Jump to content

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...

போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். 

அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து,  மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார்.

கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை...

முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்....

சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல.

மேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்...  ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள்.   

ஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்...

ஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும்...

இவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்... 

அவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்...

சதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்..

பல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா?

இதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்....

வேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி...

அவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள்.

இல்லாவிடில் முதலுக்கு மோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

நாட்டுப்புற இனங்களைவிட வெளிநாட்டு இனங்களுக்குத்தான் இந்த வகையான பாதிப்புகள் அதிகம்.

மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தொட்டிருக்கும் நாதமுனிக்கு நன்றியும் பாராட்டுக்களும். 

வட புலத்தில் காளான் வளர்ப்பை ஆரம்பிக்க ஆலோசனைகள் தேவை. தெரிந்தவர்கள், விரும்பியவர்கள் ஆலோசனையை தெரிவிக்கலாம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

 

35 minutes ago, உடையார் said:

நல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்து வருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 

Link to comment
Share on other sites

இந்தியாவில் யுரியுப்பில் பணம் சம்பாதிக்கும் போட்டி மோசமான நிலையை  ஏற்படுத்துகின்றது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று  கவர்ச்சிகரமான தலைப்புகளை போட்டு வெளியிடும் காரணொளிகளால் பலர் நஷ்டமடைகின்றார்கள்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

 

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்துவருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 

நீங்கள் கூறியதும் சரிதான். உண்மையில் ஆரம்பத்தில் இவ்வாறுதான் நானும்  எண்ணியிருந்தேன். 

கடந்த வருடம் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் , மூன்று மாவீரர்களின் வயதான பெற்றோர் இருவருக்கு என்னால் ஜமுனா பாறி ஆடுகள்  வழங்கியபோது, அங்கு எனக்கு உதவிய அலுவலரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய ஆட்டுக் கொட்டகையும் அமைத்துக் கொடுத்திருந்தேன். அவர் கூறிய காரணம் தான் ஈரலிப்பும் அதனால் ஏற்படும்  ஆடுகளின் இறப்பும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

அப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன்.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

நல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

 

 

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

ஆகா செம ஜடியா நாதம்..  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

லோக்கல் கரண்சி, எப்படியும் பணவீக்கத்தில அடிவாங்கும். வெளிநாட்டு நாணயத்துக்கு ஆபத்து இராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் விபரமான வீடியோ.

மிகவும் யதார்த்தமான ஆலோசனைகளையும் பேச்சும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்திர ஓணாட்டி நீங்கள் எழுதியைதை & உங்கள் நீண்ட கால திட்டங்களை வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு. என் கனவில் இது ஒன்று, இங்கு நல்ல இடமிருக்கு பண்ணை வைக்க, கொஞ்ச காலம் காத்திருக்குறேன் சந்தப்பர்த்திற்கு, பார்ப்பம் காலத்தின் பதிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

 

Border Collie Breeds

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

மிகவும் பயனுள்ள இணைப்பு. நாதஸ்துக்கு நன்றி.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-1913 ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

நன்றி சுவியர்.டங்கு ச்சா பிங்கர் சிப்பாயிடுச்சு.😂😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதையும் கேளுங்கள். கால் ஏக்கர் நிலத்தில் தன்னிறைவான விவசாயம்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 14:48, உடையார் said:

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

 

Border Collie Breeds

உடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள்.

நீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்..

குட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்..

அது ஒரு கனாக்க்காலம்..

உங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.

அவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள்.  காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.

கடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.

வவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.

அவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள்.  காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.

கடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.

வவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.

 

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 06:43, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

யோவ் ஓணாண் நெஞ்சை நக்கீட்டீங்க.போங்க சார்.

முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்.

23 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

ஆட்டிலிருந்து கோழிக்கு மாறுவதற்கான காரணத்தை கொஞ்சம் விலவாரியா எழுத ஏலுமே ? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.