற்கு உணவுப் பொருட்களும் 5000 ரூபா பணமாகவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் சமுர்த்திகடன் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இந்தகடன் இல்லை ன்பதுடன் ஏற்கனவே ரூபா 10000 சமுர்த்தி சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக பேசப்படுகிறது. பல சமுர்த்தி அலுவலர்கள் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஒருபிரதேசத்தில் 1500 ரூபா பொருட்கள் வழங்கப்படுகிறது. வேறோர் பிரதேசத்தில் 452 ரூபாபெறுமதியான 2.5கிலோ அரிசி  1.5கிலோ மா, 600 கிராம் சீனி என்பவையே வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் கட்டுப்பாட்டுவிலையை விட அதிகவிலைக்கே பெறுமதியிடப்பட்டுள்ளது. அதுவும் பொது இடங்களில் கூட்டமாக மக்களை வரவைத்தே வழங்கப்படுகிறது. மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ இதனைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேற்குநாடுகள் வீட்டிற்கு சென்று உணவுப்பொதிகளை வழங்குகிறது அத்துடன் மாதாந்த வருமானத்தில் குறிப்பிட்ட வீததொகையை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் இதேநிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்குபட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை அரிசி உற்பத்தி கூட போதியளவு இல்லை. வன்னிக்கான பாதைகள் பூட்டப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ள இச்சூழலில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்கள் பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இப்பிரதேசங்களை விசேட கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் சீனாவில் ஆரம்பித்தபின் விமல் வீரவன்சவின் மகளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதில் முனைப்புக்காட்டிய அரசு சீனர்களை இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல அனுமதித்தது. உலகளவில் வேகமாக இந்நோய் பரவியபோதும்கூட விமானப் போக்குவரத்தை உடனடியாக தடை செய்யத் தவறியது. உலக சூழல் இவ்வாறு இருக்கும்போது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு திகதி குறித்து வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்றது.

அவசர அவசரமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓர் சிவில் நிர்வாகம் ஊடாக இராணுவ கட்டமைப்பைக் கொண்டு ஆட்சியை நடாத்துகிறது அரசு. அத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டபின் வேட்ப்பாளர்கள் மக்களின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடமுடியாதென இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. இது யாழ் மாவட்டத்தில் மக்கள் மிகமோசமான பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

அமைச்சரவை இருந்தும் இது வரை கடும் ஊரடங்கில் சிக்குண்டு வீடுகளில் முடக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அரச உதவிகளும் சரிவர சென்றடையவில்லை. சிங்கள கட்சிவேட்பாளர்கள் தங்கள் கட்சி விளம்பரம் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பதாகைகளுடன் மக்களின் அத்தியாவசியப் பணி என்ற பெயரில் வாக்குவங்கி அரசியல் என்னும் ஈனச்செயலில் ஈடுபடுகின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் கூட ஈடுபடமுடியாமல் முடக்கப்படுகிறார்கள்.

மலையக மக்களைப் பொறுத்தவரை ஊரடங்கு வேளைகளிலும் வேலை செய்யுமாறு தோட்ட முதலாளிகளால் வற்புறுத்தப்படுகின்றார்கள். அரசின் எவ்வித உதவிகளும் அவர்களை சென்றடையவில்லை. முழு நாட்டிற்கும் ஜனாதிபதியாக உள்ளஒருவர் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலைக் குற்றம் புரிந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை விடுதலை செய்வதையும் சிங்கள தமிழ் வேறுபாட்டு மனநிலையில் உதவிகள் வழங்குவதையும் நிறுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா வைரசிலிருந்தும் பட்டிணிச் சாவிலிருந்தும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாகிய நாமும் அனாவசியமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் விழிப்போடிருந்து கொரோனாவை விரட்டுவோம் என்றுள்ளது.

 

https://www.virakesari.lk/article/79375

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

ஆம், அதை செய்வோம். எம் மண்ணையும் மக்களையும் காப்பற்றுவோம் !

