Jump to content

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...

போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். 

அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து,  மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார்.

கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை...

முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்....

சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல.

மேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்...  ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள்.   

ஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்...

ஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும்...

இவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்... 

அவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்...

சதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்..

பல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா?

இதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்....

வேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி...

அவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள்.

இல்லாவிடில் முதலுக்கு மோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

நாட்டுப்புற இனங்களைவிட வெளிநாட்டு இனங்களுக்குத்தான் இந்த வகையான பாதிப்புகள் அதிகம்.

மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தொட்டிருக்கும் நாதமுனிக்கு நன்றியும் பாராட்டுக்களும். 

வட புலத்தில் காளான் வளர்ப்பை ஆரம்பிக்க ஆலோசனைகள் தேவை. தெரிந்தவர்கள், விரும்பியவர்கள் ஆலோசனையை தெரிவிக்கலாம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

 

35 minutes ago, உடையார் said:

நல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்து வருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 

Link to comment
Share on other sites

இந்தியாவில் யுரியுப்பில் பணம் சம்பாதிக்கும் போட்டி மோசமான நிலையை  ஏற்படுத்துகின்றது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று  கவர்ச்சிகரமான தலைப்புகளை போட்டு வெளியிடும் காரணொளிகளால் பலர் நஷ்டமடைகின்றார்கள்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

 

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்துவருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 

நீங்கள் கூறியதும் சரிதான். உண்மையில் ஆரம்பத்தில் இவ்வாறுதான் நானும்  எண்ணியிருந்தேன். 

கடந்த வருடம் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் , மூன்று மாவீரர்களின் வயதான பெற்றோர் இருவருக்கு என்னால் ஜமுனா பாறி ஆடுகள்  வழங்கியபோது, அங்கு எனக்கு உதவிய அலுவலரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய ஆட்டுக் கொட்டகையும் அமைத்துக் கொடுத்திருந்தேன். அவர் கூறிய காரணம் தான் ஈரலிப்பும் அதனால் ஏற்படும்  ஆடுகளின் இறப்பும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

அப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன்.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

நல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

 

 

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

ஆகா செம ஜடியா நாதம்..  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

லோக்கல் கரண்சி, எப்படியும் பணவீக்கத்தில அடிவாங்கும். வெளிநாட்டு நாணயத்துக்கு ஆபத்து இராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் விபரமான வீடியோ.

மிகவும் யதார்த்தமான ஆலோசனைகளையும் பேச்சும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்திர ஓணாட்டி நீங்கள் எழுதியைதை & உங்கள் நீண்ட கால திட்டங்களை வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு. என் கனவில் இது ஒன்று, இங்கு நல்ல இடமிருக்கு பண்ணை வைக்க, கொஞ்ச காலம் காத்திருக்குறேன் சந்தப்பர்த்திற்கு, பார்ப்பம் காலத்தின் பதிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

 

Border Collie Breeds

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

மிகவும் பயனுள்ள இணைப்பு. நாதஸ்துக்கு நன்றி.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-1913 ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

நன்றி சுவியர்.டங்கு ச்சா பிங்கர் சிப்பாயிடுச்சு.😂😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதையும் கேளுங்கள். கால் ஏக்கர் நிலத்தில் தன்னிறைவான விவசாயம்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 14:48, உடையார் said:

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

 

Border Collie Breeds

உடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள்.

நீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்..

குட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்..

அது ஒரு கனாக்க்காலம்..

உங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.

அவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள்.  காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.

கடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.

வவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.

அவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள்.  காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.

கடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.

வவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.

 

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 06:43, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

யோவ் ஓணாண் நெஞ்சை நக்கீட்டீங்க.போங்க சார்.

முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்.

23 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

ஆட்டிலிருந்து கோழிக்கு மாறுவதற்கான காரணத்தை கொஞ்சம் விலவாரியா எழுத ஏலுமே ? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.