Jump to content

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகலாம்தானே! மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் பின்னுக்கு வருபவருக்காக கதவுகளைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்கவும், வரிசையில் நிற்கவும், வணக்கம், நன்றி சொல்லவும் பழகினார்கள்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகலாம்தானே! மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் பின்னுக்கு வருபவருக்காக கதவுகளைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்கவும், வரிசையில் நிற்கவும், வணக்கம், நன்றி சொல்லவும் பழகினார்கள்தானே!

நாங்கள் வேற்று இனத்தவருக்கு , குறிப்பாக வெள்ளை இனத்தவருக்கு தவறாமல் ஹாய் சொல்லவும் தாங்ஸ் சொல்லவும் தவறியதில்லை. ஆனால் தோலில் (வெள்ளை) நிறத்தின் அளவு குறையக் குறைய எமது நன்றி சொல்லும் அளவும் ஹாய் சொல்லும் அளவும் குறைந்து கொண்டே செல்லும். ☹️

இதை இன்னொரு விதமாகவும் கூறலாம். வட அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து (குளிர் / துருவ கால நிலை) மத்திய கோட்டு வெப்ப வலயத்திற்கு கீழிறங்கும்போது, குறிப்பாக இலங்கையை அண்டிய மத்திய கோட்டிற்கு வரும்போது நன்றி, ஹாய் சொல்லுதலின் அளவும் குறைந்து ஏறக் குறைய  பூச்சியம் என்கின்ற அளவிற்குச் செல்லும். 😂

ஹாய்க்கும்  நன்றிக்கும்  கால நிலையுடன் தொடர்பு ஏதும் இருக்குதோ தெரியாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்கம் சற்குணராஜா வெல்கம் 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் சுவிஸ் போதகர் வந்திருக்கிறன்..!! நீ ஆண்டவரின் வலது கரம் இல்லையா ... வெளிய வா அற்புதம் ... சர்ச்சுக்கு நேரமாச்சு..

நோ..வரமாட்டேன்.. மறுபடியும் என்னால முள்ளுப்பத்தேக்க ஒளிச்சிருக்க முடியாது..

spacer.png

 

Link to comment
Share on other sites

விமான நிலையத்தில் பொய் கூறி ஸ்ரீலங்காவிற்குள் நுழைந்த சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணா்வு வேண்டும்.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவா் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளாா்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடா்பாக ஊடகங்களை சந்தித்து கருத்துகூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சுவிஸ் போதகருடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் 1ம் கட்ட பாிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றது. எனினும் 1ம் கட்ட பாிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதே அடையாளம் காணப்படும்.

ஆகவே 2ம், 3ம் கட்ட பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தொற்றுள்ளவா்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன், தொடா்ந்து ஊரடங்கு சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேணப்படுவதன் ஊடாக யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும்.

இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். மேலும் மாவட்டத்தில் தொற்று இல்லாமையினை தொடா்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் உள் நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு.

அந்த பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், காய்ச்சல் மற்றும் தொற்று தொடா்பான ஆரம்ப பாிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னா் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவா்கள் நோ்மையாக தங்களுக்கு தொற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும்.

குறிப்பாக சுவிஸ் போதகா் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து ஒரு பொய்யை கூறியதால் 7 போ் நோய்வாய்ப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட உதவவேண்டும் என்றாா்.

https://www.ibctamil.com/srilanka/80/140965?ref=rightsidebar

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.