Jump to content

கிருமியும்,கிராமத்தின் கவலையும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருமியும்,கிராமத்தின் கவலையும்..!

 

வண்டில் மாடும்,ஏரால்

தீட்டும் வர்ணமும்

பனையும்,தென்னையும்

வாய்க்கால்,வரம்பும்

 

கோயில்,குளமும்

ஆடும்,மாடும்

மூலிகைச்செடிகளும்

தோட்டமும்,துரவும்.

முன்னோர் வாழ்வின்

முதுசங்கள் இவைகள்

 

என்மேல் அவர்களின் 

இருப்பும்,பாசமும்

உங்களுக்கேனோ

இல்லாமல் போனது.

 

பட்டணம்,நகரமென

படையெடுத்து போயிருந்து

பழயவள் எனச்சொல்லி

பழித்தீர்கள் என்னையும்.

 

கிராமத்தான் என்று

கேலிபண்ணுவார்களென

நகரத்து பெயர்களையே

நாகூசாமல் சொன்னீர்கள்

 

 

பக்கத்து வீட்டானின்

பகட்டு வாழ்வைநம்பி

காரும்,வீடும் கடன் பட்டே

வாங்கினீர்கள்.

 

கோவணம் கட்ட

துணியில்லையென்றாலும்

கோடீஸ்வரனாக 

காட்ட முனைந்தீர்கள்.

 

விஞ்ஞானம் உயர்ந்து

விண்ணை முட்டி 

விட்டதென்று..

பழய சோறும்

பழம்கஞ்சியும்

பனாட்டும்,ஒடியலும்

கூழும்,குரக்கனும்

ஏழை உணவென..

 

உண்ணப்பிடிக்காமல்

உலகத்தான் உணவுகளை

தின்னப் பழகி..

திடம் கெட்டுப் போனீர்கள்.

 

செத்து மணத்தாலும்

செய்தி.. 

சொன்னால்த்தான்

பக்கத்து வீட்டானும்

பார்க்க வரும் நகரத்துள்

சொர்கத்தில் வாழ்வதாக..

சொல்லித்திரிந்தீர்கள்.

 

எனை விட்டுப் பிரிந்தாலும்

உலகில்..

எங்கெங்கு வாழ்ந்தாலும்

மகிழ்விருந்தால்

உன்வாழ்வில்.. 

மகிழ்ச்சியே எந்தனுக்கும்.

 

விதை போட்டான்செய்ததுவோ

விஞ்ஞானம் செய்ததுவோ

உயிருக்குள் நுண் கிருமி

கொரோனா

உள் நுளைந்து அறுக்கிறதே!

 

தொற்றுகின்றவைரஸ்சோ

தோல் நிறம் பார்க்கவில்லை

இனம் மதம் கேட்கவில்லை

எவன் ஜாதி தெரியவில்லை.

 

படுத்தெழும்ப நேரமில்லா

பரபரப்பு நகரமெல்லாம்

ஆடைத்துணியின்றி-இப்போ

அம்மணமாய்க் கிடக்கிறதே!

 

என்னைவிட்டு வந்த பலன்

இப்போது தெரிகிறதா?

 

அருமருந்து உணவில்லை

அனைவருக்கும் நீர் இல்லை

அசுத்தமில்லாக் காற்றில்லை 

அகம் நிறைந்த அன்பில்லை

 

மனிதம் உங்களிடம்

மரணித்துப் போகாமல்

மனதால் ஒன்றுபட்டு

மரணத்தை வெல்லுங்கள்

 

என்னை மறக்காமல்.

எனைத்தேடி வாருங்கள்

நோய்நொடி இல்லாமல்

முன்னோர்போல்….

நூறாண்டு வாழ்வீர்கள்.

 

அன்புடன்-பசுவூர்க்கோபி-

ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதை பசுவூர்க்கோப்பி, தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக.......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கருத்தான கவிதை பசுவூர்க்கோப்பி, தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக.......!  🌹

உங்களின் ஆதரவுக்கு அன்புடன் நன்றிகள்

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் போலித்தனங்களுக்கு அடிமையானவர்களுக்கு உறைக்கும் விதமாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

வாழ்க்கையில் போலித்தனங்களுக்கு அடிமையானவர்களுக்கு உறைக்கும் விதமாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

உங்கள் ஆதரவு மென்மேலும் எனக்கு எழுத உற்சாகமூட்டுகிறது. நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கவிதை பாராட்டுக்கள்  மேலும் தொடருங்கள்

இடை வெளிகளைக்  கொஞ்சம் குறைக்க பாருங்கள் நீளம்  என  கவனிக்காமல் போக கூ டும்

 

தொற்றுகின்ற“வைரஸ்சோ”தோல் நிறம் பார்க்கவில்லை

இனம் மதம் கேட்கவில்லை எவன் ஜாதி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, ஊர் தேடி வர ஆசைதான், இனி ஊர் போயும் எம்மால் ஒத்து வாழ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 19:32, ஈழப்பிரியன் said:

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 10:56, பசுவூர்க்கோபி said:

நோய்நொடி இல்லாமல்

முன்னோர்போல்….

நூறாண்டு வாழ்வீர்கள்.

 

கவிதை நன்று. ஆனால் முன்னோர் எல்லோரும் நூறாண்டு வாழவில்லை.  அப்படி வாழ்ந்தவர்கள் திடகாத்திரமாக இருந்தவர்கள் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 21:27, கிருபன் said:

 

கவிதை நன்று. ஆனால் முன்னோர் எல்லோரும் நூறாண்டு வாழவில்லை.  அப்படி வாழ்ந்தவர்கள் திடகாத்திரமாக இருந்தவர்கள் மட்டும்தான்.

உங்களின்ஆரோக்கியமான  கருத்துக்கு நன்றிகள் 

On 6/4/2020 at 19:32, ஈழப்பிரியன் said:

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.