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

ஒரு அரசியல் தலைவரையும் மக்கள் மத்தில இதுவரை காணக் கிடைக்கேல!
இந்த ஒரு பச்சைப் பொய்யை தவிர மற்றையவை நியாயமான கருத்தா தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

பாலித கிளிநொச்சிக்கு வந்து தமிழருக்கும் உதவி இருக்கிறார். முஸ்லிம்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். சண்டியர் ஆனால் நல்லவர். இவர் கேட்பவர்களுக்கே தமிழ் மக்களும் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://postimg.cc/rDB0G9xn

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்காய் புலம்பாமல் மக்களுக்கு ஏதாவது உருப்படியாய் செய்ய முயற்சிக்கலாமே அனந்தி அக்கா 
 

Link to comment
Share on other sites

On 6/4/2020 at 09:58, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

 

மாவை சேனாதிராசப்பெரும.. 😐

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 14:58, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

60 வயதுக்கு மேல உள்ள ஆட்களுக்கு மேலதானம்  கொரனோ  பரத நாட்டியம் ஆடுமாம்  நான் நினைச்சன் இதோட எங்கட சனத்துக்கு விடிவு வரும் எண்டு கிழட்டு கூட்டம் பதுங்கியிட்டுது .

என்கை மாட்டாமலா போயிடுவாங்க .

Link to comment
Share on other sites

மூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு! புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்!

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிதிக் கொடைகளைக் கொண்டு பெருந்தோட்டங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் கோரிக்கை முன்வைத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருப்பதற்காக தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக மக்களுக்கு வழங்கிவருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் தமிழர் பகுதிகளிலும் அதேபோல மலையக மக்களிடையேயும் அவை விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் நேற்றைய தினம் இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எந்தவொரு பேதமும் இன்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ அணியினருடன் நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்த நிவாரணமும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/140730

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

92475160-1623109634506856-44488111132822

பாவம் மலையக மக்கள் பைதான் பெரிசு உள்ள ஒன்றும் இல்லை இது எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கும் நீங்களே முடிவு பண்ணுங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

அரசியலுக்காய் புலம்பாமல் மக்களுக்கு ஏதாவது உருப்படியாய் செய்ய முயற்சிக்கலாமே அனந்தி அக்கா 
 

இப்படி எல்லாம் ஆசைப்படவும் ஒரு துனிவு வேணும் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

கொரோனா சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் நேற்றைய தினம் இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவாயில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு அள்ளி வீசி வாக்கு சேகரிக்கலாம். அவங்களுக்கு தேர்தல் காலத்துக்கு ஏற்றமாதிரி ஒவ்வொன்று வந்து பணமழை கொட்டும்.

Link to comment
Share on other sites

’பட்டினிச் சாவை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை’

வா.கிருஸ்ணா

அரசாங்கம், தேர்தலை மய்யப்படுத்தியச் செசயற்பாடுகளை முன்னெடுக்கின்றதேத் தவிர, கொரனா அச்சுறுத்தலால் ஏற்படும் பட்டினிச் சாவை தடுப்பதற்கானத் திட்டங்களை முன்னெடுப்பதாக இல்லை என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தை அமுல்படுத்திவிட்டே, ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மட்டு.ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக, அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்றும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம், பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது, சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சதொச மூலமாக, மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இருந்த சதோசவை டிவிட்டனர் என்றும் இருக்கும் சதோசவில், குறைந்த விலையில் பொருள்;களைக் கொள்வனவு செய்ய முடியாதயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். 

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.

தேர்தலை மய்யப்படுத்தியே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக தொழிலை இழந்த மக்களுக்கான மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை என்றும் சாடினார்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பட்டினிச்-சாவை-தடுப்பதற்கு-அரசாங்கத்திடம்-திட்டங்கள்-இல்லை/73-248160

Link to comment
Share on other sites

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்கசோல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தினால் நிவாரண பொதிகள், இன்று(8) வழங்கி வைக்கப்பட்டன. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக,  பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனியும, இணைந்து 3,000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்கள் அடங்கிய பொதியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

குறித்த பொதியில்,  வெங்காயம், சீனி, உருளைக் கிழங்கு, நெத்திலி, அரிசி, கோதுமை மா ஆகிய அத்தியாவசிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

image_00501b26e4.jpg

http://www.tamilmirror.lk/மலையகம்/தொழிலாளர்களுக்கு-நிவாரணம்-வழங்கி-வைப்பு/76-248189

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.